|
||||||||
நான் - பிள்ளை |
||||||||
திடீரென வானம் விழுந்தது.
நாலு தென்னைகளும் ஆறேழு பனையும்
தலையாலே முறிந்து தொங்கின.
ஒரு கோழி வீறிட்டுக் கத்தியது.
எனது பிள்ளை விளையாடிக் கொண்டிருந்தான்.
வாசல் முழுக்க நட்சத்திரங்கள்
உடைந்து நொறுங்கிக் கிடந்தன.
ஒரு முகிலை எடுத்து அளைந்துவிட்டு முத்தமிட்டான்.
பின்னர் எழுந்து
அங்கே சிதறிக் கிடந்த நிலவின் துண்டுகளை
ஒட்டிப் பார்த்தான். பிறகு எறிந்தான்
இன்னொரு நிலவைச் செய்யலாம் என்று
தனக்குள் சொல்லிக் கொண்டு நடந்தான்.
நான் வீட்டுக்குள் இருந்தேன்.
என் சின்ன வயதில் இந்த நிலவிற்காய்
அழுத அழுகைகளை நினைத்தேன்.
ஒரு நட்சத்திரம்கூட என்னால் அந்த நாட்களில்
பிடித்துப் பார்க்க முடியாமல் போயிற்று.
வானம் என்னைவிட வெகு தொலைவில் இருந்தது.
என் தலைமுறைக்குள் இப்படியொரு பெரிய மாறுதல்!
மாங்காய்க்குக் கல்லை எறிவதுபோல்
வானுக்கு எறிந்து
நிலத்தில் கிடக்கின்ற பிள்ளை!
இப்போது அவன் வானத்தை
மீண்டும் சரிசெய்துவிட்டு நடக்கிறான்.
திடீரென வானம் விழுந்தது. நாலு தென்னைகளும் ஆறேழு பனையும் தலையாலே முறிந்து தொங்கின. ஒரு கோழி வீறிட்டுக் கத்தியது.
எனது பிள்ளை விளையாடிக் கொண்டிருந்தான். வாசல் முழுக்க நட்சத்திரங்கள் உடைந்து நொறுங்கிக் கிடந்தன. ஒரு முகிலை எடுத்து அளைந்துவிட்டு முத்தமிட்டான்.
பின்னர் எழுந்து அங்கே சிதறிக் கிடந்த நிலவின் துண்டுகளை ஒட்டிப் பார்த்தான். பிறகு எறிந்தான் இன்னொரு நிலவைச் செய்யலாம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நடந்தான்.
நான் வீட்டுக்குள் இருந்தேன். என் சின்ன வயதில் இந்த நிலவிற்காய் அழுத அழுகைகளை நினைத்தேன். ஒரு நட்சத்திரம்கூட என்னால் அந்த நாட்களில் பிடித்துப் பார்க்க முடியாமல் போயிற்று. வானம் என்னைவிட வெகு தொலைவில் இருந்தது.
என் தலைமுறைக்குள் இப்படியொரு பெரிய மாறுதல்! மாங்காய்க்குக் கல்லை எறிவதுபோல் வானுக்கு எறிந்து நிலத்தில் கிடக்கின்ற பிள்ளை!
இப்போது அவன் வானத்தை மீண்டும் சரிசெய்துவிட்டு நடக்கிறான்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|