உள்ளிருந் தெழுந்து புறம்புநின் றெரியும் அளவாத் திருமணி அளித்த லானும் கொலைமுதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து கொழுஞ்சினை மிடைந்து குளிரொடு பொதுளிய நெடுமரத்து இளங்கா நிலைத்த லானும் (5)
பாசடை உம்பர் நெடுஞ்சுனை விரிந்த பேரிதழ்த் தாமரை பெருக லானும் நெடுவிசும்பு அணவும் பெருமதி தாங்கி உடையா அமுதம் உறைத லானும் இளமையும் தொங்கலும் இன்பமும் ஒருகால் (10)
வாடாத் தேவர்கள் மணத்த லானும் நூறுடை மகத்தில் பேறுகெமண் டிருந்த புரந்தரன் போலும் பொன்எயில் எறிந்த மணிவேற் குமரன் திருவளர் குன்றம் பேரணி உடுத்த பெருநகர்க் கூடல் (15)
கோயில்கொண் டிருந்த குணப்பெருங் குன்றம் அருந்தவக் கண்ணினோடு இருந்தமா முனிபால் பேரிருள் மாயைப் பெண்மகவு இரக்க உவர்முதல் கிடந்த சுவையேழ் அமைத்துக் கொடுத்தமெய்ப் பிண்டம் குறியுடன் தோன்றிய (20)
எழுநீர்ச் சகரர்கள் ஏழ்அணி நின்று மண்புக மூழ்கிய வான்பரி பிணிக்க பல்முக விளக்கின் பரிதியில் தோட்டிய வேலைக் குண்டகழ் வயிறலைத் தெழுந்த பெருங்கார்க் கருங்கடு அரும்பிய மிடற்றோன் (25)
எறிந்துவீழ் அருவியும் எரிமணி ஈட்டமும் உள்ளுதோறு உள்ளுதோறு உள்நா அமுதுறைக்கும் திருமுத் தமிழும் பெருகுதென் மலையத்து ஆரப் பொதும்பரி அடைகுளிர் சாரல் சுரும்புடன் விரிந்த துணைமலர்க் கொடியே (30)
விண்விரித்து ஒடுக்கும் இரவிவெண் கவிகைக்கு இட்டுறை காம்பென விட்டெழு காம்பே மரகதம் சினைத்த சிறைமயிற் குலமே! நீலப் போதும் பேதையும் விழித்த பொறிஉடல் உழையே! எறிபரல் மணியே! (35)
பாசிழைப் பட்டு நூல்கழி பரப்பிய கிளைவாய்க் கிளைத்த வளைவாய்க் கிளியே! மைந்தர்கண் சென்று மாதர்உள் தழைத்த பொழிமதுப் புதுமலர்ப் போர்க்குடைச் சுரும்பே! வெறிமுதிர் செம்மலர் முறிமுகம் கொடுக்கும் (40)
சந்தனப் பொதும்பர்த் தழைசினைப் பொழிலே கொள்ளைஅம் சுகமும் குருவியும் கடிய இருகால் கவணிற்கு எறிமணி சுமந்த நெடுங்கால் குற்றுழி நிழல்வைப்பு இதணே! நெருநல் கண்டஎற்கு உதவுழி இன்பம் (45)
இற்றையின் கரந்த இருள்மனம் என்னை? இவண்நிற்க வைத்த ஏலாக் கடுங்கண் கொடுத்துண் டவர்பின் கரந்தமை கடுக்கும் ஈங்கிவை கிடக்க என்நிழல் இரும்புனத்து இருந்தொளிர் அருந்தேன் இலதால் நீரும் (50)
நின்புனம் அல்லஎன்று என்புலம் வெளிப்பட அறைதல் வேண்டும் அப்புனம் நீரேல் முன்னம் கண்டவன் அன்றென்று உன்னா உதவுதல் உயர்ந்தோர் கடனே. (54)
|