3.1: மூலங்கிளையென ஒன்றிரண்டானமொழியிரண்டு மேலொன்றிலையென நின்ற அவ்வித்தகன்றன்னுரையும் காலங்கழிவதன் முன்னம் கருத்துறக் கண்டிடவே ஞாலம் புகழுநந்தேசிகர் தாம் நமைவைத்தனரே.
3.2: காரணமுங்காவலனுமாகி என்றுங் கமலையுடன் பிரியாத நாதனான நாரணனுக்கடியேனா னடிமை பூண்ட நல்லடியார்க் கல்லான் மற்றொருவர்க் கல்லேன் ஆரணங்கள் கொண்டகமும் புறமுங்கண்டால் அறிவாகியறிவது மாயறு நான் கன்றிச் சீரணிந்த சுடர் போலத் திகழ்ந்து நின்றேன் சிலைவி சயன்றேரனைய சிருவேதத்தே.
3.3: யானெனதென்பதொன்றில்லை என்செய்வதவனையல்லால் ஆனதறிந்திடுந்தன் னடியார்க்கு எனையாட்படுத்தித் தானெனை நல்கி நடத்துகின்றான் தன்னருள் வழியே நானுனை வீடு செய்வேனென்ற நந்திரு நாரணனே.
3.4: யாதாமிவை யனைத்தும் படைத்தேந்துமிறைவனுமாய்க் கோதாங்குணங்களுடன் குறுகாத குணத்தனுமாய் மாதா பிதாவென மன்னுறவாய்க் கதியென்ன நின்றான் போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியனே
3.5: இருவிலங்கு கழித்திடரா முடலந்தன்னில் இலங்கு நடு நாடியினாலெம்மை வாங்கி ஒருவிலங்குநெறியல்லா வழியால் மன்னு முயர் வானிலேற்றியுயிர் நிலையுந்தந்து பெருவிலங்காமருடன்னால் தன்னடிக்கீழ்ப் பிரியாத வமரருடன் பிணைத்துத், தன்னா ருருவிலங்குமிசைவிக்கு மும்பர்போகம் உகந்து தருந்திரு மாலையுகந்தோநாமே.
3.6: உறவை யிசைந்திறை யில்லா வொருவற்கென்றும் ஒண்சுடராயோரெழுத்திலோங்கி நின்றேந் துறவறமுந்தூ மதியுந்துயரன் தீர்வுந் தூயவர்கட் கானமையு மிரண்டிலுற்றோம் அறமுயலுமனைத் துறவாயனைத்து மேந்தும் அம்புயத்தாள் கணவனை நாமணுகப் பெற்றோம் பிறவியறுத் தடிசூடி யடிமையெல்லாம் பிரியாதவமரருடன் பெற்றோ நாமே.
3.7 கருமமென ஞானமென வதனாற் கண்ட உயிர்கவருங்காதலெனக் கானிலோங்கும் அருமறையாற்றரு நிலையிலிந்நாளெல்லாம் அடியேனையலையாத வண்ணமெண்ணித் தருமமுடையாருரைக் கயானறிந்து தனெக்கென்னா வடிமைக்காம் வாழ்ச்சி வேண்டித் திருமகளோ டொருகாலும் பிரியா நாதன் றிண்கழலே சேதுவெனச் சேர்க்கின்றேனே.
3.8: வினைவிடுத்து வியன் குணத்தா லெம்மையாக்கி வெருவுரைகேட்டு அவைகேட்க விளம்பி, நாளுந் தனையனைத்து மடைந்திடத் தானடைந்து நின்ற தன்றிரு மாதுடனிறையுன் தனியா நாதன் நினைவழிக்கும் வினைவழிக்கு விலக்காய் நிற்கு நிகரில்லா நெடுங்குணங்கள் நிலைபெறத், தன கனை கழற் கீழடைக்கல மாக்காட்சிதந்து காரணனாந்தன் காவல் கவர்கின்றானே.
3.9: என்னதியான் செய்கின்றேனென்னா தாருக்கு இன்னடிமை தந்தளிப்பான், இமையோர் வாழும் பொன்னுலகிற்f றிருவுடனேயமர்ந்த நாதன் புனலாரும் பொழிலரங்கந் திகழ மன்னித் தன்னகல மகலாத தகவாலோங்குந் தகவுடனே தங்கருமந்தானேயெண்ணி அன்னையென வடைக்கலங்கொண் டஞ்ச றந்து என் னழலாற நிழலார வளிக்கின்றானே.
3.10: ஒண்டொடியாள் திருமகளுந் தானுமாகி ஒருநினைவா லீன்ற வுயிரெல்லா முய்ய வண்டுவரை நகர்வாழ வாசுதேவற்காய் மன்னவற்குத் தேர்ப்பாகனாகி நின்ற தண்டுள வமலர் மார்பன் தானே சொன்ன தனித்தருமன் தானெமக்காய்த், தன்னையென்றுங் கண்டுகளித் தடிசூட விலக்காய் நின்ற கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே.
