நம்முடைய நற்பண்புகளுக்கும் , நம்முடைய
அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம்
அடையும் மகிழ்ச்சி இருக்கும் .
அரிஸ்டாட்டில் (Aristotle ) கி . மு .384 இல் பிறந்தார் . இவர் பண்டைய உலகின் தத்துவஞானி , விஞ்ஞானி மற்றும் பல்துறை வல்லுநர் ஆவார் . இவர் 170 புத்தகங்களுக்குமேல் எழுதிக் குவித்த ஒரு சிறந்த எழுத்தாளர் . அரிஸ்டாட்டில் என்றால் சிறந்த நோக்கம் என்று பொருள் . அவருடைய நூல்கள் அவர் காலத்தில் அறிவியல் செய்திகள் அடங்கிய கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தன . வானவியல் , விலங்கியல் , கருவியல் , புவியியல் , இயற்பியல் , உடலியல் ஆகியவை குறித்தும் , பண்டைய கிரேக்கர்கள் அறிந்திருந்த அறிவுத்துறைகள் அனைத்தையும் பற்றி இவர் எழுதியிருந்தார் . அத்துடன் கவிதை , நாடகம் , இசை , தர்க்கம் , சொல்லாட்சி , மொழியியல் , அரசியல் , ஒழுக்கவியல் ஆகியவையும் இவரின் எழுத்துகளில் இடம் பெற்றிருந்தன .
பூமி உருண்டை வடிவமானது என்பதை தனது ஆய்வின் மூலம் கூறியவர் அரிஸ்டாட்டில் . விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை 19 ஆம் நூற்றாண்டில் சில அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர் . அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி 19 ஆம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன . மாவீரன் அலெக்சாண்டர் அவர்கள் அரிஸ்டாட்டிலின் மாணவராவார் . அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரில் உலாப் பள்ளியை நிறுவினார் .
|