|
||||||||
அசை |
||||||||
சிந்துப் பாக்களின் சீர்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் ஓரசை யாகும்
கருத்து : சிந்துப் பாக்களில் அமைந்திருக்கின்ற சீர்களில் உள்ள உயிர்க்குறில், உயிர்நெடில், மெய்யோடு கூடிய குறில், நெடில் (உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில்) ஆகிய ஓவ்வோருயிரும் ஓரசையாகவே கொள்ளப்படும்.
விளக்கம் : சிந்து ஒருவகை இசைப்பா. இயற்பாக்கள் கவி, கவிதை, செய்யுள் என்று குறிப்பிடப் பெறும்.
இயற்பாக்கள், சந்தப்பாக்கள், வண்ணப்பாக்கள், சிந்துப்பாக்கள், ஆகியவற்றில் ஒன்றின் இலக்கணமுறை மற்றவற்றிற்குப் பொருந்தி வரவில்லை.
இயற்பாக்களில்: குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று (ப, பல், பா, பால்) நேரசை என்றும்;
குறிலிணை, குறிலிணைஒற்று, குறில்நெடில், குறில்நெடில்ஒற்று, (அணி, அணில், கடா, கடாம்) நிரையசை என்றும் கொள்ளப்படுகின்றன.
சந்தப்பாக்களில்: குறில் ஒரு மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை என்ற முறையில் சந்த மாத்திரை அளவாகக் கொள்ளப்படுகின்றன.
(எழுத்திலக்கணத்தில் குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று முறையே ஒன்று, ஒன்றரை, இரண்டு, இரண்டரை மாத்திரை பெறும்.)
வண்ணப்பாக்கள்: சந்தக் குழிப்புகளின் வழி நடக்கின்றன.
சிந்துப்பாக்கள்: தாள அளவின் வழி நடக்கின்றன.
சிந்துப் பாடல்கள் தாள அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளதால்தான் மற்ற பாக்களான இயற்பா, சந்தப்பா, வண்ணப்பாக்களுக்கான அசை, சீர், அடி, தொடை, மாத்திரை முதலியன இதற்கு ஒத்துவராமற் போகின்றன.
தாள அடிப்படையில் அமைந்த சிந்துப்பாடல்களில் உள்ள அசைகளையும், சீர்களையும் உணர வேண்டுமெனில் முதலில் தாளத்தையும் அதன் உள்ளுறுப்புகளையும் உணர வேண்டும். தாளம் ஏழு: அவை: துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திருபுடை, அட, ஏக என்பனவாகும். இவற்றில்ன் உள்ளுறுப்புகள் மூன்று; அவை: கோல் (இலகு) - சுழி (திருதம்) - அரைச்சுழி (அனுத்திருதம்).
கோல் 1 என்றும், சுழி 0 என்றும், அரைச்சுழி அரைவட்ட வடிவிலும் குறிக்கப்பெறும்.
சுழி இரண்டு எண்ணிக்கையுடையது. அரைச்சுழி ஒர் எண்ண்ணிக்கை உடையது. இவையிரண்டும் எண்ணிக்கையில் மாறாதவை. கோல் மட்டும் இனத்தைப் பொறுத்து எண்ணிக்கை மாறக் கூடியது.
கோலும் இனங்களும் (சாதிகளும்):
மேற்குறித்த ஏழு தாளங்களுக்கும் இனங்கள் உண்டு. அவை மும்மை (திசிரம்), நான்மை (சதுசிரம்), ஐம்மை (கண்ட), எழுமை (மிசிரம்), ஒன்பான்மை (சங்கீரணம்) என ஐந்தாகும். இவற்றின் எண்ணிக்கை முறையே மூன்று, நான்கு, ஐந்து, எழு, ஒன்பது என்பனவாகும்.
ஒரு தாளத்தில் உள்ள கோல் இந்த ஐந்து இனத்துக்குரிய எண்ணிக்கைகளைத் தனித்தனியே பெறும்போது அத்தாளம் ஐந்து வகையாகிறது. இப்படியே ஏழு தாளங்களும் (7 தாளம் x 5 இனம்)= 35 வகையாகும். எடுத்துக்காட்டாகத் திரிபுடைத் தாளம் மும்மை இனமாயின் ‘மும்மையினத் திரிபுடை’ (திசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதனை ‘1300’ என்று குறிப்பார்கள். இதன் மொத்த எண்ணிக்கை (3+2+2) ஏழாகும். இதே திரிபுடைத் தாளம் நான்மை இனமாயின் நான்மைத் திரிபுடை (சதுசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதன் குறியீடு ‘1400’ ஆகும். இதன் மொத்த எண்ணிக்கை (4+2+2) எட்டாகும். இப்படியே முப்பத்தைந்து தாளத்துக்கும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.
