|
||||||||
ஓகார வருக்கம் |
||||||||
ஓண மெனும்பெயர் மாதவ னாளும்
வருபுனல் யாறும் வகுத்தனர் புலவர். ....335
ஓரை யெனும்பெயர் அரிவையர் கூட்டமும்
அவர்விளை யாடலும் விளையாடு கலனும்
இராசியின் பொதுவு மிடைச்சொல் லுமாமே. ....336
ஓங்க லெனும்பெய ருயரமு மலையும்
மேடு மூங்கிலுந் தலைவனும் விளம்புவர். ....337
ஓடை யெனும்பெயர் வாவியின் பெயரும்
யானை நுதலணி பட்டமும் கிடங்கும்
ஒருகொடிப் பெயரும் உரைத்தனர் புலவர். ....338
ஒதை யெனும்பெயர் சத்த வொலியும்
புரிசையுள் ளுயர்வும் பொருந்திய மேடையும்
நதியும் நகரமும் நவிலப் பெறுமே. ....339
ஓரி யெனும்பெயர் முசுவும் நரியும்
அரிவையர் மயிரொழித் தெல்லா மயிரும்
கொடைதரு மொருவள்ளல் பெயருங் கூறுவர். ....340
ஓவியரெனும் பெயர் சித்திர காரரும்
சிற்பநூல் வினைஞரும் செப்பப் பெறுமே. ....341
ஓட்ட மெனும்பெயர் மேலுதடும் தோல்வியும்
ஓடுதற் பெயரும் உரைத்தனர் புலவர். ....342
ஓதனம் எனும்பெயர் உணவும் சோறுமாம். ....343
ஓவெனும் பெயரே நீர்த்தகை கதவும்
நீக்கமும் இரக்கக் குறிப்பின் வார்த்தையுமாம். ....344
ஓதிமம் எனும்பெயர் அன்னமும் வெற்பும்
கவரி மாவின் பெயருங் கருதுவர். ....345
ஓதி யெனும்பெயர் வெற்பு மனனமும்
பெண்பான் மயிரு மறிவும் பூஞையும்
ஒத்தியு மெனவே யுரைக்கப் பெறுமே. ....346
ஒளியெனும் பெயர் யானைக் கூட்டமும்
ஒழுங்கு மெனவே யுரைத்தனர் புலவர். ....347
ஓண மெனும்பெயர் மாதவ னாளும் வருபுனல் யாறும் வகுத்தனர் புலவர். ....335
ஓரை யெனும்பெயர் அரிவையர் கூட்டமும் அவர்விளை யாடலும் விளையாடு கலனும் இராசியின் பொதுவு மிடைச்சொல் லுமாமே. ....336
ஓங்க லெனும்பெய ருயரமு மலையும் மேடு மூங்கிலுந் தலைவனும் விளம்புவர். ....337
ஓடை யெனும்பெயர் வாவியின் பெயரும் யானை நுதலணி பட்டமும் கிடங்கும் ஒருகொடிப் பெயரும் உரைத்தனர் புலவர். ....338
ஒதை யெனும்பெயர் சத்த வொலியும் புரிசையுள் ளுயர்வும் பொருந்திய மேடையும் நதியும் நகரமும் நவிலப் பெறுமே. ....339
ஓரி யெனும்பெயர் முசுவும் நரியும் அரிவையர் மயிரொழித் தெல்லா மயிரும் கொடைதரு மொருவள்ளல் பெயருங் கூறுவர். ....340
ஓவியரெனும் பெயர் சித்திர காரரும் சிற்பநூல் வினைஞரும் செப்பப் பெறுமே. ....341
ஓட்ட மெனும்பெயர் மேலுதடும் தோல்வியும் ஓடுதற் பெயரும் உரைத்தனர் புலவர். ....342
ஓதனம் எனும்பெயர் உணவும் சோறுமாம். ....343
ஓவெனும் பெயரே நீர்த்தகை கதவும் நீக்கமும் இரக்கக் குறிப்பின் வார்த்தையுமாம். ....344
ஓதிமம் எனும்பெயர் அன்னமும் வெற்பும் கவரி மாவின் பெயருங் கருதுவர். ....345
ஓதி யெனும்பெயர் வெற்பு மனனமும் பெண்பான் மயிரு மறிவும் பூஞையும் ஒத்தியு மெனவே யுரைக்கப் பெறுமே. ....346
ஒளியெனும் பெயர் யானைக் கூட்டமும் ஒழுங்கு மெனவே யுரைத்தனர் புலவர். ....347
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|