வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை, வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல தமிழ் அமைப்புகள் இணைந்து உலகிலேயே முதல் முறையாக பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடை அமெரிக்க நாட்டின் மேரிலாந்தில் ஆகஸ்டு 26 ஆம் நாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சார்ந்த தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். குறுந்தொகையை மையமாக வைத்து பட்டி மன்றம்,கருத்தரங்கம், வினா விடை, கலை நிகழ்ச்சி (குறுந்தொகை சார்ந்த இயல் இசை நாடக நிகழ்ச்சிகள்), மாணவர்களுக்கான இணையரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன. இம்மாநாட்டில், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கலந்துகொண்டு சங்க இலக்கியமாம் குறுந்தொகையின் புகழ் போற்றுவோம்! இந்நிகழ்ச்சி தொடர்பான பல்வேறு செய்திகளுக்கு பின்வரும் இணையத் தளத்தைப் பார்க்கவும்.
http://kurunthokai.org/
|