வட்டணை (ஆவர்த்தம்)
நான்மை இனத் திரிபுடைத் தாளத்திற்கு நடைமுறையில் ஆதி தாளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஒரு தாளத்தின் முழுநீளம் ஒரு வட்டணை எனப்படும்.
தாளம் போடும் முறை:
கோல் - ஒரு தட்டுத் தட்டி அதற்குரிய எண்ணிக்கை (தட்டுடன் சேர்த்து) எண்ண வேண்டும். சுழி - ஒரு தட்டுத் தட்டித் திருப்ப வேண்டும். அரைச்சுழி - ஒரு தட்டுத் தட்ட வேண்டும்.
சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும்போது அடியின் முற்பகுதி ஒரு கோலிலும், 14 அடுத்தபகுதி இரண்டு சுழிகளிலும் ‘00’ அடங்குகின்றன. இப்படித் தாளத்தின் ஒரு வட்டணையிலோ, பல வட்டணைகளிலோ ஓரடி அடங்குகிறது.
1 2 3 4
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக்தி
5 6 7 8
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . . . . .
(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)
மேற்காட்டிய கோலிற்குரிய நான்கு எண்ணிக்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில், இதன் ஓரடி முழுவதும் அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லையென்றாலும் எழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி. எனவே இவ்வடியில் 8 சீர்கள் உள்ளன. இதனை எண்சீர்க் கழிநெடிலடி எனலாம். இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்குகிறது.
இந்தப் பாடலில் கோடிட்டுக் காட்டியபடி 8 சீர்கள் உள்ளன. ஒற்று நீக்கிய உயிர்நெடில், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் ஆகிய பதினெட்டு உயிரெழுத்துகள் (சிந்துப்பாடலில் உயிரும் உயிர்மெய்யும் உயிராகவே கொள்ளப்படும்) எட்டு சீர்களாக இசைக்கின்றன.
சிந்துப்பாக்களில் அசைகள், இயற்ப்பாக்களுக்குச் சொல்லப்படும் நேரசை, நிரையசை இவற்றினின்றும் வேறுபட்டவை. சிந்துப்பாவின் அசைகள் நீளத்தில் சமமானவை என்று கூறலாமேயன்றி அவற்றை அளவிட்டு இத்தனை மாத்திரை என்று கூறமுடியாது.
சிந்துப்பாடல்களில் உள்ள சீர்களும் இயற்பாக்களுக்கு அமைந்துள்ள மா, விளம், காய், கனி, பூ, நிழல் முதலிய சீர்களினின்றும் வேறுபட்டவை என்பதை உணர வேண்டும். சிந்துப்பாக்களைத் தாளம் போட்டு பாடும்போது ஒரு தட்டில் அடங்குவது ஒரு சீர். அந்தச்சீர் ஒரு எழுத்தாலோ, பல எழுத்துகளாலோ, ஒரு சொல்லாலோ, பல சொற்களாலோ அமைந்திருக்கலாம். எழுத்துக் குறைவாக உள்ள சீர்கள் தாள எண்ணிக்கையின் நீளத்திற்கு நீண்டு ஒலிக்கும்.
மும்மை நடைப்பாடலாயின் ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று உயிர்களும், நான்மை நடைப்பாடலாயின் நான்கு நான்கு உயிர்களும், ஐம்மையாயின் ஐந்தைந்து உயிர்களும், எழுமையாயின் ஏழேழு உயிர்களும், ஒன்பான்மையாயின் ஒன்பதொன்பது உயிர்களும் இருக்கும். எழுத்துக் குறைகின்ற சீர்களில் ஓசை நீட்டம் இருக்கும்.
‘அவ்வெழுத்து அசைத்து இசைகோடலின் அசையே’
(யா.கலம்.நூ.1 உரை மேற்கோள்)
என்றதனால், எழுத்தை அசைத்து இசை கொள்வதே அசை என்பதும் நோக்கற்பாலது. ஆகவே சிந்துப்பாக்களில் சீர்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் ஓரசையாகும் என்பது தெளிவு.
7.
கருத்து : குறிலாகவும், நெடிலாகவும் உள்ள உயிரெழுத்துகளும், உயிர்மெய்க் குற்றெழுத்துகளும், உயிர்மெய் நெட்டெழுத்துகளும் தனித்து வரின் ஓரசையாகும், ஒற்றடுத்து வரினும் ஓரசையாகும்.
