|
||||||||
நூலுக்குப் புறனடை |
||||||||
கூறிய வல்ல வேறுபிற தோன்றினும்
கூறிய நெறியில் தேறினர் கொளலே
கருத்து : இந்நூலுள் கூறியவை அல்லாதனவாக வேறுவகைச் சிந்துப் பாடல்கள் காணப்பட்டாலும் அவற்றையும் இச்சிந்துப் பாடல் இலக்கண நெறியின் வழி ஆராய்ந்து ஒருபுடை ஒத்தனவற்றை அமைத்துக் கொள்க.
விளக்கம் : ‘இன்னவாறு என்னும் யாப்புறவின்றிக் கூறு பாவலர் குறிப்பில் அமைந்து வழங்கிடும்’ என்று முன்னர் கூறினார். (நூ.50) ஆனதாலும், கால ஓட்டத்தில் புதிய புதிய சிந்துப் பாடல்கள், பாடுகின்றவர் விரும்பும் வடிவில் தோன்றுதல் தவிர்க்க முடியாதது ஆதலாலும், ‘புதியன புகுதலும் வழுவில’ என்று நன்னூலார் கூறியுள்ளமையாலும் புதியனவாய்த் தோன்றும் சிந்துகளையும் இந்நூலின் இலக்கண மரபின் வழி ஆராய்ந்து அமைவுடையவற்றைக் கொள்க என்று கூறினார்.
வேறு வகையாக வரும் சிந்துப்பாடல்கள்
காட்டு : (1)
வினா
நூறாயி ரக்கணக் காகச்செ லவிட்டு
நூற்றுக்க ணக்காய்த்தி ரைப்படம் ஆக்கினர்
மாறான எண்ணத்தை மட்டக்க தைகளை
மக்களுக் கீந்தனர் அண்ணே - அது
தக்கதுவோ புகல் அண்ணே.
விடை
கூறும்தொ கைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்
கூட்டுத்தொ ழில்முறை நாட்டுக்கு நல்லது
ஏறாக்க ருத்தைஇங் கில்லாக்க தைகளை
ஏற்றின ரோஅவர் தம்பி? - இது
மாற்றாதி ருக்குமோ தம்பி?
(பா.தா.க. 2ஆம் தொகுதி. ப. 151)
காட்டு : (2)
செங்கதிர் சென்றது;
செவ்வல்லி பூத்தது;
திங்களும் வந்தது பாரடி! - உன்
செவ்விதழைச் சற்று நீட்டடி!
(வாணிதாசன், பாட்டுப் பிறக்குமடா. ப. 56)
காட்டு : (3)
ஆற்றல்மி குந்தவர் ஆட்சிபு ரிந்தவர்
ஆஸ்திக நீதிபதி - அவரே
பாஸ்கர சேதுபதி - புலவர்
போற்றும்தொல் காப்பியப் புத்தகம் போன்றவர்
போனபின் ஏது கதி?
(சுரதா. 1977.210)
காட்டு : (4)
சோற்றைப்பி டித்துத்தி ரட்டிய பிண்டம்போல்
பாட்டினைச் செய்வதுண்டோ? - புயல்
காற்றைப்பி டித்துக்க டலை அடைத்துக்
கனலை எழுப்பிட டா!
(ம.இ.லே. தங்கப்பா. 1983.109)
காட்டு : (5)
உன்பாடல் நான்பாடி விழிமூட வா? - உன்
ஒருபாடல் நான்கேட்டு வழிதேட வா?
கண்போன்ற அரிதான கவிமன்ன வா - உன்
கற்பூர மொழிகேட்டு கதைசொல்ல வா
(பாரதிவசந்தன், சின்னப்பறவையின் வண்ணச் சிறகுகள். ப. 61)
கூறிய வல்ல வேறுபிற தோன்றினும் கூறிய நெறியில் தேறினர் கொளலே கருத்து : இந்நூலுள் கூறியவை அல்லாதனவாக வேறுவகைச் சிந்துப் பாடல்கள் காணப்பட்டாலும் அவற்றையும் இச்சிந்துப் பாடல் இலக்கண நெறியின் வழி ஆராய்ந்து ஒருபுடை ஒத்தனவற்றை அமைத்துக் கொள்க.
விளக்கம் : ‘இன்னவாறு என்னும் யாப்புறவின்றிக் கூறு பாவலர் குறிப்பில் அமைந்து வழங்கிடும்’ என்று முன்னர் கூறினார். (நூ.50) ஆனதாலும், கால ஓட்டத்தில் புதிய புதிய சிந்துப் பாடல்கள், பாடுகின்றவர் விரும்பும் வடிவில் தோன்றுதல் தவிர்க்க முடியாதது ஆதலாலும், ‘புதியன புகுதலும் வழுவில’ என்று நன்னூலார் கூறியுள்ளமையாலும் புதியனவாய்த் தோன்றும் சிந்துகளையும் இந்நூலின் இலக்கண மரபின் வழி ஆராய்ந்து அமைவுடையவற்றைக் கொள்க என்று கூறினார்.
வேறு வகையாக வரும் சிந்துப்பாடல்கள்
காட்டு : (1) வினா நூறாயி ரக்கணக் காகச்செ லவிட்டு நூற்றுக்க ணக்காய்த்தி ரைப்படம் ஆக்கினர் மாறான எண்ணத்தை மட்டக்க தைகளை மக்களுக் கீந்தனர் அண்ணே - அது தக்கதுவோ புகல் அண்ணே. விடை கூறும்தொ கைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர் கூட்டுத்தொ ழில்முறை நாட்டுக்கு நல்லது ஏறாக்க ருத்தைஇங் கில்லாக்க தைகளை ஏற்றின ரோஅவர் தம்பி? - இது மாற்றாதி ருக்குமோ தம்பி? (பா.தா.க. 2ஆம் தொகுதி. ப. 151)
காட்டு : (2) செங்கதிர் சென்றது; செவ்வல்லி பூத்தது; திங்களும் வந்தது பாரடி! - உன் செவ்விதழைச் சற்று நீட்டடி! (வாணிதாசன், பாட்டுப் பிறக்குமடா. ப. 56)
காட்டு : (3) ஆற்றல்மி குந்தவர் ஆட்சிபு ரிந்தவர் ஆஸ்திக நீதிபதி - அவரே பாஸ்கர சேதுபதி - புலவர் போற்றும்தொல் காப்பியப் புத்தகம் போன்றவர் போனபின் ஏது கதி? (சுரதா. 1977.210)
காட்டு : (4) சோற்றைப்பி டித்துத்தி ரட்டிய பிண்டம்போல் பாட்டினைச் செய்வதுண்டோ? - புயல் காற்றைப்பி டித்துக்க டலை அடைத்துக் கனலை எழுப்பிட டா! (ம.இ.லே. தங்கப்பா. 1983.109)
காட்டு : (5) உன்பாடல் நான்பாடி விழிமூட வா? - உன் ஒருபாடல் நான்கேட்டு வழிதேட வா? கண்போன்ற அரிதான கவிமன்ன வா - உன் கற்பூர மொழிகேட்டு கதைசொல்ல வா (பாரதிவசந்தன், சின்னப்பறவையின் வண்ணச் சிறகுகள். ப. 61)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|