|
||||||||
இலாவணி |
||||||||
வினவல் விடுத்தல் எனவிரு புலவர்
பாடும் அமைப்பினைக் கூடும் இலாவணி
எண்சீர் அடிகள் இரண்டாய், ஈற்றில்
அடுக்குத் தொடராய் அமையும் இயைபும்
நான்மை நடையும் தான்பெற வருமே.
கருத்து : இரு புலவர்களில் ஒருவர் வினாவ, மற்றவர் அவ்வினாவுக்கு விடை கூறுவதாகப் பாடும் அமைப்பினைக் கொண்டது இலாவணிப் பாடலாகும். அது, ஒர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் எண் சீரடிகள் இரண்டு கொண்டதாய், அடியின் இறுதியில் அடுக்குத் தொடராய் அமைந்த இயைபைப் பெற்று, நான்மை நடையில் இயங்கும்.
விளக்கம் : முருகன் கோயில் திருவிழாக்களில் சிவன் காமனை எரித்தது பற்றிய விழா நடத்தும் போது, காமன் எரிந்தானா இல்லையா என்பதை வாதத்துக்குரிய பொருளாக வைத்து எரிந்த கட்சி, எரியாத கட்சி எனப் புலவர் இருவர் எதிரெதிரே அமர்ந்து கொண்டு ‘டேப்’ எனும் ஒரு தோற்கருவியை அடித்துப் பாட்டுப் பாடுவர். ஒருவரின் வினாவுக்கு மற்றொரு புலவர் விடை சொல்வதாக இக்காட்சி அமையும்.
அடியிறுதிகளில் அடுக்குத் தொடராக இயைபுத் தொடை அமைவது இதன் தனி இயல்பாகும்.
காட்டு :
மாசிலா மதுரகவி ராசசிங்கமே உமது
வலை மடக் கியேவையும் ஐயா ஐயா
மங்கையொடு பங்குடைய சங்கரன்நுதல்வழியால்
மன்மதன் எரிந்தகதை பொய்யா பொய்யா?
(சண்முகசுந்தரம்.சு.1977.188)
இந்த இலாவணிப் பாடல் வினாவல் முறையில் உள்ளது; இரண்டு எண்சீர் அடிகள் கொண்டுள்ளது; ‘ஐயா’ ‘ஐயா’, ‘பொய்யா’ ‘பொய்யா’ என்ற அடுக்குத் தொடரான இயைபு ஒவ்வோரடியின் இறுதியிலும் உள்ளது; நான்மை நடையில் நடக்கிறது.
46.
அடியிடைத் தனிச் சொல் அமைவன உளசில
கருத்து : இரண்டு அடிகளுக்கிடையே (முதலடியின் இறுதியில்) தனிச்சொல் அமைந்த இலாவணிப் பாடல்களும் உள்ளன.
விளக்கம் : தனிச்சொல் இன்றிவரும் இலாவணிப் பாடல்களே பெரும்பான்மை. சில இலாவணிகள் முதலடியில் ஈரசைத் தனிச் சொல்லைப் பெற்று வருவதுண்டு.
காட்டு :
செஞ்சடை விரித்துத்தவம் துஞ்சிடா திருக்கும் ஈசன்
தெரிசனம் தன்னைமதன் கண்டு கண்டு - அப்போ
அஞ்சாமல் மலர்க்கணையைப் பஞ்சபாணனும் விடவே
அரனார் அதிக கோபம் கொண்டு கொண்டு.
(தொடை.ப.285)
இதில் முதலடியின் இறுதியில் ‘அப்போ’ என்ற ஈரசை தனிச்சொல் வந்துள்ளதை அறிக.
வினவல் விடுத்தல் எனவிரு புலவர் பாடும் அமைப்பினைக் கூடும் இலாவணி எண்சீர் அடிகள் இரண்டாய், ஈற்றில் அடுக்குத் தொடராய் அமையும் இயைபும் நான்மை நடையும் தான்பெற வருமே. கருத்து : இரு புலவர்களில் ஒருவர் வினாவ, மற்றவர் அவ்வினாவுக்கு விடை கூறுவதாகப் பாடும் அமைப்பினைக் கொண்டது இலாவணிப் பாடலாகும். அது, ஒர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் எண் சீரடிகள் இரண்டு கொண்டதாய், அடியின் இறுதியில் அடுக்குத் தொடராய் அமைந்த இயைபைப் பெற்று, நான்மை நடையில் இயங்கும்.
விளக்கம் : முருகன் கோயில் திருவிழாக்களில் சிவன் காமனை எரித்தது பற்றிய விழா நடத்தும் போது, காமன் எரிந்தானா இல்லையா என்பதை வாதத்துக்குரிய பொருளாக வைத்து எரிந்த கட்சி, எரியாத கட்சி எனப் புலவர் இருவர் எதிரெதிரே அமர்ந்து கொண்டு ‘டேப்’ எனும் ஒரு தோற்கருவியை அடித்துப் பாட்டுப் பாடுவர். ஒருவரின் வினாவுக்கு மற்றொரு புலவர் விடை சொல்வதாக இக்காட்சி அமையும்.
அடியிறுதிகளில் அடுக்குத் தொடராக இயைபுத் தொடை அமைவது இதன் தனி இயல்பாகும்.
காட்டு : மாசிலா மதுரகவி ராசசிங்கமே உமது வலை மடக் கியேவையும் ஐயா ஐயா மங்கையொடு பங்குடைய சங்கரன்நுதல்வழியால் மன்மதன் எரிந்தகதை பொய்யா பொய்யா?
(சண்முகசுந்தரம்.சு.1977.188) இந்த இலாவணிப் பாடல் வினாவல் முறையில் உள்ளது; இரண்டு எண்சீர் அடிகள் கொண்டுள்ளது; ‘ஐயா’ ‘ஐயா’, ‘பொய்யா’ ‘பொய்யா’ என்ற அடுக்குத் தொடரான இயைபு ஒவ்வோரடியின் இறுதியிலும் உள்ளது; நான்மை நடையில் நடக்கிறது.
46. அடியிடைத் தனிச் சொல் அமைவன உளசில கருத்து : இரண்டு அடிகளுக்கிடையே (முதலடியின் இறுதியில்) தனிச்சொல் அமைந்த இலாவணிப் பாடல்களும் உள்ளன.
விளக்கம் : தனிச்சொல் இன்றிவரும் இலாவணிப் பாடல்களே பெரும்பான்மை. சில இலாவணிகள் முதலடியில் ஈரசைத் தனிச் சொல்லைப் பெற்று வருவதுண்டு.
காட்டு : செஞ்சடை விரித்துத்தவம் துஞ்சிடா திருக்கும் ஈசன் தெரிசனம் தன்னைமதன் கண்டு கண்டு - அப்போ அஞ்சாமல் மலர்க்கணையைப் பஞ்சபாணனும் விடவே அரனார் அதிக கோபம் கொண்டு கொண்டு. (தொடை.ப.285) இதில் முதலடியின் இறுதியில் ‘அப்போ’ என்ற ஈரசை தனிச்சொல் வந்துள்ளதை அறிக.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|