|
||||||||
சகர ஊகார வருக்கம் |
||||||||
சூர னெனும்பெயர் சூரியன் பெயரும்
தீரனு மருகனு நாயையுஞ் செப்புவர். ....743
சூரெனும் பெயரே தெய்வமு நோயும்
வஞ்சமு மஞ்சா மையுமே வழங்கும். ....744
சூழி யெனும்பெயர் கரிமுக படாமும்
வாவியு மெனவே வகுத்துரைத் தனரே. ....745
சூதக மெனும்பெயர் பிறப்பின் பெயரும்
ஆசூ சப்பெயர் தானு மாமே. ....746
சூத்திர மெனும்பெயர் நூற்பா வகவலும்
நூற்கும் வெண்ணூலும் நுவல்பல் பொறியுமாம். ....747
சூத னெனும்பெயர் சூதாடு பவனும்
சூது சேருளத்தனும் தேர்ப்பா கனுமாம். ....748
சூத மெனும்பெயர் பரதா ரத்தொடு
மாமர மெனவும் வழங்குவர் புலவர். ....749
சூழ லனும்பெயர் விசாரமு மிடமுமாம். ....750
சகா ஊகார வருக்கம் முற்றும்.
சகர எகர வருக்கம்
செவ்வி யெனும்பெயர் பொழுதும் பருவமும். ....751
செல்லெனும் பெயரே யிடியு மேகமும்
முன்னிலை யேவலுஞ் சிதலு மொழிந்தனர். ....752
செந்தெனும் பெயரே சீவனுஞ் சிவப்பும்
ஓரியு மணுவும் நரகத்தி லொன்றுமாம். ....753
செப்ப மெனும்பெயர் நடுநிலைப் பெயரும்
தெருவுஞ் செவ்வையு நெஞ்சமுஞ் செப்புவர். ....754
செம்புல மெனும்பெயர் வன்பாலை நிலமும்
பொருக ளமுமெனப் புகன்றனர் புலவர். ....755
செய்ய லெனும்பெயர் சேறு மொழுக்கமும்
காவலு மெனவே கருதப் பெறுமே. ....756
செம்ம லெனும்பெயர் சீவனும் செயினனும்
தலைவனுஞ் சிறுவனும் வீரனும் பெருமையும்
பழம்பூ வுமெனப் பகர்ந்தனர் புலவர். ....757
செவிலி யெனும்பெயர் முன்பிறந் தாளும்
வளர்ந்த கைத்தாயும் வகுத்தனர் புலவர். ....758
செழுமை யெனும்பெயர் வளமையும் கொழுப்பும்
வனப்பு மாட்சிமையும் வழங்குவர் புலவர். ....759
செடியெனும் பெயரே யொளியுஞ் செறிவும்
பாவமுங் குணமின் மைப்பெயரும் பகர்ந்தனர். ....760
செத்தெனும் பெயரே செம்மையு முவமையும்
அசைச்சொலு முறுப்புங் கருத்துஞ் சந்தேகமும். ....761
செட்டி யெனும்பெயர் முருகன் பெயரும்
வணிகனு மெனவே வழங்கப் பெறுமே. ....762
செச்சை யெனும்பெயர் வெள்ளாட் டேறொடு
வெட்சி செஞ்சாத்தும் விளம்புவர் புலவர். ....763
செவியெனும் பெயரே கேள்வியுங் காதுமாம். ....764
செம்மை யெனும்பெயர் சிவப்புஞ் செவ்வையும். ....765
செப்பெணும் பெயர்பணிச் செப்புஞ் செப்பலும். ....766
செய்யெனும் பெயரே செய்தொழிற் பெயரும்
ஒழுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....767
செயிரெனும் பெயரே சினமும் குற்றமும். ....768
சூர னெனும்பெயர் சூரியன் பெயரும் தீரனு மருகனு நாயையுஞ் செப்புவர். ....743
சூரெனும் பெயரே தெய்வமு நோயும் வஞ்சமு மஞ்சா மையுமே வழங்கும். ....744
சூழி யெனும்பெயர் கரிமுக படாமும் வாவியு மெனவே வகுத்துரைத் தனரே. ....745
சூதக மெனும்பெயர் பிறப்பின் பெயரும் ஆசூ சப்பெயர் தானு மாமே. ....746
சூத்திர மெனும்பெயர் நூற்பா வகவலும் நூற்கும் வெண்ணூலும் நுவல்பல் பொறியுமாம். ....747
சூத னெனும்பெயர் சூதாடு பவனும் சூது சேருளத்தனும் தேர்ப்பா கனுமாம். ....748
சூத மெனும்பெயர் பரதா ரத்தொடு மாமர மெனவும் வழங்குவர் புலவர். ....749
சூழ லனும்பெயர் விசாரமு மிடமுமாம். ....750
சகா ஊகார வருக்கம் முற்றும்.
சகர எகர வருக்கம்
செவ்வி யெனும்பெயர் பொழுதும் பருவமும். ....751
செல்லெனும் பெயரே யிடியு மேகமும் முன்னிலை யேவலுஞ் சிதலு மொழிந்தனர். ....752
செந்தெனும் பெயரே சீவனுஞ் சிவப்பும் ஓரியு மணுவும் நரகத்தி லொன்றுமாம். ....753
செப்ப மெனும்பெயர் நடுநிலைப் பெயரும் தெருவுஞ் செவ்வையு நெஞ்சமுஞ் செப்புவர். ....754
செம்புல மெனும்பெயர் வன்பாலை நிலமும் பொருக ளமுமெனப் புகன்றனர் புலவர். ....755
செய்ய லெனும்பெயர் சேறு மொழுக்கமும் காவலு மெனவே கருதப் பெறுமே. ....756
செம்ம லெனும்பெயர் சீவனும் செயினனும் தலைவனுஞ் சிறுவனும் வீரனும் பெருமையும் பழம்பூ வுமெனப் பகர்ந்தனர் புலவர். ....757
செவிலி யெனும்பெயர் முன்பிறந் தாளும் வளர்ந்த கைத்தாயும் வகுத்தனர் புலவர். ....758
செழுமை யெனும்பெயர் வளமையும் கொழுப்பும் வனப்பு மாட்சிமையும் வழங்குவர் புலவர். ....759
செடியெனும் பெயரே யொளியுஞ் செறிவும் பாவமுங் குணமின் மைப்பெயரும் பகர்ந்தனர். ....760
செத்தெனும் பெயரே செம்மையு முவமையும் அசைச்சொலு முறுப்புங் கருத்துஞ் சந்தேகமும். ....761
செட்டி யெனும்பெயர் முருகன் பெயரும் வணிகனு மெனவே வழங்கப் பெறுமே. ....762
செச்சை யெனும்பெயர் வெள்ளாட் டேறொடு வெட்சி செஞ்சாத்தும் விளம்புவர் புலவர். ....763
செவியெனும் பெயரே கேள்வியுங் காதுமாம். ....764
செம்மை யெனும்பெயர் சிவப்புஞ் செவ்வையும். ....765
செப்பெணும் பெயர்பணிச் செப்புஞ் செப்பலும். ....766
செய்யெனும் பெயரே செய்தொழிற் பெயரும் ஒழுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....767
செயிரெனும் பெயரே சினமும் குற்றமும். ....768
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|