3.11: துய்யமனத்தர் துறையணுகாத துணையிலியேன் ஐயமறுத்து உனதாணை கடத்தலகற்றினை நீ கையமர் சக்கரக் காவல் காக்குந் திருவருளால் வையமளந்த வடிக்கீழ் அடைக்கலம் வைத்தருளே.
3.12: அறியாத விடைச்சி யருமறியும் வண்ணம் அம்புயத்தாளுட னந்நா ளவதரித்த குறையாதுமில்லாத கோவிந்தா நின் குரைகழற் கீழடைக் கலமாங்குறிப்புத் தந்தாய் வெறியாரு மலர்மகளு நீயும் விண்ணில் விண்ணவர் களடி சூடவிருக்கு மேன்மை குறையாத வினையகற்றி யடிமை கொள்ளக் குறுகவொரு நன்னாணீ குறித்திடாயே.
3.13: தத்துவமுஞ் சாதனமும் பயனுங்காட்டுந் தாராமுதலிரு நான்கும், தன்கருத்தான் முத்திவழி நாமுயலும் வகையேகாண முகுந்தனிசைத் தருள் செய்தவைந் நாலைந்தும் பத்தி தனிற்படிவில்லார் பரஞ்சுமத்தப் பார்த்தன்றேர் முன்னே தாந்தாழ நின்ற உத்தமனார்த் தமநல்லுரை நாலெட்டும் உணர்ந்தவர் தாமுகந்தெம்மை யுணர்வித்தாரே.
3.14: பரக்கும் புகழ்வரும் பைம்பொருள் வாய்த்திடும், பத்தர்களாய் இரக்கின்றவர்க்கிவையீந்தால் அறமுளதென்றியம்பார் கரக்குங்கருதுடை தேசிகர் கன்றென நமையெண்ணிச் சுரக்குஞ்சுரவிகள்போல் சொரிகின்றனர் சொல்லமுதே.
3.15: சோகந்தவிர்க்கும் சுருதிப் பொருளொன்று சொல்லுகின்றோம் நாகந்தனக் குமிராக்கதற்கும் நமக்குஞ்சரணாம் ஆகண்டலன் மகனாகிய ஆவலிப்பேறிய, ஓர் காகம்பிழைத்திடக் கண்ணழிவே செய்த காகுத்தனே.
3.16: ஒருக்காலே சரணாக வடைகின்றாற்கும் உனக்கடிமை யாகின்றேனென் கின்றாற்கும் அருக்காதே யனைவர்க்கு மனைவராலும் அஞ்சேலென்றருள் கொடுப்பன், இதுதானோதும் இருக்காலு மெழின் முனிவர் நினைவினாலும் இவையறிவார் செயலுட நென்னிசை வினாலும் நெருக்காத நீள்விரதமெனக் கொன்றென்னும் நெறியுரைத்தார் நிலையுணர்ந்து நிலை பெற்றோமே.
3.17: பொன்னை யிகழ்ந்து விருகங்கள் புல்லிய புல்லுகந்தான் மன்னரெடுப்பது அப்பொன்னலதே, மன்னுலகனைத்துந் தன்னையடைந்திடத் தானருள் செய்யுந்தனிச்சிலையோன் பொன்னடி நாமடைந்தோம் புறமாரென்கொல்செய்திடினே.
3.18: வேதத்திரளின் விதியுணர்ந்தோர்கள் விரித்துரைத்த காதற்கதியையும் ஞானத்தையுங் கருமங்களையஞ் சாதிக்கவல்ல சரணாகதி தனிநின்ற நிலை யோதத்தொடங்கும் எழுத்தின் றிறத்திலுணர்மின்களே.
3.19: மூவுலகுந்தன் பிழையைத் தானே சாற்ற முனிவர்களுந்தேவர்களு முனிந்தவந்நாட் டாவரி தாயெங்கும் போய்த்தளர்ந்து வீழ்ந்த தனிக்காகன் தானிரந்த வுயிர்வழங்கிக் காவலினியெமக் கெங்குங்கடனென்றெண்ணிக் காணநிலையிலச் சினையன்றிட்ட வள்ளல் ஏவல் பயனிரக்கமிதற் காறென்றோதும் எழிலுடையாரிணையடிக் கீழிருப்போ நாமே.
3.20: திருத்தம் பெரியவர் சேருந்த்துறையில் செறிவிலர்க்கு வருத்தங்கழிந்த வழியருளென்ற நம்மண்மகளார் கருத்தொன்ற வாதிவராக முரைத்த கதியறிவார் பொருத்தந தெளிந்துரைக்கப் பொய்யிலா மதிபெற்றனமே.
