2.01 திருப்பூந்தராய் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
1 செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த் துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர் பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. 2.1.1 2 எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள் பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச் சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர் பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே. 2.1.2 3 சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த் துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர் மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே. 2.1.3 4 சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர் பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச் சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர் காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே. 2.1.4 5 பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த் துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர் வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே. 2.1.5 6 மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம் போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச் சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர் காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே. 2.1.6 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 2.1.7 7 வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள் தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த் துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர் அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே. 2.1.8 8 வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம் புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச் சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர் கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே. 2.1.9 9 வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற் புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த் தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர் குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே. 2.1.10 10 மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப் புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப் பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார் அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. 2.1.11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.2 திருவலஞ்சுழி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
11 விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித் தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர் பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே. 2.2.1 12 பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும் வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர் ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே. 2.2.2 13 கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய் வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச் சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர் விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே. 2.2.3 14 கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச் சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர் நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே. 2.2.4 15 கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய் வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர் சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே. 2.2.5 16 பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர் வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித் தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர் ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே. 2.2.6 17 கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர் பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே. 2.2.7 18 தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம் வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக் கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர் ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே. 2.2.8 19 தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர் வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர் சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே. 2.2.9 20 உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள் வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப் பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர் சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே. 2.2.10 21 வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால் வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே. 2.2.11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.3 திருத்தெளிச்சேரி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
22 பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல் தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர் மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம் பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே. 2.3.1 23 விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே திளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர் வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்து களிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே. 2.3.2 24 வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ் செம்ப டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர் கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோ டம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே. 2.3.3 25 காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயுந் தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர் ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே. 2.3.4 26 பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ் செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர் மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே. 2.3.5 27 தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற் றிவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர் குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய கவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே. 2.3.6 28 கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ் சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர் மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையைத் தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே. 2.3.7 29 கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர் சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர் வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை பத்தி ரட்டிக் கரம்நெரித் திட்டதும் பாதமே. 2.3.8 30 காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ் சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர் மால டித்தல மாமல ரான்முடி தேடியே ஓல மிட்டிட எங்ஙன மோருருக் கொண்டதே. 2.3.9 31 மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர் செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர் வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள் தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே. 2.3.10 32 திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனை மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித் தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே. 2.3.11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பார்வதீசுவரர், தேவியார் - சத்தியம்மாளம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.4 திருவான்மியூர் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
33 கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன் திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர் உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர் வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே. 2.4.1 34 சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ் சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச் சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர் அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே. 2.4.2 35 கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந் தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த் தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர் ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே. 2.4.3 36 மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச் செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர் துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர் வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே. 2.4.4 37 மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில் திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த் துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர் விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே. 2.4.5 38 போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந் தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச் சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர் மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே. 2.4.6 39 வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த் தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த் தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர் பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே. 2.4.7 40 தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத் திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த் தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர் பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே. 2.4.8 41 பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால் திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர் சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர் எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே. 2.4.9 42 மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ் செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர் மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர் கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே. 2.4.10 43 மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர் ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல் நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே. 2.4.11 இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மருந்தீசுவரர், தேவியார் - சுந்தரமாது அல்லது சொக்கநாயகி. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.5 திருவனேகதங்காபதம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
44 நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல் ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம் பாடல் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே. 2.5.1 45 சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல் ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம் நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர் கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே. 2.5.2 46 செம்பி னாருமதில் மூன்றெரி யச்சின வாயதோர் அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதங் கொம்பின் நேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை நம்பன் நாமநவி லாதன நாவென லாகுமே. 2.5.3 47 தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச் சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார் அந்த மில்லவள வில்ல அனேகதங் காவதம் எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே. 2.5.4 48 பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய் உறையுங் கோயில்பசும் பொன்னணி யாரசும் பார்புனல் அறையும் ஓசைபறை போலும் அனேகதங் காவதம் இறையெம் மீசனெம் மானிட மாகவு கந்ததே. 2.5.5 49 தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர் ஆனை யேறுமணி சாரல் அனேகதங் காவதம் வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல் ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே. 2.5.6 50 வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங் குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள் ளருவி பாயுமணி சாரல் அனேகதங் காவதம் மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே. 2.5.7 51 ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன் வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான் ஆரம் பாம்பதணி வான்றன் அனேகதங் காவதம் வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே. 2.5.8 52 கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய் எண்ணும் வண்ணமறி யாமையெ ழுந்ததோ ராரழல் அண்ணல் நண்ணுமணி சாரல் அனேகதங் காவதம் நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே. 2.5.9 53 மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர் ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம் ஆப தம்மறி வீருளி ராகில் அனேகதங் காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே. 2.5.10 54 தொல்லை யூழிப்பெயர் தோன்றிய தோணி புரத்திறை நல்ல கேள்வித்தமிழ் ஞானசம் பந்தன்நல் லார்கள்முன் அல்லல் தீரவுரை செய்த அனேகதங் காவதஞ் சொல்ல நல்லஅடை யும்மடை யாசுடு துன்பமே. 2.5.11 இத்தலம் வடதேசத்திலுள்ளது. சுவாமிபெயர் - அருள்மன்னர், தேவியார் - மனோன்மணியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.6 திருவையாறு பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
55 கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர் ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார் பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே. 01 56 தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே பின்னு முன்னுஞ் சிலபேய்க் கணஞ்சூழத் திரிதர்வர் துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடிப் பூசுவர் அன்னம் ஆலுந் துறையானும் ஐயாறுடை ஐயனே. 02 57 கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை மாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம் ஏறும் ஏறித் திரிவரிமை யோர்தொழு தேத்தவே ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே. 03 58 பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார் எண்ணின் நல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார் வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே அண்ணல் கேட்டுகந் தானும் ஐயாறுடை ஐயனே. 04 59 வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார் தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே. 05 60 எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும் பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய் அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே. 06 61 ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ் சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான் வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய் ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே. 07 62 குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய் விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே. பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால் அரவ மார்த்துகந் தானும் ஐயாறுடை ஐயனே. 08 63 உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன் வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார் கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான் அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே. 09 64 மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான் காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல் கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர் ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே. 10 65 கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால் மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல மைகொள் கண்டத் தெண்டோ ள்முக் கணான்கழல் வாழ்த்தவே ஐயந் தேர்ந்தளிப் பானும்ஐ யாறுடை ஐயனே. 11 66 பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினைக் கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன் ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய் மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே. 12
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.7 திருவாஞ்சியம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
67 வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே. 01 68 கால காலர்கரி கானிடை மாநட மாடுவர் மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர் மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம் ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே. 02 69 மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய் நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர் தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார் பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே. 03 70 சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம் ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே. 04 71 கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல் தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர் செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத் தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே. 05 72 அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும் இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம் மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே. 06 73 விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார் பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத் தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே. 07 74 மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன் வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர் வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப் பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே. 08 75 செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும் நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத் தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே. 09 76 பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார் மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத் தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே. 10 77 தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத் தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால் நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ் ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வாஞ்சியநாதர், தேவியார் - வாழவந்தநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.8 திருச்சிக்கல் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
