இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் அனேகன் படத்தைத் தொடர்ந்து, ஆர்யாவை வைத்துப் படமெடுக்கவிருப்பதாகவும் அந்தப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை ஏதும் வரவில்லை. விரைவில் அந்த அறிவிப்பு வருமென்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது வேறொரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க ஜெயம்ரவி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் அடுத்து அந்தப்படத்தைத்தான் அவர் தொடங்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தை கோகுலம் பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. என்னபடம்? யார் நாயகன்? என்பதைத்தாண்டி கே.வி.ஆனந்தின் அடுத்தபடத்தை ஏ.ஜி.ஏஸ் நிறுவனம்தான் தயாரிக்கும் என்று உறுதியாகச் சொல்லப்பட்ட நிலையில் இப்போது இப்படி ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. இதில் எது உண்மை என்பதை கே.வி.ஆனந்த்தான் உறுதிபடுத்த வேண்டும்.
|