|
||||||||
மங்கை கனவு! - இல.பிரகாசம் |
||||||||
விடியல் பொழுது
குறிஞ்சி மலர்களின் வாடை காற்றில்
களிறும் பிடியும் தனிமையில் கூடும் வேளை
மயக்கம் கொண்ட மைவிழிகள் விழித்தன
நாணம் எனும் ஆடை இடையே
நங்கையின் மயங்கிசை புன்னகை
கடுந்தோளினை யுடைய மதகளிறு அவன்
பற்குறியினால் அவள் அங்கம் எல்லாம்
புன்னகையால் சிவந்திருந்தன
கமுகு கூந்தல்களின் சலசலப்புக் காற்று
கனியுடைந்த கோவை யிதழ்களினூடே
வருடிச் செல்கின்றன!
பிணைப்பில் இணைந்த களிறுகளின்
களியாட்டம் முடிந்தன!
இவள் கண்ட கனவு
இன்னும் தெளிவாகவில்லை!
- இல.பிரகாசம்
விடியல் பொழுது குறிஞ்சி மலர்களின் வாடை காற்றில் களிறும் பிடியும் தனிமையில் கூடும் வேளை மயக்கம் கொண்ட மைவிழிகள் விழித்தன நாணம் எனும் ஆடை இடையே நங்கையின் மயங்கிசை புன்னகை கடுந்தோளினை யுடைய மதகளிறு அவன் பற்குறியினால் அவள் அங்கம் எல்லாம் புன்னகையால் சிவந்திருந்தன கமுகு கூந்தல்களின் சலசலப்புக் காற்று கனியுடைந்த கோவை யிதழ்களினூடே வருடிச் செல்கின்றன! பிணைப்பில் இணைந்த களிறுகளின் களியாட்டம் முடிந்தன! இவள் கண்ட கனவு இன்னும் தெளிவாகவில்லை!
- இல.பிரகாசம்
|
||||||||
by Swathi on 02 Sep 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|