78 வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை தேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள் வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே. 01 79 மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே. 02 80 நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள் வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான் பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே. 03 81 கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற் செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள் வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல் சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே. 04 82 மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள் வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே. 05 83 வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ் தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள் விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே. 06 84 முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத் துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான் செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே. 07 85 தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே. 08 86 மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங் கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ் சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான் பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே. 09 87 பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக் கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர் சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப் பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே. 10 88 கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல் செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச் சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நவநீதநாதர், தேவியார் - வேனெடுங்கண்ணியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.9 திருமழபாடி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
89 களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம் உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண் டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே. 01 90 காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள் ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான் பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின் வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே. 02 91 உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களைப் பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன் வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே. 03 92 பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல் வெள்ளம் ஆதரித் தான்விடை யேறிய வேதியன் வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே. 04 93 தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள் பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன் வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங் கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே. 05 94 தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன் பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான் வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப் புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே. 06 95 சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை எந்தை யான்இமை யாதமுக் கண்ணினன் எம்பிரான் மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச் சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே. 07 96 இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன் வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே. 08 97 ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார் காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார் சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம் மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே. 09 98 கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும் நலியும் நாள்கெடுத் தாண்டஎன் நாதனார் வாழ்பதி பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும் மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே. 10 99 மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக் கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன் ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்.......உலகத்திலே. 11 இப்பதிகத்தின் 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைவுற்றன. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர், தேவியார் - அழகாம்பிகையம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.10 திருமங்கலக்குடி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
100 சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப் பூரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே. 01 101 பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே. 02 102 கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார் மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே. 03 103 பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம் மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக் குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே. 04 104 ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர் மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே. 05 105 தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள் வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக் கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார் ஊன மானவை போயறும் உய்யும் வகையதே. 06 106 வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே வாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடி ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே. 07 107 பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங்க லக்குடிப் புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர் மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே. 08 108 ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன் மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே. 09 109 மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர் பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச் செய்ய மேனிச் செழும்புனற் கங்கைசெ றிசடை ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே. 10 110 மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன் சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல் முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - புராணவரதேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.11 சீகாழி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
111 நல்லானை நான்மறை யோடிய லாறங்கம் வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம் இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே. 01 112 நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை அம்மானை அந்தணர் சேரு மணிகாழி எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே. 02 113 அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால் பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள் விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே. 03 114 புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச் சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும் அற்றானை அந்தணர் காழி யமர்கோயில் பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 04 115 நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம் விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய கதியானைக் காருல வும்பொழிற் காழியாம் பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே. 05 116 செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம் ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே. 06 117 துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார் அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே. 07 118 குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும் வென்றானை மென்மல ரானொடு மால்தேட நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள் நன்றானை நம்பெரு மானை நணுகுமே. 08 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 09 119 சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர் மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின் பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக் கோவாய கொள்கையி னாணடி கூறுமே. 10 120 கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள் ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித் தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.12 திருவேகம்பம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
121 மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண் பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத் துறைவானை யல்லதுள் காதென துள்ளமே. 01 122 நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம் உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான் கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே. 02 123 பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி சீராலே பாடலா டல்சிதை வில்லதோர் ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச் சேராதார் இன்பமா யந்நெறி சேராரே. 03 124 குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய் மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள் மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ் சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே. 04 125 சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங் கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள் புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம் உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 05 126 மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங் கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந் தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே. 06 127 விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார் கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத் தண்ணலா ராடுகின் றவலங் காரமே. 07 128 தூயானைத் தூயவா யம்மறை யோதிய வாயானை வாளரக் கன்வலி வாட்டிய தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம் மேயானை மேவுவா ரென்றலை மேலாரே. 08 129 நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார் பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர் ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும் மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே. 09 130 போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள் ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம் நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே. 10 131 அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக் கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால் சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம் பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.13 திருக்கோழம்பம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
132 நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர் ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர் கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பம் மேவிய ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே. 01 133 மையான கண்டனை மான்மறி யேந்திய கையானைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய செய்யானைத் தேன்நெய்பா லுந்திகழ்ந் தாடிய மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே. 02 134 ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும் வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய காதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய நாதனை யேத்துமின் நும்வினை நையவே. 03 135 சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய விடையானை வேதமும் வேள்வியு மாயநன் குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம் உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே. 04 136 காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி தாரானைத் தையலோர்பால்மகிழ்ந் தோங்கிய சீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவிய ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே. 05 137 பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவக் கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக் கொண்டானைக் கூறுமின் உள்ளங் குளிரவே. 06 138 சொல்லானைச் சுடுகணை யாற்புரம் மூன்றெய்த வில்லானை வேதமும் வேள்வியு மானானைக் கொல்லானை உரியானைக் கோழம்பம் மேவிய நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே. 07 139 விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக் குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச் செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம் பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே. 08 140 நெடியானோ டயனறி யாவகை நின்றதோர் படியானைப் பண்டரங்க வேடம்ப யின்றானைக் கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின் கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே. 09 141 புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப் பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக் கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே. 10 142 தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர் நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறை விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கோகுலேசுவரர், தேவியார் - சவுந்தரியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.14 திருவெண்ணியூர் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
143 சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும் விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 01 144 சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம் ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில் நீதியை நினையவல் லார்வினை நில்லாவே. 02 145 கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும் முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில் இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே. 03 146 மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க் காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை ஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே. 04 147 நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத் தாரானைத் தையலோர் பாகமு டையானைச் சீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே. 05 148 முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத் தொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காய வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே. 06 149 காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப் பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின் மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே. 07 150 மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச் செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப் பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே. 08 151 மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங் கண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணா விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே. 09 152 குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின் விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில் தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே. 10 153 மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன் திருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார் பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வெண்ணிநாயகர், தேவியார் - அழகியநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.15 திருக்காறாயில் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
