|
||||||||
ஞானக்குறள்-தன்பால்-உயர்ஞான தரிசனம் |
||||||||
கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா. 301
வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம். 302
செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில். 303
வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி. 304
வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துபே ராது செயல். 305
இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான். 306
அரசறி யாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன். 307
கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல்.
308
திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள்.
309
கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு.
310
கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப் பிண்டமு மூழி பிரியா. 301 |
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|