|
||||||||
பகுத்தறிவுத் தெருக்கள்ள் |
||||||||
இரண்டொருநாள் நாங்கள் பிாிந்திருந்தோம்.
ஒரு நெடுந்தூரப் பயணம் நீ சென்றுள்ளாய் என்று
எனக்குத் தொியும்.
நாங்கள் சந்திக்காத தினங்களில்தான்
எமது சமூகங்களுக்கிடையில்
திரும்பவும் தலையிடியும் காய்ச்சலும் வந்தன நண்ப!
நமது நகரம்
மீண்டும்
தாலி அறுத்துக் கிடந்தது.
எப்போதுமே காற்றுக்கு பொய்சொல்ல ஆசைதான்!
அது பெருவிரலால் நடந்து
கண்டபடி தூவியது கதைகளை.
நகரத்தில்
சுவரொட்டிகளும், அவைகளைத் தாங்கிய பழைய மதில்களும்
அமைதியாய் இருக்க
மற்றெல்லாம் அதற்குச் செவிமடுத்து ஆடியதால்
தலைமயிரைக்கூட எழுப்பிவிட்டது
உணர்ச்சி!
இன்று
மூன்று தினங்களின் பிறகு
உன்னைச் சந்தித்தேன்.
நெடுந்தூரப் பயணத்தின் களைப்பை
உன்முகத்தில் கண்டேன்.
இருந்தாலும் நகரம் இயங்கவில்லை
அதன் நரம்புகளுக்கிடையில் தடைப்பட்ட இரத்தம்
இன்றும் சாியாகப் பாயவில்லை.
நாம் மட்டும் சினேகித்தோம்
அந்தப் பொது இடத்தில் நின்றபடி
உன் கடைச் சிப்பந்தியின் பொறுப்பில்லாத்தனம் பற்றி
கருத்துகளை வௌியிட்டோம்.
பழையபடி
உன்னோடு நானும்
என்னோடு நீயுமென
நாம் இருவரும் ஒன்றாக மனங்களுக்குள் காற்று
புகவிட்டுக் கதைக்கின்ற,
தினமும்
கைசூப்பும் அந்தப் பருவத்தை அடைகின்ற,
இடத்திற்க நாம் போக மறியலுண்டு.
தெருக்களுக்குத் தொியும்
தூவானம் அடங்கும்வரை
அவைகள் தேடாது.
இரண்டொருநாள் நாங்கள் பிாிந்திருந்தோம். ஒரு நெடுந்தூரப் பயணம் நீ சென்றுள்ளாய் என்று எனக்குத் தொியும்.
நாங்கள் சந்திக்காத தினங்களில்தான் எமது சமூகங்களுக்கிடையில் திரும்பவும் தலையிடியும் காய்ச்சலும் வந்தன நண்ப!
நமது நகரம் மீண்டும் தாலி அறுத்துக் கிடந்தது.
எப்போதுமே காற்றுக்கு பொய்சொல்ல ஆசைதான்! அது பெருவிரலால் நடந்து கண்டபடி தூவியது கதைகளை.
நகரத்தில் சுவரொட்டிகளும், அவைகளைத் தாங்கிய பழைய மதில்களும் அமைதியாய் இருக்க மற்றெல்லாம் அதற்குச் செவிமடுத்து ஆடியதால் தலைமயிரைக்கூட எழுப்பிவிட்டது உணர்ச்சி!
இன்று மூன்று தினங்களின் பிறகு உன்னைச் சந்தித்தேன்.
நெடுந்தூரப் பயணத்தின் களைப்பை உன்முகத்தில் கண்டேன்.
இருந்தாலும் நகரம் இயங்கவில்லை அதன் நரம்புகளுக்கிடையில் தடைப்பட்ட இரத்தம் இன்றும் சாியாகப் பாயவில்லை.
நாம் மட்டும் சினேகித்தோம் அந்தப் பொது இடத்தில் நின்றபடி உன் கடைச் சிப்பந்தியின் பொறுப்பில்லாத்தனம் பற்றி கருத்துகளை வௌியிட்டோம்.
பழையபடி உன்னோடு நானும் என்னோடு நீயுமென நாம் இருவரும் ஒன்றாக மனங்களுக்குள் காற்று புகவிட்டுக் கதைக்கின்ற, தினமும் கைசூப்பும் அந்தப் பருவத்தை அடைகின்ற, இடத்திற்க நாம் போக மறியலுண்டு.
தெருக்களுக்குத் தொியும் தூவானம் அடங்கும்வரை அவைகள் தேடாது.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|