154 நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத் தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ் சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே. 01 155 மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர் விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும் நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற் பதியானே யென்பவர் பாவமி லாதாரே. 02 156 விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர் மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங் கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில் எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே. 03 157 தாயானே தந்தையு மாகிய தன்மைகள் ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில் மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே. 04 158 கலையானே கலைமலி செம்பொற் கயிலாய மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில் நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 05 159 ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும் போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில் நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 06 160 சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள் ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர் காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில் ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 07 161 கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம் எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர் கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில் அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 08 162 பிறையானே பேணிய பாடலோ டின்னிசை மறையானே மாலொடு நான்முகன் காணாத இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில் உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே. 09 163 செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும் படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில் குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே. 10 164 ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில் ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல் வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர், தேவியார் - கயிலாயநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.16 திருமணஞ்சேரி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
165 அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 01 166 விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான் மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே. 02 167 எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய இப்பாலா யெனையும் ஆள வுரியானை வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே. 03 168 விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம் உடையானை ஊழிதோ றூழி உளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே. 04 169 எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம் வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச் செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே. 05 170 மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம் பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே. 06 171 எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக் கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே. 07 172 எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள் கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே. 08 173 சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங் கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே. 09 174 சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர் சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. 10 175 கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி பண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மணவாளநாயகர், தேவியார் - யாழ்மொழியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.17 திருவேணுபுரம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
176 நிலவும் புனலும் நிறைவா ளரவும் இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார் உலவும் வயலுக் கொளியார் முத்தம் விலகுங் கடலார் வேணு புரமே. 01 177 அரவார் கரவன் அமையார் திரள்தோள் குரவார் குழலா ளொருகூ றனிடங் கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு விரவா கவல்லார் வேணு புரமே. 02 178 ஆகம் மழகா யவள்தான் வெருவ நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம் போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள் மேகந் தவழும் வேணு புரமே. 03 179 காசக் கடலில் விடமுண் டகண்டத் தீசர்க் கிடமா வதுஇன் னறவ வாசக் கமலத் தனம்வன் றிரைகள் வீசத் துயிலும் வேணு புரமே. 04 180 அரையார் கலைசேர் அனமென் னடையை உரையா வுகந்தா னுறையும் இடமாம் நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை விரையார் பொழில்சூழ் வேணு புரமே. 05 181 ஒளிரும் பிறையும் முறுகூ விளவின் தளிருஞ் சடைமே லுடையா னிடமாம் நளிரும் புனலின் னலசெங் கயல்கள் மிளிரும் வயல்சூழ் வேணு புரமே. 06 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07 182 ஏவும் படைவேந் தன்இரா வணனை ஆவென் றலற அடர்த்தா னிடமாந் தாவும் மறிமா னொடுதண் மதியம் மேவும் பொழில்சூழ் வேணு புரமே. 08 183 கண்ணன் கடிமா மலரிற் றிகழும் அண்ணல் இருவர் அறியா இறையூர் வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள் விண்ணிற் றிகழும் வேணு புரமே. 09 184 போகம் மறியார் துவர்போர்த் துழல்வார் ஆகம் மறியா அடியார் இறையூர் மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல் மீகம் மறிவார் வேணு புரமே. 10 185 கலமார் கடல்போல் வளமார் தருநற் புலமார் தருவே ணுபுரத் திறையை நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.18 திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
186 சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே. 01 187 சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. 02 188 அறையார் கழலும் மழல்வா யரவும் பிறையார் சடையும் முடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. 03 189 ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே. 04 190 துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன மணிநீ லகண்ட முடையாய் மருகல் கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன் அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே. 05 191 பலரும் பரவப் படுவாய் சடைமேல் மலரும் பிறையொன் றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந் தலரும் படுமோ அடியா ளிவளே. 06 192 வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகல் பெருமான் தொழுவா ளிவளைத் துயராக் கினையே. 07 193 இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் லிவளை அலராக் கினையே. 08 194 எரியார் சடையும் மடியும் மிருவர் தெரியா ததோர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெருமான் அரியாள் இவளை அயர்வாக் கினையே. 09 195 அறிவில் சமணும் மலர்சாக் கியரும் நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார் மறியேந் துகையாய் மருகற் பெருமான் நெறியார் குழலி நிறைநீக் கினையே. 10 196 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.19 திருநெல்லிக்கா (197-207) பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
197 அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள் நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 01 198 பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல் மதிதா னதுசூ டியமைந் தனுந்தான் விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும் நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 02 199 நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக் கலந்தா னதுகொண் டகபா லியுந்தான் புலந்தான் புகழா லெரிவிண் புகழும் நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 03 200 தலைதா னதுஏந் தியதம் மடிகள் கலைதான் திரிகா டிடம்நா டிடமா மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 04 201 தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல் உவந்தான் சுறவேந் தனுரு வழியச் சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில் நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 05 202 வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான் குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும் நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 06 203 பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான் இறைதான் இறவாக் கயிலை மலையான் மறைதான் புனலொண் மதிமல் குசென்னி நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 07 204 மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக் குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 08 205 தழல்தா மரையான் வையந்தா யவனுங் கழல்தான் முடிகா ணியநா ணொளிரும் அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும் நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 09 206 கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன் மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 10 207 புகரே துமிலா தபுத்தே ளுலகின் நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன பகர்வா ரவர்பா வமிலா தவரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.20 திருஅழுந்தூர் (208-218) பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
208 தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந் தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர் வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 01 209 கடலே றியநஞ் சமுதுண் டவனே உடலே உயிரே உணர்வே யெழிலே அடலே றுடையாய் அழுந்தை மறையோர் விடலே தொழமா மடம்மே வினையே. 02 210 கழிகா டலனே கனலா டலினாய் பழிபா டிலனே யவையே பயிலும் அழிபா டிலராய் அழுந்தை மறையோர் வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 03 211 வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே அழுந்தை யவரெம் மானே யெனமா மடம்மன் னினையே. 04 212 அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான் நிலையார் மறியும் நிறைவெண் மழுவும் இலையார் படையும் மிவையேந் துசெல்வ நிலையா வதுகொள் கெனநீ நினையே. 05 213 நறவார் தலையின் நயவா வுலகிற் பிறவா தவனே பிணியில் லவனே அறையார் கழலாய் அழுந்தை மறையோர் மறவா தெழமா மடம்மன் னினையே. 06 214 தடுமா றுவல்லாய் தலைவா மதியம் சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில் அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர் நெடுமா நகர்கை தொழநின் றனையே. 07 215 பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங் கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய் அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் வெரியார் தொழமா மடம்மே வினையே. 08 216 மணீநீள் முடியான் மலையை அரக்கன் தணியா தெடுத்தான் உடலந் நெரித்த அணியார் விரலாய் அழுந்தை மறையோர் மணிமா மடம்மன் னியிருந் தனையே. 09 217 முடியார் சடையாய் முனநா ளிருவர் நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள் அடிமே லறியார் அழுந்தை மறையோர் படியாற் றொழமா மடம்பற் றினையே. 10 218 அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர் பெருஞா னமுடைப் பெருமா னவனைத் திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள் உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.21 திருக்கழிப்பாலை பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
219 புனலா டியபுன் சடையாய் அரணம் அனலா கவிழித் தவனே அழகார் கனலா டலினாய் கழிப்பா லையுளாய் உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. 01 220 துணையா கவொர்தூ வளமா தினையும் இணையா கவுகந் தவனே இறைவா கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய் இணையார் கழலேத் தவிடர் கெடுமே. 02 221 நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின் முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய் கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் அடியார்க் கடையா அவலம் மவையே. 03 222 எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ வளிகா யமென வெளிமன் னியதூ ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க் களியாய் கழிப்பா லையமர்ந் தவனே. 04 223 நடநண் ணியொர்நா கமசைத் தவனே விடநண் ணியதூ மிடறா விகிர்தா கடல்நண் ணுகழிப் பதிகா வலனே உடன்நண் ணிவணங் குவனுன் னடியே. 05 224 பிறையார் சடையாய் பெரியாய் பெரியம் மறையார் தருவாய் மையினா யுலகிற் கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் இறையார் கழலேத் தவிடர் கெடுமே. 06 225 முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங் கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய் எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க் கதிரும் வினையா யினஆ சறுமே. 07 226 எரியார் கணையால் எயிலெய் தவனே விரியார் தருவீழ் சடையாய் இரவிற் கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் உரிதா கிவணங் குவனுன் னடியே. 08 227 நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக் கனலா னவனே கழிப்பா லையுளாய் உனவார் கழலே தொழுதுன் னுமவர்க் கிலதாம் வினைதான் எயிலெய் தவனே. 09 228 தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந் துவர்கொண் டனநுண் துகிலா டையரும் அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும் உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே. 10 229 கழியார் பதிகா வலனைப் புகலிப் பழியா மறைஞா னசம்பந் தனசொல் வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார் கெழியார் இமையோ ரொடுகே டிலரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.22 திருக்குடவாயில் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
230 திகழுந் திருமா லொடுநான் முகனும் புகழும் பெருமான் அடியார் புகல மகிழும் பெருமான் குடவா யில்மன்னி நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. 01 231 ஓடுந் நதியும் மதியோ டுரகம் சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல் கூடுங் குழகன் குடவா யில்தனில் நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. 02 232 கலையான் மறையான் கனலேந் துகையான் மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான் கொலையார் சிலையான் குடவா யில்தனில் நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. 03 233 சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா நலமென் முலையாள் நகைசெய் யநடங் குலவுங் குழகன் குடவா யில்தனில் நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. 04 234 என்றன் உளமே வியிருந் தபிரான் கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக் குன்றன் குழகன் குடவா யில்தனில் நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. 05 235 அலைசேர் புனலன் னனலன் னமலன் தலைசேர் பலியன் சதுரன் விதிருங் கொலைசேர் படையன் குடவா யில்தனில் நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. 06 236 அறையார் கழலன் னமலன் னியலிற் பறையாழ் முழவும் மறைபா டநடங் குறையா அழகன் குடவா யில்தனில் நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 07 237 வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ் வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான் வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும் வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 08 238 பொன்னொப் பவனும் புயலொப் பவனுந் தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான் கொன்னற் படையான் குடவா யில்தனில் மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 09 239 வெயிலின் நிலையார் விரிபோர் வையினார் பயிலும் முரையே பகர்பா விகள்பாற் குயிலன் குழகன் குடவா யில்தனில் உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே. 10 240 கடுவாய் மலிநீர் குடவா யில்தனில் நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை தடமார் புகலித் தமிழார் விரகன் வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கோணேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.23 திருவானைக்கா பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
241 மழையார் மிடறா மழுவா ளுடையாய் உழையார் கரவா உமையாள் கணவா விழவா ரும்வெணா வலின்மே வியவெம் அழகா எனும்ஆ யிழையாள் அவளே. 01 242 கொலையார் கரியின் னுரிமூ டியனே மலையார் சிலையா வளைவித் தவனே விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் நிலையா அருளாய் எனும்நே ரிழையே. 02 243 காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய் பாலோ டுநெய்யா டியபால் வணனே வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய் ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே. 03 244 சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய் உறநெற் றிவிழித் தவெம்உத் தமனே விறல்மிக் ககரிக் கருள்செய் தவனே அறமிக் கதுவென் னுமெனா யிழையே. 04 245 செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் அங்கட் கருணை பெரிதா யவனே வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய் அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. 05 246 குன்றே யமர்வாய் கொலையார் புலியின் தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய் வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே நின்றா யருளாய் எனும்நே ரிழையே. 06 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07 247 மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள் தொலையவ் விரலூன் றியதூ மழுவா விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே. 08 248 திருவார் தருநா ரணன்நான் முகனும் மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம் அரவா எனும்ஆ யிழையா ளவளே. 09 249 புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள் ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார் மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய் அத்தா அருளாய் எனும்ஆ யிழையே. 10 250 வெண்நா வலமர்ந் துறைவே தியனை கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன் பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார் விண்ணோ ரவரேத் தவிரும் புவரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.24 திருநாகேச்சரம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
251 பொன்னேர் தருமே னியனே புரியும் மின்னேர் சடையாய் விரைகா விரியின் நன்னீர் வயல்நா கேச்சர நகரின் மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே. 01 252 சிறவார் புரமூன் றெரியச் சிலையில் உறவார் கணையுய்த் தவனே உயரும் நறவார் பொழில்நா கேச்சர நகருள் அறவா எனவல் வினையா சறுமே. 02 253 கல்லால் நிழல்மே யவனே கரும்பின் வில்லான் எழில்வே வவிழித் தவனே நல்லார் தொழுநா கேச்சர நகரில் செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே. 03 254 நகுவான் மதியோ டரவும் புனலும் தகுவார் சடையின் முடியாய் தளவம் நகுவார் பொழில்நா கேச்சர நகருள் பகவா எனவல் வினைபற் றறுமே. 04 255 கலைமான் மறியுங் கனலும் மழுவும் நிலையா கியகை யினனே நிகழும் நலமா கியநா கேச்சர நகருள் தலைவா எனவல் வினைதான் அறுமே. 05 256 குரையார் கழலா டநடங் குலவி வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே நரையார் விடையே றுநாகேச் சரத்தெம் அரைசே எனநீங் கும்அருந் துயரே. 06 257 முடையார் தருவெண் டலைகொண் டுலகில் கடையார் பலிகொண் டுழல்கா ரணனே நடையார் தருநா கேச்சர நகருள் சடையா எனவல் வினைதான் அறுமே. 07 258 ஓயா தஅரக் கன்ஒடிந் தலற நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே வாயா ரவழுத் தவர்நா கேச்சரத் தாயே எனவல் வினைதான் அறுமே. 08 259 நெடியா னொடுநான் முகன்நே டலுறச் சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே நடுமா வயல்நா கேச்சர நகரே இடமா வுறைவா யெனஇன் புறுமே. 09 260 மலம்பா வியகை யொடுமண் டையதுண் கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில் நலம்பாவியநா கேச்சர நகருள் சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே. 10 261 கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன் தலமார் தருசெந் தமிழின் விரகன் நலமார் தருநா கேச்சரத் தரனைச் சொலன்மா லைகள்சொல் லநிலா வினையே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர், தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.25 திருப்புகலி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
