|
||||||||||||||||||
தொடர்:இன்ஸ்பிரேஷன்-4 |
||||||||||||||||||
காமராஜ்
கல்விக் கட்டணத்தை மெல்ல மெல்ல தளர்த்தினார். ஆனால் என்ன செய்ய மாணவர்கள் படிக்க வரவில்லை. காரணம் ஏழ்மை. வாழ்க்கையை ஏழ்மையை சீரழித்துக் கொண்டிருந்தது. இப்படியே போனால் என்னாவது என்று சிந்தித்தார் காமராஜ். கல்விக் கட்டணைத்தை குறைத்தால் கூட படிக்கமுடியாத அளவு வாழ்க்கை தரம் இருந்தது. ஆனால் அவர்கள் படித்துவிட்டால் அவர்களது வாழ்க்கை தரம் மட்டுமல்ல. நாடும் முன்னேறும் என்று கனவு கண்டார் காமராஜ்.
அதற்காக ஒரு திட்டம் வகுத்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார். அதனால் ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்தனர். எப்படியாவது குழந்தைகளை படிக்கவைத்துவிட வேண்டும் என்ற தூண்டுகோல் தமிழகைத்தையே மாற்றியது. கல்வி புரட்சி ஏற்பட்டது. குப்பனும் சுப்பனும் கூட கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்தது, காமராஜரின் தனி மனித தூண்டுகோல் சமுதாயத்தையே மாற்றிவிட்டது. ஹியூமர் இன்ஸ்பிரேஷன் இதுவரை நாம் சமுதாயத்தையும் உலகத்தையும் மாற்றிய தூண்டுகோல்களைப் பார்த்தோம் அல்லவா. நாம் இந்த முறை சார்லி சாப்ளினின் இன்ஸ்பிரேஷனைப் பார்ப்போம். நாம் அவசர அவசரமாக சாலையைக் கடக்கையில் சாலை ஓரம் அமர்ந்திருக்கும் செருப்பு கடைக்காரன் நமது காலணிகளையே பார்ப்பான். காரணம் அவனது தொழில் அதுபோல் தான் சார்லி சாப்ளின் ஹிட்லரின் செயல் பாடுகளை காமெடியாக உணர்ந்தார். ஆயிரம் கோடிப்பேர் இறப்புக்கு காரணமாகவும் இரண்டாம் உலகப்போர் உருவாக தூண்டுகோலாகவும் இருந்தவர் அல்டாஃப் ஹிட்லர். யூதர்களை இனத்துரோகிகளாக கருதிய ஹிட்லர். அவர்களைக் கொல்வதற்காகவே மரண தொழிற்சாலை அமைத்தார். யூதர்களைக் கொன்று புதை குழியில் போட்டு மூடினார். கொல்லப்படும் யூதர்களை கணக்கு வைத்துக் கொள்வதற்காகவே நாஜிப் படையினர் இடையில் ஒரு தனிப் பிரிவினை ஏற்படுத்தினார். துப்பாகிச் சுடும் பயிற்சிக்காக யூதர்களை ஒரு பொம்மையைப் போல பயன்படுத்தினார் ஹிட்லர். அத்தகைய கொடுங்கோலாட்சி செய்தவர் ஹிட்லர். அவரது பெயரைக் கேட்டாளே குலை நடுங்கும். இன்றைக்குக் ஏதாவது அராஜகத்தை நேரில் பார்த்தால் ஹிட்லர் தான் நினைவுக்கு வருவார். பல கொடுங்கோல் ஆட்சிகளுக்கு அடிப்படை ஹிட்லர். ஹிட்லரை நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைக்க வேண்டும் ஆனால் ஒரு சார்லி சாப்ளினுக்கு நகைச்சுவையாக தோன்றியது. ஹிட்லரின் வீரம் அந்த நடிகருக்கு இதைப் போன்ற ஒரு நகைச்சுவை உலகத்தில் இல்லை என்பதைப் போல் தோன்றியது.
_ சூர்யா சரவணன் -முற்றும் |
||||||||||||||||||
by Swathi on 30 Aug 2012 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|