நிறைமதி புரையா நிறைமதி புரையா தேரான் தெளிவெனும் திருக்குறள் புகுந்து குறைமதி மனனே நிறைமதி புரையா உவர்க்கடற் பிறந்தும் குறைவுடல் கோடியும் கருங்கவைத் தீநாப் பெரும்பொறிப் பகுவாய்த் (5)
தழல்விழிப் பாந்தள் தான்இரை மாந்தியும் மிச்சில் உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும் தணந்தோர்க்கு எரிந்தும் மணந்தோர்க்கு அளித்தும் குமுதம் மலர்த்தியும் கமலம் குவித்தும் கடல்சூழ் உலகில் மதிநடு இகந்தும் (10)
பெருமறை கூறி அறைவிதி தோறும் முத்தழற்கு உடையோன் முக்கட் கடவுளென்று உய்த்திடும் வழக்குக் கிடக்கஎன் றொருகால் வானவர் நதிக்கரை மருள்மகம் எடுத்த தீக்குணத் தக்கன் செருக்களம் தன்னுள் (15)
கண்தொறும் விசைத்த கருப்புத் தரளமும் வளைஉமிழ் ஆரமும் சுரிமுகச் சங்கும் வலம்புரிக் கூட்டமும் சலஞ்சலப் புஞ்சமும் நந்தின் குழுவும் வயல்வயல் நந்தி உழவக் கணத்தர் படைவாள் நிறுத்தும் (20)
கூடற்கு இறையோன் குரைகழற் படையால் ஈர்எண் கலையும் பூழிபட் டுதிர நிலனொடு தேய்ப்புண்டு அலமந்து உலறியும் சிதைந்து நைந்தெழு பழித்தீ மதிபுரையா முண்டகம் மலர்த்தி முதிராது அலர்ந்தும் (25)
அமுதம் நின்றிரைத்தும் அறிவு அறிவித்தும் தீக்கதிர் உடலுள் செல்லா திருந்தும் திளையாத் தாரைகள் சேரா முளையா வென்றி இவள்முக மதிக்கே. (29)
|