262 உகலி யாழ்கட லோங்கு பாருளீர் அகலி யாவினை யல்லல் போயறும் இகலி யார்புர மெய்த வன்னுறை புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 01 263 பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக் கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப் புண்ணி யன்னுறை யும்பு கலியை நண்ணு மின்னல மான வேண்டிலே. 02 264 வீசு மின்புரை காதன் மேதகு பாச வல்வினை தீர்த்த பண்பினன் பூசு நீற்றினன் பூம்பு கலியைப் பேசு மின்பெரி தின்ப மாகவே. 03 265 கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன் படிகொள் பாரிடம் பேசும் பான்மையன் பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள் அடிகளை யடைந் தன்பு செய்யுமே. 04 266 பாதத் தாரொலி பல்சி லம்பினன் ஓதத் தார்விட முண்ட வன்படைப் பூதத் தான்புக லிந்ந கர்தொழ ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே. 05 267 மறையி னான்ஒலி மல்கு வீணையன் நிறையி னார்நிமிர் புன்ச டையனெம் பொறையி னானுறை யும்பு கலியை நிறையி னாற்றொழ நேச மாகுமே. 06 268 கரவி டைமனத் தாரைக் காண்கிலான் இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை பொருவி டைஉயர்த் தான்பு கலியைப் பரவி டப்பயில் பாவம் பாறுமே. 07 269 அருப்பி னார்முலை மங்கை பங்கினன் விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும் பொருப்பி னான்பொழி லார்பு கலியூர் இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே. 08 270 மாலும் நான்முகன் றானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலு மேனியன் பூம்பு கலியுள் பால தாடிய பண்ப னல்லனே. 09 271 நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல் ஒன்ற தாகவை யாவு ணர்வினுள் நின்ற வன்னிக ழும்பு கலியைச் சென்று கைதொழச் செல்வ மாகுமே. 10 272 புல்ல மேறிதன் பூம்பு கலியை நல்ல ஞானசம் பந்தன் நாவினாற் சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க் கில்லை யாம்வினை இருநி லத்துளே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.26 திருநெல்வாயில் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
273 புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய மடையி னார்மணி நீர்நெல் வாயிலார் நடையி னால்விரற் கோவ ணந்நயந் துடையி னாரெம துச்சி யாரே. 01 274 வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந் தாங்கி னார்தலை யாய தன்மையர் நீங்கு நீரநெல் வாயி லார்தொழ ஓங்கி னாரெம துச்சி யாரே. 2 275 நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ இச்சை யாலுறை வாரெம் மீசனார் கச்சை யாவதோர் பாம்பி னார்கவின் இச்சை யாரெம துச்சி யாரே. 03 276 மறையி னார்மழு வாளி னார்மல்கு பிறையி னார்பிறை யோடி லங்கிய நிறையி னாரநெல் வாயிலார் தொழும் இறைவ னாரெம துச்சி யாரே. 04 277 விருத்த னாகிவெண் ணீறு பூசிய கருத்த னார்கன லாட்டு கந்தவர் நிருத்த னாரநெல் வாயில் மேவிய ஒருத்த னாரெம துச்சி யாரே. 05 278 காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு பேரி னார்பிறை யோடி லங்கிய நீரி னாரநெல் வாயிலார் தொழும் ஏரி னாரெம துச்சி யாரே. 06 279 ஆதி யாரந்த மாயி னார்வினை கோதி யார்மதில் கூட்ட ழித்தவர் நீதி யாரநெல் வாயி லார்மறை ஓதி யாரெம துச்சி யாரே. 07 280 பற்றி னான்அரக் கன்க யிலையை ஒற்றி னாரொரு கால்வி ரலுற நெற்றி யாரநெல் வாயி லார்தொழும் பெற்றி யாரெம துச்சி யாரே. 08 281 நாடி னார்மணி வண்ணன் நான்முகன் கூடி னார்குறு காத கொள்கையர் நீடி னாரநெல் வாயி லார்தலை ஓடி னாரெம துச்சி யாரே. 09 282 குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல் பண்ட மாகவை யாத பண்பினர் விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை உண்ட கண்டரெம் உச்சி யாரே. 10 283 நெண்ப யங்குநெல் வாயி லீசனைச் சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை பண்ப யன்கொளப் பாட வல்லவர் விண்ப யன்கொளும் வேட்கை யாளரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.27 திரு இந்திரநீலப்பருப்பதம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
284 குலவு பாரிடம் போற்ற வீற்றிருந் திலகு மான்மழு வேந்தும் அங்கையன் நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத் துலவி னான்அடி யுள்க நல்குமே. 01 285 குறைவி லார்மதி சூடி யாடவண் டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர் இறைவன் இந்திர நீலப் பர்ப்பதத் துறைவி னான்றனை யோதி உய்ம்மினே. 02 286 என்பொன் என்மணி யென்ன ஏத்துவார் நம்பன் நான்மறை பாடு நாவினான் இன்பன் இந்திர நீலப் பர்ப்பதத் தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே. 03 287 நாச மாம்வினை நன்மை தான்வருந் தேச மார்புக ழாய செம்மையெம் ஈசன் இந்திர நீலப் பர்ப்பதங் கூசி வாழ்த்துதுங் குணம தாகவே. 04 288 மருவு மான்மட மாதொர் பாகமாய்ப் பரவு வார்வினை தீர்த்த பண்பினான் இரவன் இந்திர நீலப் பர்ப்பதத் தருவி சூடிடும் அடிகள் வண்ணமே. 05 289 வெண்ணி லாமதி சூடும் வேணியன் எண்ணி லார்மதி லெய்த வில்லினன் அண்ணல் இந்திர நீலப் பர்ப்பதத் துண்ணி லாவுறும் ஒருவன் நல்லனே. 06 290 கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர் பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர் அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம் உடைய வாண ருகந்த கொள்கையே. 07 291 எடுத்த வல்லரக் கன்க ரம்புயம் அடர்த்த தோர்விர லான வனையாட் படுத்தன் இந்திர நீலப் பர்ப்பதம் முடித்த லம்முற முயலும் இன்பமே. 08 292 பூவி னானொடு மாலும் போற்றுறுந் தேவன் இந்திர நீலப் பர்ப்பதம் பாவி யாதெழு வாரைத் தம்வினை கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே. 09 293 கட்டர் குண்டமண் தேரர் சீரிலர் விட்டர் இந்திர நீலப் பர்ப்பதம் எட்ட னைநினை யாத தென்கொலோ சிட்ட தாயுறை யாதி சீர்களே. 10 294 கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான் இந்தி ரன்தொழு நீலப் பர்பதத் தந்த மில்லியை யேத்து ஞானசம் பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே. 11 இத்தலம் வடதேசத்திலுள்ளது. சுவாமிபெயர் - நீலாசலநாதர், தேவியார் - நீலாம்பிகையம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.28 திருக்கருவூரானிலை பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
295 தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ் சுண்ட லாருயி ராய தன்மையர் கண்ட னார்கரு வூரு ளானிலை அண்ட னாரரு ளீயும் அன்பரே. 01 296 நீதி யார்நினைந் தாய நான்மறை ஓதி யாரொடுங் கூட லார்குழைக் காதி னார்கரு வூரு ளானிலை ஆதி யாரடி யார்தம் அன்பரே. 02 297 விண்ணு லாமதி சூடி வேதமே பண்ணு ளார்பர மாய பண்பினர் கண்ணு ளார்கரு வூரு ளானிலை அண்ண லாரடி யார்க்கு நல்லரே. 03 298 முடியர் மும்மத யானை யீருரி பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர் கடியு ளார்கரு வூரு ளானிலை அடிகள் யாவையு மாய ஈசரே. 04 299 பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர் மங்கை யர்மணி நீல கண்டர்வான் கங்கை யர்கரு வூரு ளானிலை அங்கை யாடர வத்தெம் மண்ணலே. 05 300 தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் மேவர் மும்மதி லெய்த வில்லியர் காவ லர்கரு வூரு ளானிலை மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. 06 301 பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப் பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர் கண்ணி னார்கரு வூரு ளானிலை நண்ணி னார்நமை யாளும் நாதரே. 07 302 கடுத்த வாளரக் கன்க யிலையை எடுத்த வன்றலை தோளுந் தாளினால் அடர்த்த வன்கரு வூரு ளானிலை கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. 08 303 உழுது மாநிலத் தேன மாகிமால் தொழுது மாமல ரோனுங் காண்கிலார் கழுதி னான்கரு வூரு ளானிலை முழுது மாகிய மூர்த்தி பாதமே. 09 304 புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப் பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப் பத்தர் சேர்கரு வூரு ளானிலை அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே. 10 305 கந்த மார்பொழிற் காழி ஞானசம் பந்தன் சேர்கரு வூரு ளானிலை எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர் சிந்தை யிற்றுய ராய தீர்வரே. 11 இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - கிருபாநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.29 திருப்புகலி - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
306 முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும் பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந் துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ் சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே. 01 307 வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப் பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர் புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத் தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே. 02 308 பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர் பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத் தேவண விழாவளர் திருப்புகலி யாமே. 03 309 மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக் கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர் செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித் தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே. 04 310 முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப் பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில் புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச் செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே. 05 311 வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர் கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத் தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே. 06 312 நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர் பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச் செல்வமறை யோருறை திருப்புகலி யாமே. 07 313 பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால் அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர் நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச் செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே. 08 314 கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல் ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும் நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித் தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே. 09 315 கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர் பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ் செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே. 10 316 செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல் அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப் பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.30 திருப்புறம்பயம் - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
317 மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க் கறம்பய னுரைத்தனை புரம்பய மமர்ந்தோய். 01 318 விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளந் தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன் எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம் பொருத்துதல் கருத்தினை புறம்பய மமர்ந்தோய். 02 319 விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும் பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம் புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய். 03 320 வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்கத் துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு புளங்கொள விளங்கினை புரம்பய மமர்ந்தோய். 04 321 பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங் கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை விரும்பினை புறம்பய மமர்ந்தஇறை யோனே. 05 322 அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும் நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப் புனற்படு கிடைக்கையை புறம்பய மமர்ந்தோய். 06 323 மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம் அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர் திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும் புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய். 07 324 இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி வலங்கொள எழுந்தவ னலங்கவின வஞ்சு புலங்களை விலங்கினை புறம்பய மமர்ந்தோய். 08 325 வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லிக் கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார் தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப் புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய். 09 326 விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும் படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம் அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே. 10 327 கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தந் தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன் சுரும்பவிழ் புறம்பய மமர்ந்த தமிழ்வல்லார் பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர், தேவியார் - கரும்பன்னசொல்லம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.31 திருக்கருப்பறியலூர் - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
328 சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள் மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக் கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. 01 329 வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும் விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால் கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. 02 330 வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப் போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங் காதவ னிருப்பது கருப்பறிய லூரே. 03 331 மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன் உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத் தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால் கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 04 332 ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங் கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 05 333 விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன் பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான் எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங் கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 06 334 ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர் சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத் தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக் காதின னிருப்பது கருப்பறிய லூரே. 07 335 வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற் கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள் காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 08 336 பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல் கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 09 337 அற்றமறை யாவமண ராதமிலி புத்தர் சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக் குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில் கற்றென இருப்பது கருப்பறிய லூரே. 10 338 நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன் கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப் பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர், தேவியார் - கோல்வளையம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.32 திருவையாறு - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
339 திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர் உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார் மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே. 01 340 கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர் இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ் சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே. 02 341 கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில் கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக் கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர் வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே. 03 342 நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன் றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த் தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே. 04 343 வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக் கன்றிவரு கோபமிகு காளிகத மோவ நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால் மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே. 05 344 பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப் பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக் கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே. 06 345 துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப் பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர் மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே. 07 346 இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர் அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத் துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர் வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே. 08 347 பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப் பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங் கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார் வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே. 09 348 பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர் சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம் நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால் மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. 10 349 வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள் ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப் பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார் நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.33 திருநள்ளாறு - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
