|
||||||||
பணமூட்டை புகை மூட்டமானது ! |
||||||||
சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா?
உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!
ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!
மக்கள் அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் பணமூட்டைகளின் கொட்டம் அடக்கும் புகைமூட்டக் கண்ணாமூச்சுகள் காற்றாய்ப் பறந்து போகும்!
இயற்கைதனை அழிப்போர் இறைவனின் எதிரியென்போம் படைத்தவன் நமக்களித்த வாழ்வுதனைத் தட்டிப்பறிக்கும் அரக்கனை அழிப்போம் பணத்துக்குச் சோரம் போகும் கொடியோரின் கருவறுப்போம் தலைமுறையும் துளிர்க்காமல் காவல் காப்போம்! செயற்கைப் பேரிடர் நந்தவனப் பயிர்களும் உயிர்களும் அற்ப ஆயுளை முத்தமிடல் கொடுமையின் உச்சம்!
இறைவனின் அருட்கொடை மனிதன் இயற்கையை நேசிப்பதும் சுவாசிப்பதும் காப்பதும் வாழ்த்துவதும் உரிமையும் பெற்றவன்!
இயற்கையைக் காக்க உள்ளத்தையும் உயிரையும் அள்ளித்தருவோம் மடமையில் எதிர்போரைக் கிள்ளி எறிவோம் அடுத்த தலைமுறைக்கு இயற்கையை விட்டுவைப்போம் செழிப்பாய் அதுவரையில் உயிராய்க் காத்து நிற்போம்! |
||||||||
by Swathi on 08 Jul 2013 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|