காட்டு: அ ஆ
அல் ஆல்
க கா
கல் கால்
விளக்கம் : இயற்பா இலக்கணத்தில் குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று நேரசை என்றும், குறிலிணை குறிலிணை ஒற்று, குறில் நெடில், குறில் நெடில் ஒற்று நிரையசை என்றும் இரண்டு பாகுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த பாகுபாடுகளும் சிந்துப்பாக்களுக்கு இல்லை. சிந்துப் பாக்களில் வருகின்ற ஒவ்வோர் உயிரெழுத்தும் ஓரசை என்றே கொள்ளப்படுகிறது.
அசை பிரியும் போது ஒற்றெழுத்துகள் முன் அசையின் இறுதியில் சேர்க்கப்படும். அசையானது ஒற்றெழுத்தால் தொடங்காது. ஒற்றெழுத்து, சொற்களுக்கு முதலாக வருதல் தமிழ் மரபன்று. அதனால் அசைகளும் சீர்களுக்கும், வரிகளுக்கும் முதலாக வைப்பதில்லை.
க என்னும் குறிலும், கல் என்ற குறிலொற்றும், ஆ என்ற நெடிலும், ஆல் என்ற நெடிலொற்றும் எப்படிச் சமமாக ஒலிக்கின்றன என்ற ஐயம் எழலாம். எழுத்திலக்கணத்தில் அவை முறையே ஒன்று, ஒன்றரை, இரண்டு, இரண்டரை மாத்திரைகளைப் பெறும். ஆனால் சந்தப்பாவிலக்கணத்தில் அவை முறையே ஒன்று, இரண்டு, இரண்டு, இரண்டு மாத்திரைகளைப் பெறும். (சந்தப்பா இலக்கணப்படிக் குறில் ஒரு மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை) அது போல் சிந்துப்பாவின் அசைகள் தனியான வேறு இயல்பைப் பெறுகின்றன. அவையனைத்துமே சமமான ஓசையுடையவை. (சிந்துப்பாவின் அசைகள் நீளத்தில் சமமானவை என்று கூறலாமேயன்றி அவற்றை அளவிட்டு இத்தனை மாத்திரை என்று கூறுதல் இயலாது)
சிந்துப் பாக்களின் சீர்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் ஓரசை யாகும் கருத்து : சிந்துப் பாக்களில் அமைந்திருக்கின்ற சீர்களில் உள்ள உயிர்க்குறில், உயிர்நெடில், மெய்யோடு கூடிய குறில், நெடில் (உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில்) ஆகிய ஓவ்வோருயிரும் ஓரசையாகவே கொள்ளப்படும்.
விளக்கம் : சிந்து ஒருவகை இசைப்பா. இயற்பாக்கள் கவி, கவிதை, செய்யுள் என்று குறிப்பிடப் பெறும்.
இயற்பாக்கள், சந்தப்பாக்கள், வண்ணப்பாக்கள், சிந்துப்பாக்கள், ஆகியவற்றில் ஒன்றின் இலக்கணமுறை மற்றவற்றிற்குப் பொருந்தி வரவில்லை.
இயற்பாக்களில்: குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று (ப, பல், பா, பால்) நேரசை என்றும்; குறிலிணை, குறிலிணைஒற்று, குறில்நெடில், குறில்நெடில்ஒற்று, (அணி, அணில், கடா, கடாம்) நிரையசை என்றும் கொள்ளப்படுகின்றன.
சந்தப்பாக்களில்: குறில் ஒரு மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை என்ற முறையில் சந்த மாத்திரை அளவாகக் கொள்ளப்படுகின்றன. (எழுத்திலக்கணத்தில் குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று முறையே ஒன்று, ஒன்றரை, இரண்டு, இரண்டரை மாத்திரை பெறும்.)
வண்ணப்பாக்கள்: சந்தக் குழிப்புகளின் வழி நடக்கின்றன.
சிந்துப்பாக்கள்: தாள அளவின் வழி நடக்கின்றன.
சிந்துப் பாடல்கள் தாள அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளதால்தான் மற்ற பாக்களான இயற்பா, சந்தப்பா, வண்ணப்பாக்களுக்கான அசை, சீர், அடி, தொடை, மாத்திரை முதலியன இதற்கு ஒத்துவராமற் போகின்றன.
