ஒரு ஊரில் குல்லாய் வியாபாரி ஒருவன் இருந்தான்.தினமும் சிறிது நேரம் களைபார்வதர்க்கு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து செல்வது அவனது வழக்கமாக இருந்தது.அன்று ஒரு நாள் வியாபாரம் முடிந்து களைப்பார்வதர்க்கு அதே மரத்தடியில் அமர்ந்தான்.அவன் மூட்டையில் அன்று விற்பனை போக மிதமுள்ள குல்லாய்கள் சிறிது இருந்தன.ஆனால் அந்த மரத்தின் மேல் சில குரங்கள் இருந்தன என்பதை அறியாமல் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார்.குரங்குகளோ குல்லாய் எல்லாவற்றையும் தலையில் மாட்டிக்கொண்டு மரத்தில் மேல் விளையாடிக்கொண்டு இருந்தன.
கண்முழித்து பார்த்த வியாபாரி குல்லாயிகளை காணமல் அதிர்ச்சி அடைந்தார் .மரத்தில் குல்லாயுடன் குரங்கு இருப்பதை கண்டார் .எப்படி குல்லாயிகளை வாங்குவது என்று யோசித்தார் .யோசித்து கொண்டே தலையை சொரிய குரங்குகளும் அதே போல் செய்தன.இதை கண்ட வியப்பாரி அவர் தலையிலுள்ள குல்லாயை கீழே போட, குரங்குகளும் அதே போல் செய்ய குல்லாய் கிழே விழுந்தது.குல்லாய் கிடைத்த மகிழ்ச்சியுடன் வியாபாரி வீடு திரும்பினார்.எனவே சிந்தித்து செயல்ப்பட்டால் வெற்றி கிடைக்கும்.
|