|
||||||||
எகர வருக்கம் |
||||||||
என்றூழ் எனும்பெயர் இரவியும் வெயிலும்
கோடைக் காலமும் கூறப்பெறுமே. ....291
எல்லெனும் பெயரே யிரவியும் ஒளியும்
இருளு மிகழ்ச்சியும் இயம்புவர் பெரியோர். ....292
எலியெனும் பெயரே யெலியின் விகற்பமும்
பூர நாளொடு மதுவும் புகலுவர். ....293
எருவை யெனும் பெயர் கொறுக்கையுடனே
கழுகுந் தாம்பிரப் பெயரும் கருதுவர். ....294
எறுழெனும் பெயரே தண்டா யுதமும்
பெலமு மெனவே பேசப் பெறுமே. ....295
எக்கர் எனும்பெயர் சொரிதலும் குவிதலும். ....296
எகின மென்னும்பெயர் புளிமாவு மன்னமும்
காவரிமாவு நீர்நாயும் புளியின்றருவும் புகலப்பெறுமே. ....297
எஃகெனும் பெயரே வேலுங் கூர்மையும்
உருக்கு மெனவே யுரைத்தனர் புலவர். ....298
எள்த லெனும்பெயர் இகழ்தலு நகையுமாம். ....299
எற்றெனும் பெயரே யிரக்கமும் எறிதலும்
அடித்தலும் எத்தன்மைத் தென்றலு மாமே. ....300
எற்றுதல் எனும்பெயர் எறிதலும் புடைத்தலும். ....301
எண்ணெனும் பெயரே யெள்ளு மிலக்கமுஞ்
சொதிடப் பெயரும் விசாரமு மெளிமையும். ....302
எழிலெனும் பெயரே யிளமையு மழகுமாம். ....303
எல்லை யெனும்பெயர் அளவையும் இரவியும். ....304
என்றூழ் எனும்பெயர் இரவியும் வெயிலும் கோடைக் காலமும் கூறப்பெறுமே. ....291
எல்லெனும் பெயரே யிரவியும் ஒளியும் இருளு மிகழ்ச்சியும் இயம்புவர் பெரியோர். ....292
எலியெனும் பெயரே யெலியின் விகற்பமும் பூர நாளொடு மதுவும் புகலுவர். ....293
எருவை யெனும் பெயர் கொறுக்கையுடனே கழுகுந் தாம்பிரப் பெயரும் கருதுவர். ....294
எறுழெனும் பெயரே தண்டா யுதமும் பெலமு மெனவே பேசப் பெறுமே. ....295
எக்கர் எனும்பெயர் சொரிதலும் குவிதலும். ....296
எகின மென்னும்பெயர் புளிமாவு மன்னமும் காவரிமாவு நீர்நாயும் புளியின்றருவும் புகலப்பெறுமே. ....297
எஃகெனும் பெயரே வேலுங் கூர்மையும் உருக்கு மெனவே யுரைத்தனர் புலவர். ....298
எள்த லெனும்பெயர் இகழ்தலு நகையுமாம். ....299
எற்றெனும் பெயரே யிரக்கமும் எறிதலும் அடித்தலும் எத்தன்மைத் தென்றலு மாமே. ....300
எற்றுதல் எனும்பெயர் எறிதலும் புடைத்தலும். ....301
எண்ணெனும் பெயரே யெள்ளு மிலக்கமுஞ் சொதிடப் பெயரும் விசாரமு மெளிமையும். ....302
எழிலெனும் பெயரே யிளமையு மழகுமாம். ....303
எல்லை யெனும்பெயர் அளவையும் இரவியும். ....304
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|