3.21: இடம்பெற்றா ரெல்லாமென் னுடலாய் நிற்ப விடர்ப்பிறப்பென் றிவையில்லா வென்னை யன்பா லடம்பற்றா மவனென்று நினைந்தான் யாவ னவனாவி சரியும்போ தறிவு மாறி யுடம்பிற்றா ரூபலம்போற் கிடக்க நானே யுய்யும்வகை நினைந்துயர்ந்த கதியாம் லென்ற னிடம்பெற்றேன் னுடன்வாழ வெடுப்ப னென்ற வெம்பெருமா னருள்பெற்று மருள்செற் றோமே.
3.22: இரண்டுரை யாதநம் மேன முரைத்த வுரையிரண்டின் றிரண்ட பொருள்க டெளிந்தடி சூடினந் திண்ணருளாற் சுருண்டநஞ் ஞானச் சுடரொளி சுற்றும் பரப்பதன்முன் புரண்டது நம்வினை போமிடம் பார்த்தினிப் போமளவே.
3.23: மலையுங்குலையு மென்றெண்ணியும் வன்பெரும்புண்டிதிரங்கித் தலையும் வெளுத்தபின் றானேயழிய விசைகின்றிலீர் அலையுங்கடல் கொண்ட வையமளித்தவன் மெய்யருளே நிலையென்று நாடி நிலைநின்ற பொய்ம்மதி நீக்குமினே.
3.24: கண்ணன் கழல் தொழக் கூப்பியகையின் பெருமைதனை எண்ணங்கடக்க வெமுனைத் துறைவரியும் புதலாற் றிண்ணமிது வென்று தேறிதெளிந்தபின், சின்மதியோர் பண்ணும்பணிதிகள் பாற்றிப் பழந்தொழில் பற்றினமே.
3.25: பொங்குபுனலாறு களிர்புவனமெல்லாம் பொற்கழலாளந்தவன்றன் தாளால் வந்த கங்கையெனு நதிபோலக் கடல்களேழிற் கமலைபிறந்த வனுகந்த கடலேபோலச் சங்குகளிலே வனேந்துஞ்சங்கேபோலத் தாரிலவன் தண்டுளவத்தாரே போல எங்கள்குலபதிகளிவை மேலாமென்றே எண்ணிய நல்வார்த்தைகணா மிசைக்கின்றோமே.
3.26: சீர்க்கடலின் திரையென்னத் தகவால்மிக்க தேசிகராய்த் திண்ணருளாங்கடலை நீக்கிப் பாற்கடலோன் திருவணையாய் நின்று பாரங் காணாத பவக்கடலைக் கடத்துகின்றான் ஈர்க்குமரக் கலமென்ன விறைவரின்பம் எழுந்தழி யுங்குமிழியென விகந்தொழிந்தோ மார்க்கினி நாமென் கடவோ நமக்குமாரென் கடவாரென்று அடைந்தவர் கட்கறிவித் தோமே.
3.27: காசினியின் மணியனைத்துங்காயா வண்ணன் கடைந்தெடுத் தகவுத்துவத்தின் சீர்மைக்கொவ்வா காசிமுதலாகிய நன்னகரியெல்லாங் கார்மேனியருளாளர் கச்சிக் கொவ்வா மாசின் மனந்தெளி முனிவர் வகுத்த வெல்லா மாலுகந்த வாசிரியர் வார்த்தைக் கொவ்வாவா சியறிந்திவை யுரைத்தோம் வையத்துள்ளீர் வைப்பாக விவைகொண்டு மகிழ்மினீரே.
3.28: அந்தமிலாப்பேரின்ப மருந்தவேற்கும் அடியோமை யறிவுடனேயென்றுங்காத்து முந்தை வினை நிரைவழியி லொழுகாதெம்மை முன்னிலையாந்தேசிகர் தம்முன்னே சேர்த்து மந்திரமுமந்திரத்தின் வழியுங்காட்டி வழிப்படுத்தி வானேற்றியடிமை கொள்ளத் தந்தையென நின்றதனித் திருமால் தாளிற் றலைவைத் தோஞ்சடகோபனருளினாலே.
3.29: தான் தனக்குத் தன்னாலே தோன்றித் தன்னோர் ஒளியணைக்குங்கு ணதாலுந்த ன்னைக்கண்டு தான் தனக்கென்றறியாத தன்குணத்தைத் தன் குணத்தால் தானிறையில் தானே கூட்டி யூன்மருத்துப் புலன் மனமானாங்காரங்கள் ஒருமூலப் பிரகிருதி யன்றி நின்ற நான் தனக்குத் தான் தனக்கென் றிசைவுதந்த நாரணனை நான் மறையால் நான் கண்டேனே.
