13.1: இன்னமுத திற்பிறந் தாளிதங் கேட்க வுரைத்தபிரான் பொன்னரு ளான்மறை மௌலியிற் பூண்ட விரண்டிசைத்துத் தன்னுரை மிக்க தனமி தெனத்தந்த வேதகத்திற் றுன்னு பொருள்கள்பத் துந்தொலை யாநிதி யாகின்றவே.
13.2: அருவுரு வானவை தன்னை யடைந்திடத் தானடைந்து வெருவுரை கேட்டவை கேட்பித் தகற்றும் வினைவிலக்கி யிருதலை யன்புத னாலெமை யின்னடி சேர்த்தருளுந் திருவுட னேதிகழ் வார்செறிந் தாரெங்கள் சிந்தையுளே.
13.3: ஓருயி ராய்நின்ற வொண்சுட ரின்ப வுருத்தனிலும் பேருரு வத்திலும் பின்னதிற் றோற்று முருக்களிலு மோருரு வான வுலகிலு மேற்கு முருக்களினாற் சேருதன் மன்னுசெய் யாளன்பர் நம்மனஞ் சேர்ந்தனரே.
13.4: காரண மாயிறை யாய்க்கதி யாயம ரும்பதியா யாரண மோது மனைத்துற வாயக லாவுயிராய்ச் சீரணி யுஞ்சுட ராய்ச்செறிந் தெங்குந் திகழ்ந்துநின்ற நாரண னார்நமக் காய்நல்கி நாந்தொழ நின்றனரே.
13.5: வானமர் மன்னுரு வாய்வகை யாலதி னாலுருவாய் மீனம தாமைகே ழன்முத லாம்விப வங்களுமா யூனம ருள்ளுரு வாயொளி யாத வருச்சையுமாந் தேனமர் செங்கழ லாஞ்சேர்த்த னங்கழ லெம்மனத்தே.
13.6: வேறொ ரணங்கு தொழும்வினை தீர்த்தெமை யாண்டிடுவா னாறு மதன்பய னுந்தந் தளிக்கு மருளுடையான் மாறில தாயில கும்மது மெல்லடிப் போதிரண்டா னாறு துழாய்முடி யானமக் குச்சர ணாயினனே.
13.7: பெறுவது நாம்பெரி யோர்பெறும்பேறென நின்றவெமை வெறுமை யுணர்த்தி விலக்காத நன்னிலை யாதரிப்பித் துறுமதி யாற்றனை யொண்சர ணென்ற வுணர்வுதந்த மறுவுடை மார்பனுக் கேமன் னடைக்கல மாயினமே.
13.8: அருமறை யாதுந் துறவோ மெனவறிந் தார்கவருங் கருமமு ஞானமுங் காதலுங் கண்டு முயலகிலோம் வருவது மிந்நிலை யாய்மய லுற்ற வெமக்குளதோ திருமக ளார்ப்பிரி யாத்திரு மாலன்றி நற்சரணே.
13.9: சுருங்கா வகில மெலாந்துளங் காவமு தக்கடலாய் நெருங்கா தணைந்துட னேநின்ற நந்திரு நாரணனா ரிரங்காத காலங்க ளெல்லா மிழந்த பயன்பெறவோர் பெருங்காத லுற்றினி மேற்பிரி யாமை யுகந்தனமே.
13.10: கடிசூடு மூன்றுங் கழல்பணிந் தார்க்குக் கடிந்திடவே முடுசூடி நின்ற முகில்வண்ண னார்முன் னுலகளந்த வடிசூடு நாமவ ராதரத் தாலுடுத் துக்களையும் படிசூடி யன்புட னேபணி செய்யப் பணிந்தனமே.
13.11: தனதன் றிவையெனத் தானன் றெனமறை சொன்னவெலா மெனதென்றும் யானென்றும் மெண்ணுத லால்வரு மீனமெலா மனதொன்றி யின்று நமவென்ற தேகொண்டு மாற்றுதலாற் றனதன்றி யொன்று மிலாத்தனித் தாதை சதிர்த்தனனே.
13.12: சேர்க்குந் திருமகள் சேர்த்தியின் மன்னுதல் சீர்ப்பெரியோற் கேற்குங் குணங்க ளிலக்காம் வடிவி லிணையடிகள் பார்க்குஞ் சரணதிற் பற்றுத னந்நிலை நாம்பெறும்பே றேற்கின்ற வெல்லைக ளெல்லாக் களையற வெண்ணினமே.
ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசிகாய நம: சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
அடிவரவு: இன்னமுது, அருவுரு, ஓருயிராய், காரணமாய், வானமர், வேறோர், பெறுவது, அருமறை, சுருங்காவகிலம், கடிசூடு, தனதன்றிவை, சேர்க்கும், கல்லார்.
|