இயக்குனர், தயாரிப்பாளர் லிங்குசாமி, அடுத்த ஆண்டு(2015) கார்த்தி மற்றும் விஷாலை வைத்து படம் இயக்க உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டள்ள குறிப்பில் கூறியதாவது, 2015ம் ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பான ஆண்டு, புதிய புராஜெக்டுகளோடு 2015ல் அடியெடுத்து வைக்க உள்ளேன். ஏற்கனவே இந்த புதிய படங்களுக்கான முன்னேற்பாடுகள் முடிந்துவிட்டன.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கின்றன. ’பையா’ மற்றும் அதன் தெலுங்கு டப்பிங்கான ‘ஆவரா’ படங்களின் வெற்றிக்கு பிறகு மீண்டும் கார்த்தியின் புதிய படத்தில் இணைந்துள்ளேன். புதுமுக நடிகை படத்தின் நாயகியாக நடிக்க உள்ளார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.
இந்த படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் ‘சண்டக்கோழி 2’ படத்தை எடுக்க உள்ளேன். இப்படம் தெலுங்கிலும் வெளியாகும். எனது வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள், இதே ஆதரவை அடுத்த ஆண்டிலும் அளிப்பீர்கள் என நம்புகிறேன் என அக்கடித்ததில் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
|