LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

நாட்டை நேசித்த நல்லவர்

நாட்டுப்பற்று ஒன்றையே மூச்சாக நினைத்து வாழ்ந்தவர் பெருந்தலைவர் . நாட்டையே வீடாக்கி வாழ்ந்தவர் அவர் ; தாயைக் காட்டிலும் தாய் நாட்டின் மீது பாசம் வைத்தவர் . அவரது அன்னையார் தனது மகனைப் பற்றிப் புலம்பிய புலம்பல் நம் மனதை உருக வைக்கும் . அவன் நாட்டுக்காக உழைக்கிறது எனக்கு சந்தோஷம்தான் . ஊருக்கு ராஜான்னாலும் தாய்க்குப் பிள்ளைதானே . ஆனா இங்க வந்தா ஒரு நிமிஷம்தான் நிற்பான் . வீட்டுக்குள்ளே வரும்போதே என்னம்மா சவுக்கியமாம்னான் . அப்படிக்கேட்டுக்கிட்டே உள்ள வருவானா . வந்த சுவட்டோட தெருப்பக்கமா திரும்பி நான் வர்றேம்மான்னு புறப்பட்டு விடுவான் . ஆற அமர அம்மா கூட பேசக்கூட அவனுக்கு நேரமில்ல . அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடனும்னு எவ்வளவோ ஆசைப்பட்டேன் . கடைசி வரைக்கும் அந்த ஆசை நிறைவேறல .

தன்னையும் தன் குடும்பத்தாரையும் நினையாது நாட்டுக்கென்றே தன்னை அர்ப்பணித்தவர் அவர் . அவரது பிறந்த நாள் விழாவில் பாடப்பட்ட கவிதை ஒன்றை இங்கே குறிப்பிடலாம் .

காங்கிரசை ஏற்றார்

ராட்டையிலே நூற்றார்

அன்னையாரைப் பேணவில்லை

அன்புத் தங்கை பார்க்கவில்லை

என்னுயிரே மக்களென்று வாழ்ந்து விட்டார்

பாரத நாட்டின் மிக உயர்ந்த பட்டமான பாரத ரத்னா பட்டம் பெற்றவர் காமராசர் . விருதுபட்டியில் ஒரு வியாபாரியின் மகனாகப் பிறந்தவர் நிகழ்த்திய சாதனை இது . இதற்குக் காரணம் அவருடைய நாட்டுப் பற்றே .

பால் புளிப்பினும்

பகல் இருளினும்

நால்வகை வேத

நெறி மாறினும்

தான் திரியாச்சுற்றம்

கொள்கைப் பிடிப்பாளர் பற்றிப் புறநானூறு கூறும் படப்பிடிப்பு இது . இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.