LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

விண்வெளி நிலையம் அமைக்க பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியது இஸ்ரோ.

இஸ்ரோவால் உருவாக்கப்படும் விண்வெளி நிலையம் 2035-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை ஏற்படுத்தி உள்ளன.

 

அதேபோல் சீனாவும் தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளது. இதேபோன்று 3-வதாக இந்தியாவும் தமக்குச் சொந்தமான விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டு பணியில் இறங்கி உள்ளது.

 

விண்வெளியில் இந்த நிலையத்தை அமைக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கி உள்ளது. இதற்கான பணிகள் ஒவ்வொரு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. முழுமையான திட்ட அறிக்கைகள் எல்லாம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகிறது.

 

இது இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு, 2035-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தத் திட்டம் தொடர்பான கருத்துருவாக்கக் கட்டத்தில் உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.

 

இந்த விண்வெளி நிலைய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மட்டுமே தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 25 டன் எடையைக் கொண்டிருக்கும் இந்த விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கு, 2025-ம் ஆண்டு ஆரம்பக் கட்ட பணிகளைத் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதற்காக எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை. நிதிநிலை குறித்து போதுமான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் நிதி ஒதுக்கப்படும். இஸ்ரோ இந்த நிலையத்தை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்தி வருவதால், விண்வெளியில் தாங்கள் விரும்பும் புதிய உயரங்களை இஸ்ரோ எட்டும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

by Kumar   on 15 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.