350 ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர் கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை நாடுமலி வாசமது வீசியநள் ளாறே. 01 351 விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல் பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள் நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே. 02 352 விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத் துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர் வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே. 03 353 கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச் செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப் புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே. 04 354 நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார் வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர் அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே. 05 355 பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங் காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங் கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர் நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே. 06 356 நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும் ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே. 07 357 கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும் அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே. 08 358 உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம் பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர் வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும் நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே. 09 359 சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும் பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர் மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச் சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே. 10 360 ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும் நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல் பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.34 திருப்பழுவூர் - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
361 முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன் அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர் மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப் பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே. 01 362 கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல் ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர் மாடமலி சூளிகையி லேறிமட வார்கள் பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே. 02 363 வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர் வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர் பாலென மிழற்றிநட மாடுபழு வூரே. 03 364 எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே. 04 365 சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும் நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர் வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன் பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே. 05 366 மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர் பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப் பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே. 06 367 மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர் அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார் பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே. 07 368 உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன் றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர் குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே. 08 369 நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர் ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள் மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே. 09 370 மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர் முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர் மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம் பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே. 10 371 அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும் பந்தமலி கின்றபழு வூரரனை யாரச் சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வடவனநாதர், தேவியார் - அருந்தவநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.35 திருக்குரங்காடுதுறை பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
372 பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி அரவச் சடையந் தணன்மேய அழகார் குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே. 01 373 விண்டார் புரமூன்று மெரித்த விமலன் இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங் கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே. 02 374 நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும் இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங் குறைவில் லவனூர் குரங்காடு துறையே. 03 375 விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித் தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப் பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன் கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே. 04 376 நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன் ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர் கூறான்நகர் போல்குரங் காடு துறையே. 05 377 நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தைத் துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில் குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே. 06 378 பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும் அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங் குழகன் னகர்போல் குரங்காடு துறையே. 07 379 வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க நிரையார் விரலால் நெரித்திட் டவனூராங் கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல் குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே. 08 380 நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப் படியா கியபண் டங்கனின் றெரியாடி செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின் கொடியான் நகர்போல் குரங்காடு துறையே. 09 381 துவரா டையர்வே டமலாச் சமண்கையர் கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம் நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக் குவையார் கரைசேர் குரங்காடு துறையே. 10 382 நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன் கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல் சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - குலைவணங்குநாதர், தேவியார் - அழகுசடைமுடியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.36 திருஇரும்பூளை - வினாவுரை பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
383 சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர் வாரார் முலைமங்கை யொடும் முடனாகி ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே. 01 384 தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர் குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே. 02 385 அன்பா லடிகை தொழுவீ ரறியீரே மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே. 03 386 நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர் கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன் உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே. 04 387 சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர் நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே. 05 388 தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர் சேடார் குழற்சே யிழையோ டுடனாகி ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் காடார் கடுவே டுவனான கருத்தே. 06 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07 389 ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர் பருக்கை மதவேழ முரித்துமை யோடும் இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே. 08 390 துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர் கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே. 09 391 துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர் பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே. 10 392 எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன் செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார் பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர், தேவியார் - ஏலவார்குழலம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.37 திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
393 சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. 01 394 சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும் வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா மங்கை உமைபா கமுமா கவிதென்கொல் கங்கை சடைமே லடைவித்த கருத்தே. 02 395 குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல் மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல் அரவம் மதியோ டடைவித்த லழகே. 03 396 படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம் மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா உடலம் முமைபங்க மதாகியு மென்கொல் கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே. 04 397 வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல் கானார் கடுவே டுவனான கருத்தே. 05 398 பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல் தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே. 06 399 வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ் சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல் காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே. 07 400 கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல் வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே. 08 401 கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந் தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல் வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே. 09 402 வேதம் பலவோமம் வியந்தடி போற்ற ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய் ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல் ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. 10 403 காழிந் நகரான் கலைஞான சம்பந்தன் வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார் வாழி யுலகோர் தொழவான் அடைவாரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.38 திருச்சாய்க்காடு பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
404 நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச் சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில் மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே. 01 405 பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும் வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில் கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித் தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே. 02 406 நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில் ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே. 03 407 வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார் புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித் தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே. 04 408 ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில் மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந் தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே. 05 409 துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில் அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில் வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ் சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே. 06 410 வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர் ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில் மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத் தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே. 07 411 இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில் மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந் தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே. 08 412 மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில் சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே. 09 413 ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும் ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில் வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே. 10 414 ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும் ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய் வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சாயாவனேசுவரர், தேவியார் - குயிலுநன்மொழியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.39 திருக்ஷேத்திரக்கோவை பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
415 ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம் வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார் நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங் குருகா வையூர் நாரையூர் நீடுகானப் பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும் பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே. 01 416 அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங் கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம் பயில்கற் குடிகா ளத்திவாட் போக்கியும் பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான் பரங்குன் றம்பருப் பதம்பேணி நின்றே எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக் கடல் நீந் தலாங் காரணமே. 02 417 அட்டா னமென் றோதியநா லிரண்டும் அழகன் னுறைகா வனைத்துந் துறைகள் எட்டாந் திருமூர்த் தியின்கா டொன்பதுங் குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும் மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன் மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ் சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய் அரும்பா வங்களா யினதேய்ந் தறவே. 03 418 அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி பூசியா றணிவான் அமர்காட்டுப் பள்ளி சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி திருநனி பள்ளி சீர்மகேந் திரத்துப் பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான் விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால் உறைப்பா லடிபோற்றக் கொடுத்த பள்ளி உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே 04 419 ஆறை வடமா கறலம்பர் ஐயா றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர் சேறை துலைபுக லூரக லாதிவை காதலித் தானவன் சேர்பதியே. 05 இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின. 420 மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும் மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும் இனவஞ் சொலிலா இடைமா மருதும் இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங் கனமஞ் சினமால் விடையான் விரும்புங் கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர் தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின் தவமாம் மலமா யினதா னருமே. 06 421 மாட்டூர் மடப்பாச் சிலாச்சி ராமம் முண்டீச் சரம்வாத வூர்வார ணாசி காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங் கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங் கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் ** ** 07 இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின. 422 **** **** குலாவு திங்கட் சடையான் குளிரும் பரிதி நியமம் போற்றூ ரடியார் வழிபா டொழியாத் தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங் காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள் நெரித்தா னுறைகோயில் **** **** ** லென் றென்றுநீ கருதே. 08 இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின. 423 நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல் நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு நற்குன்றம் வலம்புரம் நாகேச் சுரம்நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் கற்குன்ற மொன்றேந் திமழை தடுத்த கடல்வண் ணனுமா மலரோனுங் காணாச் சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங் குடமூக் கென்றுசொல் லிக்குலா வுமினே. 09 424 குத்தங் குடிவே திகுடி புனல்சூழ் குருந்தங் குடிதே வன்குடி மருவும் அத்தங் குடிதண் டிருவண் குடியும் அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த நித்தன் நிமலன் உமையோ டுங்கூட நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப் புத்தர் புறங்கூ றியபுன் சமணர் நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே. 10 425 அம்மா னையருந் தவமாகி நின்ற அமரர் பெருமான் பதியான வுன்னிக் கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக் கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று விம்மா வெருவா விரும்பும் மடியார் விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே. 11 இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர், வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம், நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி, மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித் தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும். திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.40 திருப்பிரமபுரம் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
