|
||||||||
இறை பக்தி |
||||||||
எல்லாவற்றையும் கடந்து நிற்கும் கடவுள் பக்தி மனிதருக்கு அவசியம் . ஆனா எந்த இடத்திலேயும மனதாரக் கும்பிட்டாப் போதும் என்ற எண்ணம் வேண்டும் . தலைவர் காமராசருக்கு இறைபக்தி உண்டு . ஆனால் அதனைப் புறச்சின்னங்கள் மூலமாகவோ , ஆரவாரக்கோவில் தரிசனங்கள் மூலமோ அவர்வெளிப்படுத்தியது இல்லை . தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேச உரிமைக்காக கேரளத்தில்பெரியார் நடத்திய சத்தியாக்கிரகத்தில் “ வைக்கம் ” என்ற இடத்தில் கலந்து கொண்டார் . 1939 இல் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் திரு . வைத்தியநாதய்யர் அழைத்துச் சென்றபோது பெருந்தலைவரும் , திரு . சத்தியமூர்த்தி அவர்களும் உடன் சென்றனர் . ஒருமுறை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர் , “ இந்த நாட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வு உயர்த்தப்பட வேண்டும் . உணவு , உடை , வீடு , வேலை வாய்ப்பு , அனைவருக்கும் தரப்பட வேண்டும் . அதை நிறைவேற்றும் வரை ஓய மாட்டேன் . கடவுளே இதை எதிர்த்துக் குறுக்கே வந்தாலும் , “ சற்றே எட்டி நில்லுங்கள் என்று கூறுவேன் ” என்று உணர்ச்சி வசப்பட்டுப்பேசினார் . இறைபக்தியை விட மக்கள் உரிமையே பெரிது என்று காமராசர் கருதினார் . தமிழ்நாட்டு ஆலயங்கள் மற்ற மாநில ஆலயங்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல . இராமேஸ்வரம் கோவில் , மீனாட்சியம்மன்கோவில் , ஸ்ரீரங்கம் கோவில் , பழனி முருகன்கோவில் , சிதம்பரம்கோவில் போன்றவை நாயன்மார்களாலும் , ஆழ்வார்களாலும் பாடப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்கவை . ஆனால் தமிழக மக்களுக்குத் தம் கோவில் பெருமை தெரிவதில்லை . சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் திருமலை வெங்கடேசப்பெருமாளுக்கும் தருகின்ற மரியாதையை நம் தமிழகத் தெய்வங்களுக்குத் தருவதில்லை . இந்த பக்தி விஷயம் பொருளாதார ரீதியாகவும் , தமிழகத்தைப் பாதித்து வருவதாகும் . திருப்பதி உண்டியலின் ஓராண்டு வருமானம் ரூ .235 கோடி . அதே நேரம் அதிக வருவாய் தரும் தமிழகக் கோவிலான பழனி உண்டியல் வருவாய் ரூ .20 கோடி மட்டும் தான் . காமராசர் காலத்திலும் இந்த நிலை இருந்தது . திருப்பதி வருமானத்தில் நூற்றில் ஒரு பங்கே திருவரங்கத்துக்குக் கிடைத்தது . இதை நினைத்து ஆதங்கப்பட்ட தலைவர் “ தமிழ்நாட்டுப் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மிக அதிக அளவில் திருப்பதி கோவில் உண்டியலில் செலுத்துகிறார்கள் . நம் நாட்டு ஸ்ரீரங்கம் , திருப்பதிக்கு எந்த விதத்திலும் குறைந்தது கிடையாது . உங்கள் காணிக்கைகளை ஸ்ரீரெங்கநாதர் உண்டியலில் போட்டால் அது நம்ப நாட்டுக்குப் பெரிய பயனாக இருக்கும் . மக்களுக்குச்செய்ய வேண்டிய நல்ல காரியங்களுக்குப் பயன்படுமே “ நம்ம சாமியும் பெரிய சாமிதான் ” என்பதே தலைவரின் வேண்டுகோளாக இருந்தது . ஆனால் இந்த நியாயமான வேண்டுகோள் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டே வருகிறது . இப்போது ஆந்திர திருப்பதிக்கு அடுத்தபடியாகக் கேரள சபரிமலைக்குக் கொண்டுபோய் காணிக்கைகளைக் குவிக்கிறார்கள் . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|