LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

விண்வெளியில் 180 வாட்ஸ் மின்சாரம் தயாரித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை

 

சென்னை கருந்துளை, நியூட்ரான் நட்சத் திரங்கள் போன்ற வானியல் நிகழ்வு களை ஆய்வு செய்வதற்காக எக்ஸ் போசாட் எனும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது.
*******************
இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி 1-ம் தேதி பூமி யில் இருந்து சுமார் 650 கி.மீ உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன்மூலம் கருந் துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட பல் வேறு அம்சங்கள் குறித்து 5 ஆண்டு களுக்கு ஆய்வு செய்யப்பட உள்ளது.
*******************
இதுதவிர பிஎஸ்எல்வி ராக்கெட் டின் இறுதி பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) எனும் பரிசோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது, செயற்கைக்கோளை நிலைநிறுத்திய பின்னர் பிஎஸ்-4 இயந்திரத்தின் உயர மானது 350 கி.மீட்டருக்கு கீழே கொண்டுவரப்பட்டு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
*******************
இதற்காக அந்த இயந்திரத் தில் இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாரித்த 10 ஆய்வுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. அவ் வாறு பிஎஸ் 4 இயந்திரத்தில் இருந்த எப்சிபிஎஸ் (Fuel cell Power SystemFCPS) கருவி மூலம் மின்சார தயாரிப்பு சோதனை தற்போது வெற்றிகரமாக மேற்கொ ள ்ள ப்பட் டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
*******************
மின்னாற்றல் உற்பத்தியால் விண்ணில் மாசு ஏற்படாது
*******************
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானி கள் சிலர் கூறும்போது, ‘‘பிஎஸ் 4 இயந்திரத்தில் இருந்த ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவை கொண்டு, ஃப்யூல் செல் கருவி மூலம் 180 வாட்ஸ் அளவுக்கு மின்னாற்றல் உற்பத்தி சோதனை செய்யப்பட்டுள் ளது. இத்தகைய மின்னாற்றல் உற் பத்தியால் விண்ணில் மாசு ஏற்படாது. இந்தசோதனை எதிர்காலத்தில் சூரிய ஒளியின்றி விண்வெளியில் மின்னாற் றல் தேவையை பெற முடியும் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.
*******************
மேலும், இதன்மூலம் மனிதர்களை விண் ணுக்கு அனுப்பும்போது தண்ணீர் மற்றும் மின்னாற்றல் தேவைகளை யும் இத்தகைய வழிகளில் நாம் பூர்த்தி செய்துக் கொள்ளலாம்’’ என்றனர். இதற்கிடையே அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் ஏற் கெனவே விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளன. அந்த வரிசை யில் இந்தியாவும் தற்போது சேர்ந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
*******************
இதற்கு காரணமான ஃப்யூல் செல் கருவியானது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தால் தயாரிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை கருந்துளை, நியூட்ரான் நட்சத் திரங்கள் போன்ற வானியல் நிகழ்வு களை ஆய்வு செய்வதற்காக எக்ஸ் போசாட் எனும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது.

இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி 1-ம் தேதி பூமி யில் இருந்து சுமார் 650 கி.மீ உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன்மூலம் கருந் துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட பல் வேறு அம்சங்கள் குறித்து 5 ஆண்டு களுக்கு ஆய்வு செய்யப்பட உள்ளது.

இதுதவிர பிஎஸ்எல்வி ராக்கெட் டின் இறுதி பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) எனும் பரிசோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது, செயற்கைக்கோளை நிலைநிறுத்திய பின்னர் பிஎஸ்-4 இயந்திரத்தின் உயர மானது 350 கி.மீட்டருக்கு கீழே கொண்டுவரப்பட்டு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக அந்த இயந்திரத் தில் இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாரித்த 10 ஆய்வுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. அவ் வாறு பிஎஸ் 4 இயந்திரத்தில் இருந்த எப்சிபிஎஸ் (Fuel cell Power SystemFCPS) கருவி மூலம் மின்சார தயாரிப்பு சோதனை தற்போது வெற்றிகரமாக மேற்கொ ள ்ள ப்பட் டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மின்னாற்றல் உற்பத்தியால் விண்ணில் மாசு ஏற்படாது

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானி கள் சிலர் கூறும்போது, ‘‘பிஎஸ் 4 இயந்திரத்தில் இருந்த ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவை கொண்டு, ஃப்யூல் செல் கருவி மூலம் 180 வாட்ஸ் அளவுக்கு மின்னாற்றல் உற்பத்தி சோதனை செய்யப்பட்டுள் ளது. இத்தகைய மின்னாற்றல் உற் பத்தியால் விண்ணில் மாசு ஏற்படாது. இந்தசோதனை எதிர்காலத்தில் சூரிய ஒளியின்றி விண்வெளியில் மின்னாற் றல் தேவையை பெற முடியும் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

மேலும், இதன்மூலம் மனிதர்களை விண் ணுக்கு அனுப்பும்போது தண்ணீர் மற்றும் மின்னாற்றல் தேவைகளை யும் இத்தகைய வழிகளில் நாம் பூர்த்தி செய்துக் கொள்ளலாம்’’ என்றனர். இதற்கிடையே அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் ஏற் கெனவே விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளன. அந்த வரிசை யில் இந்தியாவும் தற்போது சேர்ந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

இதற்கு காரணமான ஃப்யூல் செல் கருவியானது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தால் தயாரிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

 

by Kumar   on 06 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.