|
||||||||
வாசல் |
||||||||
ஒரு காகம் மீன் தலை போட்டது.
இன்னொன்று எச்சமடித்துப் பறந்தது
எனது காதலி எழுதிய கடிதத்தில்.
நான் நிலாக்காலம் வந்தால் மகிழ்கின்ற இடம்
அழகிற்குப் பூமரம்
தோகை வளர்ந்து காற்று
சுற்றித் திரிய வசதியான வாசலுக்கு
என் காதலி அனுப்பிய கடிதத்தை ஒப்பிடுவேன்
வடிவு மிகுந்த அவளது கடிதமும்
எனது வாசலும் ஒன்றெனச் சொல்வேன்.
இந்தக் காக்கைக்குக் கோபம்
பழுத்த பாக்கை உரித்துக் காயவைத்தால்
தெரிகின்ற தோற்றத்தில்
இருக்கின்ற கிழட்டுக் குருவிக்கும் மன எரிச்சல்.
என் வாசலை நானும் இடைக்கிடை கெடுப்பதுண்டு
இருந்தாலும் அது என்னுடைய வாசல்.
நான் காலையில் எழுந்ததும் துப்புவேன்.
சிலவேளை மூக்கைச் சீறியும் எறிவேன்.
அன்புள்ள நண்பனே!
நீயும்
எனக்குச் சிறகு முளைக்கின்ற இடத்திற்கு வா.
ஒரு காகம் மீன் தலை போட்டது. இன்னொன்று எச்சமடித்துப் பறந்தது எனது காதலி எழுதிய கடிதத்தில்.
நான் நிலாக்காலம் வந்தால் மகிழ்கின்ற இடம் அழகிற்குப் பூமரம் தோகை வளர்ந்து காற்று சுற்றித் திரிய வசதியான வாசலுக்கு என் காதலி அனுப்பிய கடிதத்தை ஒப்பிடுவேன் வடிவு மிகுந்த அவளது கடிதமும் எனது வாசலும் ஒன்றெனச் சொல்வேன்.
இந்தக் காக்கைக்குக் கோபம் பழுத்த பாக்கை உரித்துக் காயவைத்தால் தெரிகின்ற தோற்றத்தில் இருக்கின்ற கிழட்டுக் குருவிக்கும் மன எரிச்சல்.
என் வாசலை நானும் இடைக்கிடை கெடுப்பதுண்டு இருந்தாலும் அது என்னுடைய வாசல். நான் காலையில் எழுந்ததும் துப்புவேன். சிலவேளை மூக்கைச் சீறியும் எறிவேன்.
அன்புள்ள நண்பனே! நீயும் எனக்குச் சிறகு முளைக்கின்ற இடத்திற்கு வா.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|