இந்தியாவில் அணு உலை அமைப்பதற்காக, அமெரிக்க நிறுவனத்துடன், ஒப்பந்தம் மேற்கொள்ள போவதாகவும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால், இந்தியாவில் ஏற்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்கள், இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இருக்கும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறியிருப்பதாவது,
இந்தியாவில் அணு உலை அமைக்க, அமெரிக்காவின், "வெஸ்டிங்ஹவுஸ்' நிறுவனத்துடன், ஒப்பந்தம் மேற்கொள்ள போவது உண்மை தான். குஜராத்தில் அமைய உள்ள அணுமின் திட்டத்திற்கு, அந்த நிறுவனம், அணு உலையை வழங்க உள்ளது. இதற்காக நம் நாட்டின் நாடாளமன்றத்தில், நிறைவேற்றப்பட்ட, பேரிடர் இழப்பீடு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் போவதில்லை. அமெரிக்கா மட்டுமல்ல; எந்தவொரு நாடும், இந்தியாவில் அணு உலைகளை நிர்மானித்தால், அந்த நிறுவனங்களை இந்தியச் சட்டங்கள் தான் கட்டுப்படுத்தும். ஆனால், நேற்று முன்தினம் இதுகுறித்து, நடு முழுவதும், தேவையற்ற விவாதங்களும், ஊர்ஜிதமாகாத செய்திகளும் பரவியது, வியப்பை அளிக்கிறது. அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு நாம் பணிந்து விட்டதாக சிலர் கூறினர்; அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நம் நாட்டின் சிவில் அணுசக்தி நிறுவனங்களை நிர்வகிக்கும், தேசிய மின் கழகம் மற்றும் அணுசக்தி கழகமும் தான், இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளன. அணு உலைகள் அமைக்கப்பட்ட பிறகும், இவை தான் அவற்றை நிர்வகிக்கும். எனவே, எதற்காகவும் பயப்பட தேவையில்லை என சிவசங்கர் மேனன் தெரிவயுத்துளார்.
|