|
||||||||
சகர இகர வருக்கம் |
||||||||
சிவையெனும் பெயரே நவையிலா வுமையுடன்
கொல்ல னுலையும் பெரும் நரியுமாம். ....683
சிதமெனும் பெயரே செயமுறப் படுதலும்
ஞானமும் வெளுப்பும் வான் மீனுமாம். ....684
சிந்தெனும் பெயரே நீருங் கடலும்
நதியுங் குறளும் யாப்பின் முச்சீரும்
ஓர்தேச முமென வுரைத்தனர் புலவர். ....685
சிதரெனும் பெயரே சீலைத் துணியுந்
துவலையு முறியும் வண்டுஞ் சொல்லுவர். ....686
சிமைய மெனும்பெயர் சிகரமுங் குடுமியும். ....687
சிலையெனும் பெயரே மலையும் பாறையும்
வில்லு மெனவே விளம்புவர் புலவர். ....688
சினையெனும் பெயரே செழுமரக் கோடுங்
கருவின் பெயரு முட்டையு முறுப்புமாம். ....689
சிலீமுக மெனும்பெயர் அம்பும் வண்டும்
முலைக்கணின் பெயரு மொழியப் பெறுமே. ....690
சிமிலி யெனும்பெயர் உறியுங் கீழ்வீடும்
குடுமியு மெனவே கூறுவர் புலவர். ....691
சிக்க மெனும்பெயர் சீப்புங் குடுமியும்
உறியு மெனவே யுரைத்தனர் புலவர். ....692
சிந்துர மெனும்பெயர் திலகமும் வெட்சியும்
செந்நிறப் பொருள்களுஞ் செங்குடைப் பெயரும்
மதகரிப் பெயர்புளி மாவும் வழங்கும். ....693
சிரக மெனும்பெயர் கரகமும் வட்டிலுஞ்
சென்னியிற் கோடுஞ் செப்பப் பெறுமே. ....694
சிதலை யெனும்பெயர் செல்லொடு துணியுமாம். ....695
சிகண்டி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தின்
ஓசையும் அலியு மயிலு மாமே. ....696
சில்லி யெனப்பெயர் சிள்வீடும் வட்டமும்
தேருரு ளுஞ்சிறு கீரையும் செப்புவர். ....697
சிறை யெனும்பெயரே புள்ளி னிறகும்
காவலு மோர்பா லிடமும் கரையுமாம். ....698
சிவப்பெனும் பெயரே செம்மையும் சினமும்
சினக்குறிப் புமெனச் செப்புவர் புலவர். ....699
சில்லை யெனும்பெயர் பகண்டைப் புள்ளும்
சிள்வீடுங் கிலுகிலுப் பையுஞ் செப்புவர். ....700
சிகரி யெனும்பெயர் மலையு மெலியும்
கருநா ரையுங் கோபுரமுங் கருதுவர். ....701
சித்த மெனும்பெயர் திடமும் உளமுமாம். ....702
சித்திர னெனும்பெயர் சித்திர காரனுந்
தச்சனு மெனவே சாற்றப் பெறுமே. ....703
சிகியெனும் பெயரே மயிலும் கேதுவும்
நெருப்பு நூபுரமு நிகழ்த்தப் பெறுமே. ....704
சித்திர மெனும்பெயர் சித்திர கவிதையும்
மெய்போற் பொய்யை யுரைத்தலு மழகும்
துணித்த பலபொரு ளுமதி சயமுஞ்
செய்சொல் வடிவுங் காடுமா மணக்குமாம். ....705
சித்திர பானு வெனும்பெயர் நெருப்புஞ்
சூரியன் பெயரு மோராண்டுஞ் சொல்லுவர். ....706
சிலம்பெனும் பெயரே மலையு மோசையும்
பரிபுரப் பெயரும் பகர்ந்தனர் புலவர். ....707
சிகர மெனும்பெயர் திரையுந் திவலையு
மலையி னுச்சியும் சென்னியுங்
கவரி மாவின் பெயருங் கருதுவர். ....708
சிகழிகை யெனும்பெயர் மயிர்முடிப் பெயரும்
மாலையின் பெயரும் வழங்கப் பெறுமே. ....709
சிதட னெனும்பெயர் குருடனு மூடனும். ....710
சிரமெனும் பெயர்நெடுங் காலமுஞ் சென்னியும். ....711
சிவமெனும் பெயரே முத்தியும் பெருமையும்
குறுணியின் பெயருங் கூவப் பெறுமே. ....712
சித்தெனும் பெயரே செயமும் ஞானமுமாம். ....713
