சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய அணி. மழை காரணமாக தாமதாமாக தொடங்கிய இந்த போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது, டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பாட்டிங் செய்த இந்திய அணி நிதானமாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன் எடுத்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 46 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆனால், மோர்கனும், ரவி போபாராவும் சிறப்பான விளையாடினர். ஆனால், இஷாந்த் சர்மா வீசிய ஓவரில் இருவரும் அடுத்தடுத்த ஆட்டமிழந்ததால், இந்தியாவின் கை ஓங்கியது.பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நிற்காமல் ஆடியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. ஆட்டநாயகனமாக ரவீந்திர ஜடேஜாவும், தொடர் நாயகனாக தவானும் அறிவிக்கப்பட்டனர்.
|