தாள அடிப்படையில் அமைந்த சிந்துப்பாடல்களில் உள்ள அசைகளையும், சீர்களையும் உணர வேண்டுமெனில் முதலில் தாளத்தையும் அதன் உள்ளுறுப்புகளையும் உணர வேண்டும். தாளம் ஏழு: அவை: துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திருபுடை, அட, ஏக என்பனவாகும். இவற்றில்ன் உள்ளுறுப்புகள் மூன்று; அவை: கோல் (இலகு) - சுழி (திருதம்) - அரைச்சுழி (அனுத்திருதம்).
கோல் 1 என்றும், சுழி 0 என்றும், அரைச்சுழி அரைவட்ட வடிவிலும் குறிக்கப்பெறும். சுழி இரண்டு எண்ணிக்கையுடையது. அரைச்சுழி ஒர் எண்ண்ணிக்கை உடையது. இவையிரண்டும் எண்ணிக்கையில் மாறாதவை. கோல் மட்டும் இனத்தைப் பொறுத்து எண்ணிக்கை மாறக் கூடியது.
கோலும் இனங்களும் (சாதிகளும்):
மேற்குறித்த ஏழு தாளங்களுக்கும் இனங்கள் உண்டு. அவை மும்மை (திசிரம்), நான்மை (சதுசிரம்), ஐம்மை (கண்ட), எழுமை (மிசிரம்), ஒன்பான்மை (சங்கீரணம்) என ஐந்தாகும். இவற்றின் எண்ணிக்கை முறையே மூன்று, நான்கு, ஐந்து, எழு, ஒன்பது என்பனவாகும்.
ஒரு தாளத்தில் உள்ள கோல் இந்த ஐந்து இனத்துக்குரிய எண்ணிக்கைகளைத் தனித்தனியே பெறும்போது அத்தாளம் ஐந்து வகையாகிறது. இப்படியே ஏழு தாளங்களும் (7 தாளம் x 5 இனம்)= 35 வகையாகும். எடுத்துக்காட்டாகத் திரிபுடைத் தாளம் மும்மை இனமாயின் ‘மும்மையினத் திரிபுடை’ (திசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதனை ‘1300’ என்று குறிப்பார்கள். இதன் மொத்த எண்ணிக்கை (3+2+2) ஏழாகும். இதே திரிபுடைத் தாளம் நான்மை இனமாயின் நான்மைத் திரிபுடை (சதுசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதன் குறியீடு ‘1400’ ஆகும். இதன் மொத்த எண்ணிக்கை (4+2+2) எட்டாகும். இப்படியே முப்பத்தைந்து தாளத்துக்கும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.
வட்டணை (ஆவர்த்தம்)
நான்மை இனத் திரிபுடைத் தாளத்திற்கு நடைமுறையில் ஆதி தாளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஒரு தாளத்தின் முழுநீளம் ஒரு வட்டணை எனப்படும்.
தாளம் போடும் முறை:
கோல் - ஒரு தட்டுத் தட்டி அதற்குரிய எண்ணிக்கை (தட்டுடன் சேர்த்து) எண்ண வேண்டும். சுழி - ஒரு தட்டுத் தட்டித் திருப்ப வேண்டும். அரைச்சுழி - ஒரு தட்டுத் தட்ட வேண்டும்.
சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும்போது அடியின் முற்பகுதி ஒரு கோலிலும், 14 அடுத்தபகுதி இரண்டு சுழிகளிலும் ‘00’ அடங்குகின்றன. இப்படித் தாளத்தின் ஒரு வட்டணையிலோ, பல வட்டணைகளிலோ ஓரடி அடங்குகிறது. 1 2 3 4 ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக்தி 5 6 7 8 ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . . . . . (அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)
மேற்காட்டிய கோலிற்குரிய நான்கு எண்ணிக்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில், இதன் ஓரடி முழுவதும் அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லையென்றாலும் எழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி. எனவே இவ்வடியில் 8 சீர்கள் உள்ளன. இதனை எண்சீர்க் கழிநெடிலடி எனலாம். இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்குகிறது.
இந்தப் பாடலில் கோடிட்டுக் காட்டியபடி 8 சீர்கள் உள்ளன. ஒற்று நீக்கிய உயிர்நெடில், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் ஆகிய பதினெட்டு உயிரெழுத்துகள் (சிந்துப்பாடலில் உயிரும் உயிர்மெய்யும் உயிராகவே கொள்ளப்படும்) எட்டு சீர்களாக இசைக்கின்றன.
