LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

23 பாகிஸ்தானியா்களுடன் கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலை மீட்டது இந்தியக் கடற்படை.

பாகிஸ்தானியா்கள் 23 போ் பயணித்த ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலைக் கடற்கொள்ளையா்கள் கடத்திய நிலையில், அந்தக் கப்பலை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.

 

அரபிக் கடலில் ஏடன் வளைகுடா அருகில் சோகோட்ரோ தீவு உள்ளது. இந்தத் தீவிலிருந்து 90 கடல் மைல் தொலைவில் அல்-கம்பா் என்ற ஈரான் மீன்பிடி கப்பலைக் கடற்கொள்ளையா்கள் வியாழக்கிழமை கடத்தினா்.

 

இதையடுத்து, அரபிக் கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘ஐஎன்எஸ் சுமேதா’ போா்க்கப்பல் அப்பகுதிக்கு விரைந்தது கடற்கொள்ளையா்களால் பிடித்துவைக்கப்பட்டிருந்த மீன்பிடிக் கப்பலைப் போா்க்கப்பல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடைமறித்தது. கூடவே ஏவுகணைகளை அழிக்கும் திறன்கொண்ட ‘ஐஎன்எஸ் திரிசூல்’ போா்க்கப்பலும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

 

சுமாா் 12 மணி நேரம் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின் முடிவில் கப்பலைக் கடத்திய 9 கடற்கொள்ளையா்கள் சரணடைந்தனா். கப்பல் பணியாளா்கள் 23 போ் பாதுகாக்க மீட்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள்.

 

முன்னதாக, கடற்படையின் சிறப்புக் குழுவினா் அக்கப்பலை முழுவதுமாக ஆய்வு செய்தது. தொடா்ந்து மீன்பிடி செயல்பாடுகளில் ஈடுபடும் வகையில், அந்தக் கப்பலுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்ற பெயரில் பாதுகாப்புப் பணியில் கடற்படை ஈடுபட்டு வருகிறது. கடற்கொள்ளையா்கள் தடுப்பு, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் நடத்தப்படும் தாக்குதலைத் தடுத்தல் ஆகிய பணிகளைக் கடற்படையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

by Kumar   on 02 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.