|
||||||||
நீராடற் பருவம் |
||||||||
471 தங்குபாற் கடனடு வெழுந்தபைங் கொடியில்வெண் டரளயா னத்திவர்ந்து -
தரைபுகழு மக்கடற் றிரையெழுந் துழிதருந் தன்மையிற் கவரி துள்ளக்,
கொங்குசா லக்கடற் சும்மையி னியக்குழாங் கொண்டலச் சுறவியம்பக் -
குளிருவா மதிமிசை யெழுந்துநின் றாலெனக் கோலவெண் குடைநி ழற்றத்,
தெங்குநேர் கொங்கையர் மாதர்மொய்த் தென்னவண் சேடியர் குழாங்கண் மொய்ப்பச் -
சென்றுகா சிபமுனி தவஞ்செய்தே முற்றொளிச் சிவிகையி னிழிந்து வாசம்,
பொங்குமே னியினப்பி யெங்கள்கோ மளவல்லி பொன்னிநீ ராடியருளே -
புகரின்மந் திரபீட நிகரின்மங் களமாது பொன்னிநீ ராடியருளே. (1)
472 ஒழுகுகுழ லுஞ்சைவ லமுங்கணுங் கயலுமழ குற்றமுக முங்கமலமு -
மொள்ளதர முங்கிடையு மஞ்செவியும் வள்ளையு முவக்குநகை ந்தரளமு,
முழுகுசெவ் வியல்பொலி வாயுமாம் பலுமொளி முகிழ்த்தகள முஞ்சங்கமு -
முதிராத கொங்கையும் புற்புதமு முந்திய முயங்குசுழி யுங்கதிர்ப்பு,
மெழுகுவயி னுறுமழப் புந்திரையு முக்காலு மேயகட கமும்வராலும் -
விழையாமை யுங்கைவிர லுங்களிறு மொன்றவெழு வேலையும் பரிமளித்துப்,
புழுகுமலி தரமுங்கி யெங்கள்கோ மளவல்லி பொன்னிநீ ராடி யருளே -
புகரின்மந் திரபீட நிகரின்மல் களமாது ¦¡பன்னிநீ ராடியருளே. (2)
473 மருகுநறு மணமலி கருங்குழலு குங்குமாலை மங்குளின் றுகுபுன லெனா -
வானம் பறந்துதிரி சாதக மெனும்பெயர் மரீஇயபுள் வாயணக்க,
வொருவுத வினாச்செய்ய வாயுமிழ் மறும்புனலை யொள்ளாக் காம்பு நின்று -
முகுமதுப் புனலெனப் பிரமரக் குலமென வுரைக்கும்புள் யாவு மொய்ப்ப,
வெருவுதலி லாதரங் குடிகொளு மகங்கையெறி மென்புனலை யனைய கைம்முன் -
விட்டபுன வென்றலிந் திகைமுதலி யோரென்ன மெல்லோதி மப்பு வேடற்க,
பொருவுதளிர் கருணைகூர்ந் தெங்கள்கோ மளவல்லி பொன்னிநீ ராடி யருளே -
புகரின்மந் திரபீட நிகரின்மல் களமாது ¦¡பன்னிநீ ராடியருளே. (3)
474 ஊற்றுசுவை நறவுண்டு வண்டுபல மேலெழ வொருங்கிதழ் விரிநது தோற்ற -
முற்றசெந் தாமரை நெருந்குறச் சூழும்வெள் ளோதிமக் குலமமர்தரத்,
தோற்றுமொரு தேத்துநீ புக்குநடு நிற்றல்வான் றொடுகுடுமி மாடமோங்குந் -
தொன்மதுரை நகரகம் பூதியணி வேதியர் தொடர்ந்துசுற் றமரநாப்ப,
ணாற்றுபுகை மேலெழ வளர்த்தவிணர் படுசெவ் வழற்குழி நடுக்கண்முன்னா -
ளவதரித் துறநின்ற தொக்குமென யாவரு மறையுமா றங்கண்மேவிப்,
போற்றுகரு ணைத்திறத் தெங்கள்கோ மளவல்லி பொன்னிநீ ராடியருளே -
புகரின்மந் திரபீட நிகரின்மங் களமாது பொன்னிநீ ராடியருளே. (4)
475 மலிதரு விரைச்செய்ய சாந்திகுளை மாதர்பலர் மண்ணுவினை நிற்காற்றலான் -
மற்றினைய நதிசோணை நதியாகி வெண்முத்தம் வண்கமல ராகமாகி,
யொலிதரு கடிப்புன லுறப்பாய்ந்த செறுவெலா முறுவெண்ணெல் செந்நெலாகி -
யொளிர்வெண் கரும்பெலாஞ் செங்கரும் பாகியுட னுறைவாணியாக்க மாகி,
