|
||||||||
தகர ஓகார வருக்கம் |
||||||||
தோணி யெனும்பெயரி ரேவதி நாளும்
நீருஞ் சேறு மெயில துறுப்பும்
தெப்பமு மோடமும் பகழியுஞ் செப்புவர். ....923
தோட்டி யெனும்பெயர் அங்குசப் படையும்
கதவு மென கருதப் பெறுமே. ....924
தோன்ற லெனும்பெயர் சுதனு நாதனுமாம். ....925
தோலெனும் பெயரே தோல்வியும் யானையும்
கேடகப் பலகையுங் கிளத்திடு சருமமும்
இயாப்பினோர் வனப்பும் இயம்புவர் புலவர். ....926
தோற்ற மெனும்பெயர் ஏற்றமும் பிறப்பும்
ஆற்றலும் உண்டாக் குதலும் உயர்ச்சியுந்
தோன்றுதற் பெயரும் சொல்லப் பெறுமே. ....927
தோடெனும் பெயரே பனைமடல் போலவும்
பூவி னிதழும் தொகுதியும் புகலுவர். ....928
தோளெனும் பெயரே துணையும் புயமுமாம். ....929
தோரை யெனும்பெயர் மூங்கி லரிசியும்
கைவரை யோடுநெல் விகற்பமும் கருதுவர். ....930
தோணி யெனும்பெயரி ரேவதி நாளும் நீருஞ் சேறு மெயில துறுப்பும் தெப்பமு மோடமும் பகழியுஞ் செப்புவர். ....923
தோட்டி யெனும்பெயர் அங்குசப் படையும் கதவு மென கருதப் பெறுமே. ....924
தோன்ற லெனும்பெயர் சுதனு நாதனுமாம். ....925
தோலெனும் பெயரே தோல்வியும் யானையும் கேடகப் பலகையுங் கிளத்திடு சருமமும் இயாப்பினோர் வனப்பும் இயம்புவர் புலவர். ....926
தோற்ற மெனும்பெயர் ஏற்றமும் பிறப்பும் ஆற்றலும் உண்டாக் குதலும் உயர்ச்சியுந் தோன்றுதற் பெயரும் சொல்லப் பெறுமே. ....927
தோடெனும் பெயரே பனைமடல் போலவும் பூவி னிதழும் தொகுதியும் புகலுவர். ....928
தோளெனும் பெயரே துணையும் புயமுமாம். ....929
தோரை யெனும்பெயர் மூங்கி லரிசியும் கைவரை யோடுநெல் விகற்பமும் கருதுவர். ....930
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|