|
||||||||
நமது நாகரிகம் |
||||||||
ஒருத்தர் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகட்ட ஆசைப்பட்டு ஒரு நிறுவனத்தில் கடன் பெற்று வீடுகட்டினார் . திடீரென ஒருநாள் வீடு சுவர் விரிந்து மேல் கூரையும பிளந்து விரிசல் ஏற்பட்டு விட்டது . வீடு கட்டியவர் கோபத்துடன் நிறுவன அதிகாரியிடம் வந்து கத்தினார் . “ வீடு பிளந்து இரண்டு வீடா ஆயிட்டது சார் ” என்று அழாக்குறையாகப் புலம்பினார் . “ கோபப்படாதீங்க . விளக்கமா பேப்பர்லே எழுதிக்கொடுத்துட்டுப்போங்க . ஒரே வாரத்துலே ஆக்ஷன் எடுக்கிறோம் ” என்றார் அதிகாரி . சில நாட்கள் கழித்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது . பதில் , “ வணக்கம் . எங்களிடம் 2.5 லட்சத்தில் ஒரு வீடு வாங்கி மாதம் 2000 கட்டி வருகிறீர்கள் . அது வெடித்து இரண்டு வீடாக ஆகி விட்டதாக எழுதியுள்ளீர்கள் . மகிழ்ச்சி . இந்த மாதம் முதல் இரண்டு வீட்டுக்கும் சேர்த்து மாதம் நாலாயிரம் கட்ட வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் ” இதைப் படித்த வீட்டுக்காரர் மயங்கி விழுந்தார் . வீடு கட்டுவதில் திட்டமிடாவிட்டால் சிக்கல் வரும் . அதே போல நகரத்தைத் திட்டமிடுவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் . சென்னை நகரம் திட்டமில்லாமல் வளர்ந்த நகரமாகும் . முதலில் வந்த போர்ச்சுகீசியர்கள் சாந்தோம் என்ற சிற்றூரை அமைத்தனர் . பின் ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையை கட்டி அதனுள் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொண்டு தங்களின்சேவை புரிவோருக்கான தங்குமிடங்களையும் உருவாக்கினார் . ஆனால் 1640 இல் செயிண்ட ஜார்ஜ் கோட்டை அமைக்கப்படுவதற்கு முன்பே மயிலாப்பூர் , திருஅல்லிக்கேணி , திருவான்மியூர் , சேத்துப்பட்டு , திருஒற்றியூர்போன்ற அழகிய சிற்றூர்கள் பழமையோடு விளங்கி வந்தன . சென்னையில் மக்கட் பெருக்கமும் வளர்ந்தது . 1940 ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 7 லட்சம் . காமராசர் ஆட்சி ஏற்ற பிறகு அது மும்மடங்காக உயர்ந்தது . நகர அபிவிருத்திக் கழகம் ஏற்பட்டு (C.I.T.) புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றின . சென்னை நகரின் புறநகர்ப் பகுதியில் மேலைநாட்டுப் பாணியில் குட்டி நகரங்களை அமைக்க நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் திட்டமிட்டனர் . இதற்காக மேல் நாடு சென்று ஆய்வு செய்ய கூடிப்பேசினர் . துறை சார்ந்த அமைச்சரையும் நேரில் சந்தித்துக்கோப்பில் ஒப்புதல் பெற்றனர் . இனி முதலமைச்சர் ஒப்புதல் பெறுவது தான் பாக்கி . அதுவும் கிடைத்து விட்டால் அரசுப் பணத்தில் விமானத்தில் வெளிநாட்டுக்குப் பறக்கலாம் . காமராசர் 1954 ஏப்ரல் 13 ஆம் நாள் பதவியேற்ற போது “ ஹிந்து ” நாளிதழ் காமராசரின் பரந்த கட்சி அனுபவத்தைப் புகழ்ந்து எழுதியதே தவிர , அரசை நடத்தும் விவசாகரத்தில் ராஜாஜியின் ஆற்றலை இவரிடம் எதிர்பார்க்க முடியாது என்பது போல எழுதியிருந்தது . லண்டனிலே படித்த ஐ . சி . எஸ்உயர் அதிகாரிகள்தான் மேனாட்டுப் பயணத்துக்கான கோப்பைக் காமராசரிடம் பரிந்துரைத்தார்கள் . எல்லாரும் அவர் அதில் கையெழுத்திட்டு விடுவார் என்றே நம்பினார்கள் . கோப்பைப் படித்த தலைவர் சிந்தித்தார் . திட்டமிட்டு அமைக்கபட்ட ஊர் நம் நாட்டில் இல்லையா ? மேல நாட்டுக்காரனா நமக்கு இதில் வழி காட்டுவது ? அதிகாரிகள்சென்று பார்த்துவரக் கூடிய இடங்கள் நம் பண்பாட்டுக்கு ஒத்து வரக்கூடியதுதானா மக்கள் வரிப்பணத்தில் இந்த மேனாட்டுப் பயணம் தேவையா ? என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது . அப்போது அவர் மனத்தில மதுரை மாநகர் தோன்றியது . ஊரின் மையத்தில் மீனாட்சி அம்மன்கோவில் சுற்றி ரத வீதிகள் , அடுத்த சுற்றில் அளவெடுத்தது போல மாட வீதிகள் , அதற்கடுத்த ஆவணி வீதிகள் , இடையில் இவற்றை இணைக்கும் சாலைகள் , அந்தக் காலத்திலேயே தொலை நோக்கோடு நகரை அமைத்திருக்கிறார்கள் . இதற்கு மேல் திட்டமிட என்ன இருக்கிறது எனச் சிந்தித்தவர் , “ இதற்காக மேனாட்டுப் பயணம்தேவையில்லை . எக்காலத்திற்கும் ஏற்ற மதுரை நகரைக் கண்டு ஆய்வுசய்து வாருங்கள் .” என்று கோப்பில் குறிப்பெழுதிக் கையெழுத்திட்டார் . இப்படி எந்த விஷயத்திலும் சிந்தித்துச் செயலாற்றக் கூடிய வல்லமை பெருந்தலைவருக்கு உண்டு . |
||||||||
by Swathi on 03 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|