வலிதரு கடற்குட்ட முற்றபல் வல்லிகளும் வண்பவள வல்லியாகி -
மாண்புண்ட ரீகங்கள் கோகநக மாகிமதி மருவுறும் பருதி யாகிப்,
பொலிதர வுவப்பூற வெங்கள்கோ மளவல்லி பொன்னிநீ ராடியருளே -
புகரின்மந் திரபீட நிகரின்மங் களமாது பொன்னிநீ ராடியருளே. (5)
வேறு
476 அஞ்ச மிரிய மடப்பிடியு மஞ்ச நடக்கு மனிந்திதைமு னாய மடமா
தருந்திருமா லயன்மார் பகமுந் தாலமும்போற்
கஞ்ச மருவு மடவாருங் கருணைத் திருமே னியினறிதாய்க்
கவின்ற மஞ்சட் பொடிதிமிர்ந்து கரைத்து விட்ட புனலெழுந்து
தஞ்ச மில்லாக் கருங்கடன்மேற் சார்ந்து பரந்து பொலிதோற்றஞ்
சார்ங்க தரன்கார் மேனியிற்செந் தாதுக் கலைபோர்த் தியதேய்ப்பப்
புஞ்ச வளைக்கைக் குடந்தையுமை பொன்னிப் புதுநீ ராடுகவே
பொற்பா ரருண்மங் களவல்லி பொன்னிப் புதுநீ ராடுகவே. (6)
477 மின்செய் மருங்குற் கமலைமுதல் விளங்கு மடவார் பலருந்த
மேனி நுரைமொய்த் துறவுரிஞல் விலக்கி நறுநீர் தோய்ந்தெழுந்து
மன்செய் நினக்கு மஞ்சண்முதல் வாசந் திமிர்ந்து பணியாற்ற
வந்து சூழ வவருடம்பில் வண்ணஞ் செறித்த திறமானத்
தென்செய் நினது திருமேனிச் செறிபச் சொளிசார்ந் திடக்கண்டோர்
திகழுஞ் சகநின் மயமென்னச் செப்ப தெரிந்தா மென்றுவப்பப்
பொன்செய் வளஞ்சால் குடந்தையுமை பொன்னிப் புதுநீ ராடுகவே
பொற்பா ரருண்மங் களவல்லி பொன்னிப் புதுநீ ராடுகவே. (7)
478 சாற்று நினது வாவுவந்துத் தடவுக் குறிஞ்சி மணிகநாஞ்
சந்த மகிலா திகள்பரப்பித் தளவப் புறவ நறுங்கனியும்
வீற்று மலரு மெதிர்குவித்து வெய்ய பாலை யெழுமுருங்கை
மென்பூம் பொரிகண மிகவிறைத்து விரும்ப மருதத் திணையென்றுஞ்
சேற்று முளைத்த கோகநகத் தீப மேற்றி யிணங்கவியின்
செழுங்காய்க் குடங்கள் பலநிறுவித் தெய்வப் புனலார்த் திடுமதனாற்
போற்று வளஞ்சால் குடந்தையுமை பொன்னிப் புதுநீ ராடுகவே -
பொற்பா ரருண்மங் களவல்லி பொன்னிப் புதுநீ ராடுகவே. (8)
வேறு
479 எண்ணிய வெண்ணிய படியடி யவர்பெற வினிதுத வுந்தருவே
யெப்பிற வியுநல நின்றரி சனமுறி னென்னப் பொலிகொடியே
கண்ணிய மறைமுடி யெனுமொரு கட்சி கலந்தமர் பைங்கிளியே
காட்சி விருப்ப ருளச்சூ தத்தொளி காலப் பயில்குயிலே
தண்ணிய யோகியர் சிந்தைக் கமலத் தடமக லாவனமே
காற்று மெழுத்துரு வாகிய பரையே சகலா கமமுதலே
புண்ணிய நண்ணிய கன்னிப் பொன்னிப் புதுநீ ராடுகவே
புராதனர் பங்களை மங்களை பொன்னிப் புதுநீ ராடுகவே. (9)
480 காவல ரல்லது பச்சிலை யேனுங் காய்ந்துதிர் சருகேனுங்
கையி னகப்படு மொன்றுகொ டுன்பொற் கமலத் திருவடியிட்
டாவல ராயுள நெக்குரு கிக்கனி யன்பின ரயனாதி
யமரர்க ணறுமுறு தன்மைய ராகி யயர்ந்திட மேற்போக்கி
நாவலர் நன்கு புகழ்ந்திடு மின்ப நலப்பெரி யவராக
நன்கருள் புரிவரை மயிலே குயிலே ஞான வரோதயமே
பூவலர் பாவலர் கன்னிப் பொன்னிப் புதுநீ ராடுகவே
புராதனர் பங்களை மங்களை பொன்னிப் புதுநீ ராடுகவே. (10)