426 எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார் தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங் கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன் வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே. 01 427 தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக் காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான் ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே. 02 428 நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல் அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும் பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே. 03 429 சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங் கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந் தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே. 04 430 கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான் விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே. 05 431 எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக் கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ் சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே. 06 432 சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன் அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால் நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே. 07 433 எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள் நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான் உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத் தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே. 08 434 கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய் அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான் தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே. 09 435 உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான் முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன் பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ் சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே. 10 436 தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக் கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார் பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.41 திருச்சாய்க்காடு பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
437 மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங் கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும் விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே. 01 438 போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச் சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும் வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே. 02 439 நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார் சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே. 03 440 கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய் மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே. 04 441 கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப் பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந் தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ் ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே. 05 442 சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன் தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல் ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள் தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே. 06 443 மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான் கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே. 07 444 தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப் படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந் தடவரையால் தடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை இடவகையா லடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே. 08 445 வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும் ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை தையலார் பாட்டோ வாச் சாய்க்காட்டெம் பெருமானைத் தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே. 09 446 குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய் அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந் திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின் புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே. 10 447 நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச் சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.42 திருஆக்கூர் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
448 அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந் தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான் புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 01 449 நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான் காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில் கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்திற் தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே. 02 450 வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தைத் தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில் வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந் தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 03 451 கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப் பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில் அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 04 452 வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென் பாக்கினான் பலகலன்க ளாதரித்துப் பாகம்பெண் ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடைத் தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 05 453 பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான் கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில் விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடந் தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 06 454 வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில் பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள் தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 07 455 கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில் பொன்னடிக்கே நாடோ றும் பூவோடு நீர்சுமக்குந் தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 08 456 நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில் இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந் தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 09 457 நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர் பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில் சேன்மருவு பங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 10 458 ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி மாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல் பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர், தேவியார் - கட்கநேத்திரவம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.43 திருப்புள்ளிருக்குவேளூர் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
/table> திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.44 திருஆமாத்தூர் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
459 கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. 01 460 தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும் ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம் மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப் பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே. 02 461 வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம் யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே. 03 462 மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம் ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண் போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 04 463 கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. 05 464 திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம் மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப் புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 06 465 அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப் பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம் பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே. 07 466 பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம் எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப் புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 08 467 வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச் சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம் ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும் போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 09 468 கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம் விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப் புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 10 469 செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான் பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக் கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல் மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே. 11 470 துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன் பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே. 01 471 கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில் மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம் பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே. 02 472 பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர் தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான் ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன் சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே. 03 473 கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள் பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும் ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே. 04 474 பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான் ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன் வேட நெறிநில்லா வேடமும் வேடமே. 05 475 சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற் காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான் யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானத் தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே. 06 476 மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை வேறாக நில்லாத வேடமே காட்டினான் ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே. 07 477 தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன் நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால் ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே. 08 478 புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர் உள்ளு மவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதே அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம் வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே. 09 479 பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக் கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான் அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர் நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே. 10 480 ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக் கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன் நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன் பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 11 இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர், தேவியார் - அழகியநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.45 திருக்கைச்சினம் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
481 தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான் மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான் நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர் கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 01 482 விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான் படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான் நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே. 02 483 பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ் சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும் ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக் காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே. 03 484 பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ் சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவியக் கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 04 485 தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன் வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான் சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்*நஞ் சுண்டனங்கைக் காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 05 * நஞ்சுண்டு--அனங்கை எனப்பிரித்து, அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க. 486 மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான் அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான் திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற் கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 06 487 வரியரவே நாணாக மால்வரையே வில்லாக எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான் பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர் கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே. 07 488 போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல் மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன் நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங் காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 08 489 மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும் எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான் பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற் கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 09 இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10 490 தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன் கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப் பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார் விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கைச்சினநாதர், தேவியார் - வேள்வளையம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.46 திருநாலூர்த்திருமயானம் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
491 பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான் நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே. 01 492 சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக ஆடும் பறைசங் கொலியோ டழகாக நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப் பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே. 02 493 கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன் றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான் நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச் சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே. 03 494 கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான் நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான் ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற் சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே. 04 495 கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன் பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம் இறையானென் றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே. 05 496 கண்ணார் நுதலான் கனலா டிடமாகப் பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே. 06 497 கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான் பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான் நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை எண்பாவு சிந்தையார்க் கேலா இடர்தானே. 07 498 பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால் வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான் நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென் அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே. 08 499 மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய் மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள் நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம் பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே. 09 500 துன்பாய மாசார் துவராய போர்வையார் புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள் நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே. 10 501 ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான் நாலு மறையோது நாலூர் மயானத்தைச் சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக் கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பலாசவனேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.47 திருமயிலாப்பூர் - பூம்பாவைத்திருப்பதிகம் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
