நடிகர்கள் : சேது, சந்தானம், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்,
நடிகை : விசாகா
இயக்கம்: மணிகண்டன்
தயாரிப்பு: ராம.நாராயணன், சந்தானம்
இசை: தமன்
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம்
சந்தானம், பவர் ஸ்டார், சேது ஆகிய மூவரும் நண்பர்கள். சைட்டடிப்பது, தண்ணி அடிப்பதுதான் இவர்களின் முழுநேர வேலை. இவர்களின் வீடிற்கு எதிர் வீட்டில் குடிவருகிறது விசாகாவின் குடும்பம். விசாகாவை காதலிப்பதில் நாயகர்கள் மூவரிடையே போட்டி ஏற்படுகிறது. நம் மூவரில் விசாக யாரை காதலிக்கிறாரோ, அவருக்கு மற்ற இருவரும் விட்டுகொடுத்திட வேண்டும் என மூவரும் ஒரு உடன்பாட்டிற்கு வருகின்றனர். விசாக வீட்டில் நுழைவதற்காக மூன்று பேரும் பல உத்திகளை கையாளுகின்றனர். அதன் படி விசாகாவின் சித்தி சொல்லும் வீட்டு வேலைகளை செய்து அவருக்கு எடுபிடியாக மாறுகிறார் சேது, விசாகாவின் சித்தப்பாவிடம் பாட்டு கற்றுக்கொள்ள சேருகிறார் சந்தானம். விசாகாவின் அப்பாவிடம் நடனம் கற்றுகொள்ள வருகிறார் பவர் ஸ்டார்.
இந்த மூன்று பெயரில் விசாகாவின் மனதை யார் கொள்ளை அடிக்கிறார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
இந்த படம் பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘இன்று போய் நாளை வா’ படத்தின் காப்பியாக இருந்தாலும், காமெடி வசனங்களால் படம் பட்டைய கிளப்புகிறது. குறிப்பாக பவர் ஸ்டாரின் காமெடியால் அரங்கமே விசில் சத்தம் பறக்கிறது.மொத்தத்தில் படம் குடும்பத்தோடு சாப்பிட வேண்டிய திருப்பதி லட்டு.
|