471 தங்குபாற் கடனடு வெழுந்தபைங் கொடியில்வெண் டரளயா னத்திவர்ந்து - தரைபுகழு மக்கடற் றிரையெழுந் துழிதருந் தன்மையிற் கவரி துள்ளக், கொங்குசா லக்கடற் சும்மையி னியக்குழாங் கொண்டலச் சுறவியம்பக் - குளிருவா மதிமிசை யெழுந்துநின் றாலெனக் கோலவெண் குடைநி ழற்றத், தெங்குநேர் கொங்கையர் மாதர்மொய்த் தென்னவண் சேடியர் குழாங்கண் மொய்ப்பச் - சென்றுகா சிபமுனி தவஞ்செய்தே முற்றொளிச் சிவிகையி னிழிந்து வாசம், பொங்குமே னியினப்பி யெங்கள்கோ மளவல்லி பொன்னிநீ ராடியருளே - புகரின்மந் திரபீட நிகரின்மங் களமாது பொன்னிநீ ராடியருளே. (1)
472 ஒழுகுகுழ லுஞ்சைவ லமுங்கணுங் கயலுமழ குற்றமுக முங்கமலமு - மொள்ளதர முங்கிடையு மஞ்செவியும் வள்ளையு முவக்குநகை ந்தரளமு, முழுகுசெவ் வியல்பொலி வாயுமாம் பலுமொளி முகிழ்த்தகள முஞ்சங்கமு - முதிராத கொங்கையும் புற்புதமு முந்திய முயங்குசுழி யுங்கதிர்ப்பு, மெழுகுவயி னுறுமழப் புந்திரையு முக்காலு மேயகட கமும்வராலும் - விழையாமை யுங்கைவிர லுங்களிறு மொன்றவெழு வேலையும் பரிமளித்துப், புழுகுமலி தரமுங்கி யெங்கள்கோ மளவல்லி பொன்னிநீ ராடி யருளே - புகரின்மந் திரபீட நிகரின்மல் களமாது ¦¡பன்னிநீ ராடியருளே. (2)
473 மருகுநறு மணமலி கருங்குழலு குங்குமாலை மங்குளின் றுகுபுன லெனா - வானம் பறந்துதிரி சாதக மெனும்பெயர் மரீஇயபுள் வாயணக்க, வொருவுத வினாச்செய்ய வாயுமிழ் மறும்புனலை யொள்ளாக் காம்பு நின்று - முகுமதுப் புனலெனப் பிரமரக் குலமென வுரைக்கும்புள் யாவு மொய்ப்ப, வெருவுதலி லாதரங் குடிகொளு மகங்கையெறி மென்புனலை யனைய கைம்முன் - விட்டபுன வென்றலிந் திகைமுதலி யோரென்ன மெல்லோதி மப்பு வேடற்க, பொருவுதளிர் கருணைகூர்ந் தெங்கள்கோ மளவல்லி பொன்னிநீ ராடி யருளே - புகரின்மந் திரபீட நிகரின்மல் களமாது ¦¡பன்னிநீ ராடியருளே. (3)
474 ஊற்றுசுவை நறவுண்டு வண்டுபல மேலெழ வொருங்கிதழ் விரிநது தோற்ற - முற்றசெந் தாமரை நெருந்குறச் சூழும்வெள் ளோதிமக் குலமமர்தரத், தோற்றுமொரு தேத்துநீ புக்குநடு நிற்றல்வான் றொடுகுடுமி மாடமோங்குந் - தொன்மதுரை நகரகம் பூதியணி வேதியர் தொடர்ந்துசுற் றமரநாப்ப, ணாற்றுபுகை மேலெழ வளர்த்தவிணர் படுசெவ் வழற்குழி நடுக்கண்முன்னா - ளவதரித் துறநின்ற தொக்குமென யாவரு மறையுமா றங்கண்மேவிப், போற்றுகரு ணைத்திறத் தெங்கள்கோ மளவல்லி பொன்னிநீ ராடியருளே - புகரின்மந் திரபீட நிகரின்மங் களமாது பொன்னிநீ ராடியருளே. (4)
475 மலிதரு விரைச்செய்ய சாந்திகுளை மாதர்பலர் மண்ணுவினை நிற்காற்றலான் - மற்றினைய நதிசோணை நதியாகி வெண்முத்தம் வண்கமல ராகமாகி, யொலிதரு கடிப்புன லுறப்பாய்ந்த செறுவெலா முறுவெண்ணெல் செந்நெலாகி - யொளிர்வெண் கரும்பெலாஞ் செங்கரும் பாகியுட னுறைவாணியாக்க மாகி, வலிதரு கடற்குட்ட முற்றபல் வல்லிகளும் வண்பவள வல்லியாகி - மாண்புண்ட ரீகங்கள் கோகநக மாகிமதி மருவுறும் பருதி யாகிப், பொலிதர வுவப்பூற வெங்கள்கோ மளவல்லி பொன்னிநீ ராடியருளே - புகரின்மந் திரபீட நிகரின்மங் களமாது பொன்னிநீ ராடியருளே. (5)