3.30: கழியாத கருவினையிற் படிந்த நம்மைக் காலமிது வென்றொரு காற்காவல் செய்து பழியாத நல்வினையிற் படிந்தார் தாளிற் பணிவித்துப் பாசங்களடைய நீக்கிச் சுழியாத செவ்வழியில் துணைவரோடே தொலையாத பேரின்பந்தர மேலேற்றி யழியாத வருளாழிப் பெருமான் செய்யும் அந்தமிலா வுதவியெலா மளப்பாராரே.
3.31: நின்னருளாங்கதியன்றி மற்றொன்றில்லேன் நெடுங்காலம் பிழை செய்த நிலை கழிந்தேன் உன்னருளுக் கினிதான நிலையுகந்தேன் உன் சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன் மன்னிருளாய் நின்ற நிலையெனக்குத் தீர்த்து வானவர்த்தம் வாழ்ச்சிதர வரித்தேனுன்னை யின்னருளாலினியெனக் கோர்பரமேற்றாமல் என்திரு மாலடைக் கலங்கொளென்னை நீயே.
3.32: பரவு மறைகளெலாம் பதஞ்சேர்ந்தொன்ற நின்ற பிரான் இரவன்றிரவியின் கலத் தழைத்த வெழிற்படையோன் அரவுங்கருடனுமன் புடனேந்தும் அடியிரண்டுந் தரவெந்த மக்கரு ளாற்றள ராமனந்தந்தனனே
3.33: அலர்ந்த வம்புயத்திருந்து தேனருந்தி இன்னகல் அல்குலாரசைந்தடைந்த நடைகொளாத தனமெனோ நலந்தவிர்ந்ததால் அதென்கொன் னாவின் வீறிழந்ததால் னாவணங்கு நாதர் தந்த நாவின் வீறிழந்ததென் சலந்தவிர்ந்து வாதுசெய்து சாடிமூண்டமிண்டரைச் சரிவிலேனெனக்கனைத்துறைத்த வேதிராசர்தம் வலந்தருங்கை நாயனார் வளைக்கிசைந்த கீர்த்தியால் வாரிபால தாமதமென்று மாசில்வாழிவாழியே.
3.34: சடையன் றிறலவர்கள் பெருஞானக்கடலதனை யிடையமிழாது கடக்கினும் ஈதளவென்றறியார் விடையுடனேழன்றடர்த்தவன் மெய்யருள் பெற்றநல்லோர் அடையவறிந்துரைக்க அடியோமுமறிந்தனமே.
3.35: பாவளருந் தமிழ்மறையின் பயனே கொண்ட பாண்பெருமாள் பாடியதோர் பாடல்பத்திற் காவலனுங்கணவனுமாய்க் கலந்துநின்ற காரணனைக் கறுத்துறநாங்கண்டபின்பு கோவலனுங்கோமானுமானவந்நாள் குரவைபிணை கோவியர்தங்குறி பேகொண்டு சேவலுடன் பிரியாத பெடைபோற்சேர்ந்து தீவினையோர் தனிமையெலாந் தீர்ந்தோநாமே.
3.36: ஆதிமறையென வோங்கு மரங்கத்துள்ளே அருளாருங்கடலைக் கண்டவன் நம்பாணன் ஓதியதோரிரு நான்குமிரண்டுமான ஒருபத்தும் பற்றாகவுணர்ந்துரைத்தோ நீதியறியாத நிலையறிவார்க்கெல்லா நிலையிதுவேயென்று நிலைநாடிநின்றோம் வேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக்கெல்லாம் விதையாகுமிது வென்றுவிளம்பினோமே.
3.37: காண்பன வுமுரைப்பனவு மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடியகாதற் பாண்பெருமாளருள் செய்த பாடல்பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம் வேண்பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்த வாரியெனன்றியம்பநின்றோ நாண்பெரியோமல்லோம் நாம் நன்றுந்தீது நமக்குரைப் பாருளரென்று நாடுவோமே.
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
அடிவரவு : மூலம், காரணமும், யானெனது, யாதாமிவை, இருவிலங்கு கழித்து, உறவை, கருமமென, வினைவிடுத்து, என்னதியான், ஒண்டொடியாள், துய்ய மனத்தர், அறியாத, தத்துவமும், பரக்கும், சோகம், ஒருக்காலே, பொன்னை, வேதத்திரள், மூவுலகும், திருத்தம், இடம்பெற்றார், இரண்டு, மலையும், கண்ணன்கழல், பொங்கு, சீர்க்கடல், காசினி, அந்தமிலாபேர், தான்தனக்கு, கழியாத, நின்னருள், பரவு, அலர்ந்த, சடையன், பாவளரும், ஆதிமறை, காண்பனவும், அடற்புள்.
|