சிந்துப்பாக்களில் அசைகள், இயற்ப்பாக்களுக்குச் சொல்லப்படும் நேரசை, நிரையசை இவற்றினின்றும் வேறுபட்டவை. சிந்துப்பாவின் அசைகள் நீளத்தில் சமமானவை என்று கூறலாமேயன்றி அவற்றை அளவிட்டு இத்தனை மாத்திரை என்று கூறமுடியாது.
சிந்துப்பாடல்களில் உள்ள சீர்களும் இயற்பாக்களுக்கு அமைந்துள்ள மா, விளம், காய், கனி, பூ, நிழல் முதலிய சீர்களினின்றும் வேறுபட்டவை என்பதை உணர வேண்டும். சிந்துப்பாக்களைத் தாளம் போட்டு பாடும்போது ஒரு தட்டில் அடங்குவது ஒரு சீர். அந்தச்சீர் ஒரு எழுத்தாலோ, பல எழுத்துகளாலோ, ஒரு சொல்லாலோ, பல சொற்களாலோ அமைந்திருக்கலாம். எழுத்துக் குறைவாக உள்ள சீர்கள் தாள எண்ணிக்கையின் நீளத்திற்கு நீண்டு ஒலிக்கும்.
மும்மை நடைப்பாடலாயின் ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று உயிர்களும், நான்மை நடைப்பாடலாயின் நான்கு நான்கு உயிர்களும், ஐம்மையாயின் ஐந்தைந்து உயிர்களும், எழுமையாயின் ஏழேழு உயிர்களும், ஒன்பான்மையாயின் ஒன்பதொன்பது உயிர்களும் இருக்கும். எழுத்துக் குறைகின்ற சீர்களில் ஓசை நீட்டம் இருக்கும்.
‘அவ்வெழுத்து அசைத்து இசைகோடலின் அசையே’ (யா.கலம்.நூ.1 உரை மேற்கோள்) என்றதனால், எழுத்தை அசைத்து இசை கொள்வதே அசை என்பதும் நோக்கற்பாலது. ஆகவே சிந்துப்பாக்களில் சீர்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் ஓரசையாகும் என்பது தெளிவு.
7. கருத்து : குறிலாகவும், நெடிலாகவும் உள்ள உயிரெழுத்துகளும், உயிர்மெய்க் குற்றெழுத்துகளும், உயிர்மெய் நெட்டெழுத்துகளும் தனித்து வரின் ஓரசையாகும், ஒற்றடுத்து வரினும் ஓரசையாகும். காட்டு: அ ஆ அல் ஆல் க கா கல் கால் விளக்கம் : இயற்பா இலக்கணத்தில் குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று நேரசை என்றும், குறிலிணை குறிலிணை ஒற்று, குறில் நெடில், குறில் நெடில் ஒற்று நிரையசை என்றும் இரண்டு பாகுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த பாகுபாடுகளும் சிந்துப்பாக்களுக்கு இல்லை. சிந்துப் பாக்களில் வருகின்ற ஒவ்வோர் உயிரெழுத்தும் ஓரசை என்றே கொள்ளப்படுகிறது.
அசை பிரியும் போது ஒற்றெழுத்துகள் முன் அசையின் இறுதியில் சேர்க்கப்படும். அசையானது ஒற்றெழுத்தால் தொடங்காது. ஒற்றெழுத்து, சொற்களுக்கு முதலாக வருதல் தமிழ் மரபன்று. அதனால் அசைகளும் சீர்களுக்கும், வரிகளுக்கும் முதலாக வைப்பதில்லை.
க என்னும் குறிலும், கல் என்ற குறிலொற்றும், ஆ என்ற நெடிலும், ஆல் என்ற நெடிலொற்றும் எப்படிச் சமமாக ஒலிக்கின்றன என்ற ஐயம் எழலாம். எழுத்திலக்கணத்தில் அவை முறையே ஒன்று, ஒன்றரை, இரண்டு, இரண்டரை மாத்திரைகளைப் பெறும். ஆனால் சந்தப்பாவிலக்கணத்தில் அவை முறையே ஒன்று, இரண்டு, இரண்டு, இரண்டு மாத்திரைகளைப் பெறும். (சந்தப்பா இலக்கணப்படிக் குறில் ஒரு மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை) அது போல் சிந்துப்பாவின் அசைகள் தனியான வேறு இயல்பைப் பெறுகின்றன. அவையனைத்துமே சமமான ஓசையுடையவை. (சிந்துப்பாவின் அசைகள் நீளத்தில் சமமானவை என்று கூறலாமேயன்றி அவற்றை அளவிட்டு இத்தனை மாத்திரை என்று கூறுதல் இயலாது)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|