வேறு 476 அஞ்ச மிரிய மடப்பிடியு மஞ்ச நடக்கு மனிந்திதைமு னாய மடமா தருந்திருமா லயன்மார் பகமுந் தாலமும்போற் கஞ்ச மருவு மடவாருங் கருணைத் திருமே னியினறிதாய்க் கவின்ற மஞ்சட் பொடிதிமிர்ந்து கரைத்து விட்ட புனலெழுந்து தஞ்ச மில்லாக் கருங்கடன்மேற் சார்ந்து பரந்து பொலிதோற்றஞ் சார்ங்க தரன்கார் மேனியிற்செந் தாதுக் கலைபோர்த் தியதேய்ப்பப் புஞ்ச வளைக்கைக் குடந்தையுமை பொன்னிப் புதுநீ ராடுகவே பொற்பா ரருண்மங் களவல்லி பொன்னிப் புதுநீ ராடுகவே. (6)
477 மின்செய் மருங்குற் கமலைமுதல் விளங்கு மடவார் பலருந்த மேனி நுரைமொய்த் துறவுரிஞல் விலக்கி நறுநீர் தோய்ந்தெழுந்து மன்செய் நினக்கு மஞ்சண்முதல் வாசந் திமிர்ந்து பணியாற்ற வந்து சூழ வவருடம்பில் வண்ணஞ் செறித்த திறமானத் தென்செய் நினது திருமேனிச் செறிபச் சொளிசார்ந் திடக்கண்டோர் திகழுஞ் சகநின் மயமென்னச் செப்ப தெரிந்தா மென்றுவப்பப் பொன்செய் வளஞ்சால் குடந்தையுமை பொன்னிப் புதுநீ ராடுகவே பொற்பா ரருண்மங் களவல்லி பொன்னிப் புதுநீ ராடுகவே. (7)
478 சாற்று நினது வாவுவந்துத் தடவுக் குறிஞ்சி மணிகநாஞ் சந்த மகிலா திகள்பரப்பித் தளவப் புறவ நறுங்கனியும் வீற்று மலரு மெதிர்குவித்து வெய்ய பாலை யெழுமுருங்கை மென்பூம் பொரிகண மிகவிறைத்து விரும்ப மருதத் திணையென்றுஞ் சேற்று முளைத்த கோகநகத் தீப மேற்றி யிணங்கவியின் செழுங்காய்க் குடங்கள் பலநிறுவித் தெய்வப் புனலார்த் திடுமதனாற் போற்று வளஞ்சால் குடந்தையுமை பொன்னிப் புதுநீ ராடுகவே - பொற்பா ரருண்மங் களவல்லி பொன்னிப் புதுநீ ராடுகவே. (8)
வேறு 479 எண்ணிய வெண்ணிய படியடி யவர்பெற வினிதுத வுந்தருவே யெப்பிற வியுநல நின்றரி சனமுறி னென்னப் பொலிகொடியே கண்ணிய மறைமுடி யெனுமொரு கட்சி கலந்தமர் பைங்கிளியே காட்சி விருப்ப ருளச்சூ தத்தொளி காலப் பயில்குயிலே தண்ணிய யோகியர் சிந்தைக் கமலத் தடமக லாவனமே காற்று மெழுத்துரு வாகிய பரையே சகலா கமமுதலே புண்ணிய நண்ணிய கன்னிப் பொன்னிப் புதுநீ ராடுகவே புராதனர் பங்களை மங்களை பொன்னிப் புதுநீ ராடுகவே. (9)
480 காவல ரல்லது பச்சிலை யேனுங் காய்ந்துதிர் சருகேனுங் கையி னகப்படு மொன்றுகொ டுன்பொற் கமலத் திருவடியிட் டாவல ராயுள நெக்குரு கிக்கனி யன்பின ரயனாதி யமரர்க ணறுமுறு தன்மைய ராகி யயர்ந்திட மேற்போக்கி நாவலர் நன்கு புகழ்ந்திடு மின்ப நலப்பெரி யவராக நன்கருள் புரிவரை மயிலே குயிலே ஞான வரோதயமே பூவலர் பாவலர் கன்னிப் பொன்னிப் புதுநீ ராடுகவே புராதனர் பங்களை மங்களை பொன்னிப் புதுநீ ராடுகவே. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|