502 மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 01 503 மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். 02 504 வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். 03 505 ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக் கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 04 506 மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 05 507 மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் அடலானே றூரும் அடிக ளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 06 508 மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 07 509 தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான் கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள் கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். 08 510 நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும் உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக் கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். 09 511 உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும் இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில் கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 10 512 கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார் வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே. 11 இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம். இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கபாலீசுவரர், தேவியார் - கற்பகவல்லியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.48 திருவெண்காடு பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
513 கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. 01 514 பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. 02 515 மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும் பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன் விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே. 03 516 விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே. 04 517 வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன் மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர் ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே. 05 518 தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன் ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில் பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. 06 519 சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே. 07 520 பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில் கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே. 08 521 கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள் ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான் வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென் றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. 09 522 போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும் பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின் வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென் றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே. 10 523 தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப் பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார் மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர், தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.49 சீகாழி பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
524 பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறும் கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப் பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு மானை யெம்பெரு மானென் றென்றுன்னும் அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே. 01 525 மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்கம் வங்கமுங் கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி வண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே. 02 526 நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற் காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி தோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும் வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே. 03 527 மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறுங் கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி ஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர் உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே. 04 528 மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்தி லம்விழக் கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி வலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திட மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே. 05 529 மற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங் கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி நெற்றி மேலமர் கண்ணி னானைநி னைந்தி ருந்திசை பாடுவார் வினை செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே. 06 530 தான லம்புரை வேதி யரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில் கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென் றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே. 07 531 மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங் கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி அத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல் பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே. 08 532 பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள் கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி திருவின் நாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகிய இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே. 09 533 பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர் கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித் தொண்டை வாயுமை யோடுங் கூடிய வேடனே சுட லைப்பொ டியணி அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே. 10 534 பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும் உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ் கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி நயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.50 திருஆமாத்தூர் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
535 குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில் வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே தென்ற லார்மணி மாட மாளிகை சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல் அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே. 01 536 பரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம் வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே கரவின் மாமணி பொன்கொ ழித்திழி சந்து காரகில் தந்து *பம்பைநீர் அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே. 02 * பம்பை என்பது ஒரு நதி. 537 நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன் மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென் பூண்ட கேழல்ம ருப்பரா விரி கொன்றை வாளரி யாமை பூணென ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே. 03 538 சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத் தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென் பாலின் நேர்மொழி மங்கை மார்நட மாடி யின்னிசை பாட நீள்பதி ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே. 04 539 தொண்டர் வந்துவ ணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்து வாரவர் உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம் வண்ட லார்கழ னிக்க லந்தும லர்ந்த தாமரை மாதர் வாண்முகம் அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே. 05 540 ஓதி யாரண மாய நுண்பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென் சோதியே சுடரே சுரும் பமர் கொன்றை யாய்திரு நின்றி யூருறை ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே. 06 541 மங்கை வாணுதன் மான்ம னத்திடை வாடி யூடம ணங்க மழ்சடைக் கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம் பங்க யமது வுண்டு வண்டிசை பாட மாமயி லாட விண்முழ வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே. 07 542 நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை யாத வண்ணம்நி னைந்து ளத்திடை வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென் குன்றெ டுத்தநி சாசரன் திரள் தோளி ருபது தான் நெரிதர அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 08 543 செய்ய தாமரை மேலி ருந்தவ னோடு மாலடி தேட நீண்முடி வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென் தைய லாளொடு பிச்சைக் கிச்சைத யங்கு தோலரை யார்த்த வேடங்கொண் டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 09 544 புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென் முத்தை வென்ற முறுவ லாளுமை பங்க னென்றிமை யோர் பரவிடும் அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே. 10 545 வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம் ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக் கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன் பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே. 11 ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும், ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.51 திருக்களர் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
546 நீருளார் கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவய லீண்டு மாமதில் தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள் ஊரு ளாரிடு பிச்சை பேணும் ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே. 01 547 தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள் வேளின் நேர்விச யற்க ருள்புரி வித்த காவிரும் பும்ம டியாரை ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே. 02 548 பாட வல்லநல் மைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய் சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாடத் திருக்களருள் நீட வல்ல நிமல னேயடி நிரை கழல்சிலம் பார்க்க மாநடம் ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே. 03 549 அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை செம்பொனார் பொழில்சூழ்ந் தழகாய திருக்களருள் என்பு பூண்டதோர் மேனி யெம்மிறை வாஇ ணையடி போற்றி நின்றவர்க் கன்புசெய் தவனே அடைந்தார்க் கருளாயே. 04 550 கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் கிண்டி மாமது வுண்டி சைசெயத் தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள் மங்கை தன்னொடுங் கூடிய மண வாளனே பிணை கொண்டொர் கைத்தலத் தங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே. 05 551 கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச் சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள் நீல மேவிய கண்டனே நிமிர் புன்ச டைப்பெரு மானெ னப்பொலி ஆலநீழ லுளாய் அடைந்தார்க் கருளாயே. 06 552 தம்ப லம்மறி யாதவர் மதில் தாங்கு மால்வரை யால ழலெழத் திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள் வம்ப லர்மலர் தூவி நின்னடி வானவர் தொழக் கூத்து கந்துபே ரம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே. 07 553 குன்ற டுத்தநன் மாளிகைக் கொடி மாட நீடுயர் கோபு ரங்கள்மேல் சென்றடுத் துயர்வான் மதிதோயுந் திருக்களருள் நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள் தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே. 08 554 பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் பாட லாடலொ டார வாழ்பதி தெண்ணிலா மதியம் பொழில்சேருந் திருக்களருள் உண்ணி லாவிய வொருவ னேயிரு வர்க்கு நின்கழல் காட்சி யாரழல் அண்ணலாய எம்மான் அடைந்தார்க் கருளாயே. 09 555 பாக்கி யம்பல செய்த பத்தர்கள் பாட்டொ டும்பல பணிகள் பேணிய தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள் வாக்கின் நான்மறை யோதி னாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய் ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே. 10 556 இந்து வந்தெழு மாட வீதியெ ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன் செந்துநேர் மொழியார் அவர்சேருந் திருக்களருள் அந்தி யன்னதொர் மேனி யானை அமரர் தம்பெரு மானை ஞானசம் பந்தன்சொல் லிவைபத் தும்பாடத் தவமாமே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - களர்முளையீசுவரர், தேவியார் -அழகேசுவரியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.52 திருக்கோட்டாறு பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
557 கருந்த டங்கண்ணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழில் குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில் இருந்த எம்பெரு மானை யுள்கி இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள் வருந்துமா றறியார் நெறிசேர்வர் வானூடே. 01 558 நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழை குன்றின் நேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள் என்றும் மன்னிய எம்பிரான் கழ லேத்தி வானர சாள வல்லவர் பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே. 02 559 விரவி நாளும் விழாவி டைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக் குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில் அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன் அன்பு செய்தடி பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே. 03 560 அம்பின் நேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக் கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில் நம்பனே நடனே நலந் திகழ் நாதனே யென்று காதல் செய்தவர் தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே. 04 561 பழைய தம்மடி யார்துதி செயப் பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக் குழலும் மொந்தை விழாவொலிசெய்யுங் கோட்டாற்றில் கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் கானி டைக்கண மேத்த ஆடிய அழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே. 05 562 பஞ்சின் மெல்லடி மாத ராடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலுங் கொஞ்சி இன்மொழியாற் றொழின்மல்கு கோட்டாற்றில் மஞ்ச னேமணி யேமணி மிடற் றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர் துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே. 06 563 கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில் நிலவ மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர் உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே. 07 564 வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில் தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனை மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே. 08 565 கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் தேட ஆனையின் குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில் விருதி னான்மட மாதும் நீயும்வி யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள் ளெருதுகந் தவனே இரங்காயுன தின்னருளே. 09 566 உடையி லாதுலழ் கின்ற குண்டரும் ஊணருந் தவத் தாய சாக்கியர் கொடையிலார் மனத்தார் குறையாருங் கோட்டாற்றில் படையி லார்மழு வேந்தி யாடிய பண்ப னேயிவ ரென்கொ லோநுனை அடைகிலாத வண்ணம் அருளாயுன் அடியவர்க்கே. 10 567 கால னைக்கழ லாலு தைத்தொரு காம னைக்கன லாகச் சீறிமெய் கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில் மூல னைமுடி வொன் றிலாதவெம் முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய மாலைபத்தும் வல்லார்க் கெளிதாகும் வானகமே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஐராபதேசுவரர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.53 திருப்புறவார் - பனங்காட்டூர் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
568 விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்வரி பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப் பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக் கண்ண மர்ந்தவ னேகலந்தார்க் கருளாயே. 01 569 நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப் பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள் ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே. 02 570 வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற் பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப் பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத் தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே. 03 571 மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர் ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர் சாய்ந்தடி பரவுந் தவத்த்தார்க் கருளாயே. 04 572 செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க் கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி அங்கை யாடலனே அடியார்க் கருளாயே. 05 573 நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும் பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க் காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறுஞ் சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே. 06 574 கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி பையரா விரியும் புறவார் பனங்காட்டூர் மெய்ய ரிவையோர் பாக மாகவும் மேவி னாய்கழ லேத்தி நாடொறும் பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளாயே. 07 575 தூவி யஞ்சிறை மென்ன டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப் பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர் மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள் ஏவிய பெருமான் என்பவர்க் கருளாயே. 08 576 அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்த மல்லிகை பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர் எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர் சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே. 09 577 நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர் நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே. 10 578 மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப் பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர் ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன் செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 11 இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - திருப்புருவமின்னாளம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.54 திருப்புகலி பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம்