சிவையெனும் பெயரே நவையிலா வுமையுடன் கொல்ல னுலையும் பெரும் நரியுமாம். ....683
சிதமெனும் பெயரே செயமுறப் படுதலும் ஞானமும் வெளுப்பும் வான் மீனுமாம். ....684
சிந்தெனும் பெயரே நீருங் கடலும் நதியுங் குறளும் யாப்பின் முச்சீரும் ஓர்தேச முமென வுரைத்தனர் புலவர். ....685
சிதரெனும் பெயரே சீலைத் துணியுந் துவலையு முறியும் வண்டுஞ் சொல்லுவர். ....686
சிமைய மெனும்பெயர் சிகரமுங் குடுமியும். ....687
சிலையெனும் பெயரே மலையும் பாறையும் வில்லு மெனவே விளம்புவர் புலவர். ....688
சினையெனும் பெயரே செழுமரக் கோடுங் கருவின் பெயரு முட்டையு முறுப்புமாம். ....689
சிலீமுக மெனும்பெயர் அம்பும் வண்டும் முலைக்கணின் பெயரு மொழியப் பெறுமே. ....690
சிமிலி யெனும்பெயர் உறியுங் கீழ்வீடும் குடுமியு மெனவே கூறுவர் புலவர். ....691
சிக்க மெனும்பெயர் சீப்புங் குடுமியும் உறியு மெனவே யுரைத்தனர் புலவர். ....692
சிந்துர மெனும்பெயர் திலகமும் வெட்சியும் செந்நிறப் பொருள்களுஞ் செங்குடைப் பெயரும் மதகரிப் பெயர்புளி மாவும் வழங்கும். ....693
சிரக மெனும்பெயர் கரகமும் வட்டிலுஞ் சென்னியிற் கோடுஞ் செப்பப் பெறுமே. ....694
சிதலை யெனும்பெயர் செல்லொடு துணியுமாம். ....695
சிகண்டி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தின் ஓசையும் அலியு மயிலு மாமே. ....696
சில்லி யெனப்பெயர் சிள்வீடும் வட்டமும் தேருரு ளுஞ்சிறு கீரையும் செப்புவர். ....697
சிறை யெனும்பெயரே புள்ளி னிறகும் காவலு மோர்பா லிடமும் கரையுமாம். ....698
சிவப்பெனும் பெயரே செம்மையும் சினமும் சினக்குறிப் புமெனச் செப்புவர் புலவர். ....699
சில்லை யெனும்பெயர் பகண்டைப் புள்ளும் சிள்வீடுங் கிலுகிலுப் பையுஞ் செப்புவர். ....700
சிகரி யெனும்பெயர் மலையு மெலியும் கருநா ரையுங் கோபுரமுங் கருதுவர். ....701
சித்த மெனும்பெயர் திடமும் உளமுமாம். ....702
சித்திர னெனும்பெயர் சித்திர காரனுந் தச்சனு மெனவே சாற்றப் பெறுமே. ....703
சிகியெனும் பெயரே மயிலும் கேதுவும் நெருப்பு நூபுரமு நிகழ்த்தப் பெறுமே. ....704
சித்திர மெனும்பெயர் சித்திர கவிதையும் மெய்போற் பொய்யை யுரைத்தலு மழகும் துணித்த பலபொரு ளுமதி சயமுஞ் செய்சொல் வடிவுங் காடுமா மணக்குமாம். ....705
சித்திர பானு வெனும்பெயர் நெருப்புஞ் சூரியன் பெயரு மோராண்டுஞ் சொல்லுவர். ....706
சிலம்பெனும் பெயரே மலையு மோசையும் பரிபுரப் பெயரும் பகர்ந்தனர் புலவர். ....707
சிகர மெனும்பெயர் திரையுந் திவலையு மலையி னுச்சியும் சென்னியுங் கவரி மாவின் பெயருங் கருதுவர். ....708
சிகழிகை யெனும்பெயர் மயிர்முடிப் பெயரும் மாலையின் பெயரும் வழங்கப் பெறுமே. ....709
சிதட னெனும்பெயர் குருடனு மூடனும். ....710
சிரமெனும் பெயர்நெடுங் காலமுஞ் சென்னியும். ....711
சிவமெனும் பெயரே முத்தியும் பெருமையும் குறுணியின் பெயருங் கூவப் பெறுமே. ....712
சித்தெனும் பெயரே செயமும் ஞானமுமாம். ....713
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|