சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. அவரது ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, இரண்டு லட்ச ரூபாய் சொந்த ஜாமின் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். சொத்து குவிப்பு வழக்கில், கடந்த ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டிக்கு, தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 16 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு இன்று ஜாமின் கிடைத்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமின் கிடைத்ததற்கு, அவரது கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்
|