579 உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்குக் கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர் பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித் திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே. 01 580 நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர் ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர் போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலிச் சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 02 581 அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்தோளீர் பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே. 03 582 கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல் மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர் பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே. 04 583 நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர் பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும் பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலி தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே. 05 584 மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும் பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர் விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக் கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 06 585 களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர் அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர் தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே. 07 586 பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட் டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார் புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 08 587 சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங் கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர் புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே. 09 588 நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங் கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர் பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 10 589 ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன் செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார் எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.55 திருத்தலைச்சங்காடு பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
590 நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ் சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர் குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலுந் தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே. 01 591 துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர் மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர் *பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 02 * பிணி - பிணித்தல் 592 சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர் நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத் தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே. 03 593 வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள் ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக் கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும் மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 04 594 சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர் நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர் ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக் கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. 05 595 நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார் சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே. 06 596 அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக் கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர் பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக் கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 07 597 திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர் அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே. 08 598 பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும் போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார் தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச் சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 09 599 அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர் தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர் தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே. 10 600 நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன் குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார் மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே. 11 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - செங்கணாயகேசுவரர், தேவியார் - சௌந்தரியம்மை. திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.56 திருவிடைமருதூர் பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
601 பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர் எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில் மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 01 602 நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர் போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர் ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில் சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 02 603 அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாடச் சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர் எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில் பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே. 03 604 பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர் வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடையார் கொடியினீர் எல்லாக் கணங்களும் முறையாலேத்த இடைமருதில் செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 04 605 வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப் பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத் திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில் பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே. 05 606 சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர் வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர் இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில் புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே. 06 607 புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர் இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில் கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 07 608 சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன் தலைபத்துந் திண்டோ ளும் நெரித்தீர் தையல்பாகத்தீர் இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த இடைமருதில் நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே. 08 609 மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர் கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர் அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில் நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 09 610 சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணருந் துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில் அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 10 611 கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன் நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன் எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ் சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரமில்லையே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.57 திருநல்லூர் பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
612 பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப் பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர் திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர் மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 01 613 அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில் கொலைமல்கு வெண்மழுவும் அனலுமேந்துங் கொள்கையீர் சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர் மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 02 614 குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப் பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர் சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர் மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 03 615 கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர் மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர் தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர் வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 04 616 நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள் அணங்கமரும் பாடலோ டாடல்மேவும் அழகினீர் திணங்கவரும் ஆடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர் மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 05 617 கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர் தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர் ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே. 06 618 ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண மீன்தோயுந் திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர் தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர் வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 07 619 காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப மாதமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர் தீதமரா அந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர் மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 08 620 போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மைக் காணாது நாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர் தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர் மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே. 09 621 பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன் றல்லாதார் அறவுரைவிட் டடியார்கள் போற்றோவா நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர் மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 10 622 கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன் செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப் பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல் சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.58 திருக்குடவாயில் பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
623 கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல் அலைவாழுஞ் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர் குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில் நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே. 01 624 அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப அங்கையில் செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர் குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற் படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே. 02 625 கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன் றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர் குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில் நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 03 626 மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந் தெறியாரும் மாமழுவும் எரியுமேந்துங் கொள்கையீர் குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில் நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 04 627 இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாகப் பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர் குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில் விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே. 05 628 அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர் இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர் குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயிற் திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே. 06 629 பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர் ஆடலார் மாநடத்தீர் அரிவைபோற்றும் ஆற்றலீர் கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில் நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 07 630 கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும் அங்காந்து தள்ளாட அழலாய்நிமிர்ந்தீர் இலங்கைக்கோன் தங்காதல் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில் பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே. 08 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 09 631 தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும் ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொள்மாடக் குடவாயில் ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத் தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 10 632 நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன் குளிர்பூங் குடவாயிற் கோயில்மேய கோமானை ஒளிர்பூந் தமிழ்மாலை உரைத்தபாட லிவைவல்லார் தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.59 சீகாழி பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
633 நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங் கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே. 01 634 ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே. 02 635 வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக் கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே. 03 636 மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங் கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப் பனைக்காப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே. 04 637 பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச் சுருதி மறைநான் கான செம்மை தருவானைக் கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே. 05 638 மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப் பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச் சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே. 06 639 புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக் கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப் பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே. 07 640 அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக் கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப் பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல் பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே. 08 641 மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங் காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப் பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக் கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே. 09 642 அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர் கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித் தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள் துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே. 10 643 ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக் காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன் தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார் வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே. 11
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப 2.60 திருப்பாசூர் பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
644 சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார் மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும் பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே. 01 645 பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென் றாருந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார் ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும் பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே. 02 646 கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள் மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார் நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும் பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே. 03 647 பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக் கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார் தங்கா தலியுந் தாமும் வாழும் ஊர்போலும் பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே. 04 648 ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும் சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார் வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும் பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே. 05 649 கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத் தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள் மால்கொண் டோ ட மையல் தீர்ப்பார் ஊர்போலும் பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே. 06 650 கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி எண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார் உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும் பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே. 07 651 தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக் கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும் பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே. 08 652 நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும் புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார் செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும் பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே. 09 653 தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர் நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார் காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும் பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே. 10 654 ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன் தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர்க் கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார் ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே. 11 இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாசூர்நாதர், தேவியார் - பசுபதிநாயகியம்மை. திருச்சிற்றம்பலம்
|