LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கருவின் வயதைத் துல்லியமாகக் கண்டறியப் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்கிய சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை.

கருவின் வயதைக் கண்டறியும் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். கர்ப்பிணிகளின் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளவும், பிரசவத் தேதியைச் சரியாக நிர்ணயிக்கவும், கரு எப்போது உருவானது என்பதை, அதாவது கருவின் வயதைத் துல்லியமாகக் கணக்கிடுவது அவசி யம்.

 

இன்றைய காலகட்டத்தில், மேற்கத்திய மக்களுக்காக உருவாக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி கருவின் வயது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், கருவின் வளர்ச்சியில் மாறுபாடு இருக்கும் பட்சத்தில், இந்தக் கணக்கீடு தவறாக அமையவும் வாய்ப்பு உள்ளது.

 

இந்நிலையில், 3 மாதக் கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கருவின் வயதைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில், சென்னை ஐஐடியின் உயிரித் தொழில்நுட்பத் துறை, ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத் தில் உள்ள ‘திஸ்டி’ மருத்துவ அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து உயர்நிலை ஆராய்ச்சிக்கான குழுவை அமைத்தது.

 

இந்த ஆராய்ச்சியின் முடிவில், ‘கர்ப்பிணி-ஜிஏ2’ எனப்படும் இந்தியாவுக்கான பிரத்தியேகச் செயற்கை நுண்ணறிவு மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் உரு வாக்கியுள்ளனர். 3 மாதக் கருவின் வயதைக் கண்டறிய, இந்திய மக்கள்தொகை தரவை பயன்படுத்தி, முதன்முதலாக இந்த மதிப்பீட்டு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

 

சென்னை ஐஐடி முக்கிய பங்கு வகிக்கிறது

 

 இது, மருத்துவ ரீதியாக இந்தியக் கருவின் வயதை துல்லியமாக மதிப்பிடுவதுடன், 3 மடங்கு பிழைகளையும் குறைக்கிறது. இந்த மாதிரியைப் பயன்படுத்தி மகப்பேறு மருத்துவர்கள், சிசு பராமரிப்பியல் மருத்துவர்கள் குழந்தை பராமரிப்பை மேம்படுத்த முடியும். தாய் - சேய் உயிரிழப்பு விகிதத்தையும் குறைக்க முடியும்.

 

இந்த ஆராய்ச்சிக்கு மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறைச் செயலர் ராஜேஷ் கோகலே வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘இது உயிரி தொழில் நுட்பத் துறையின் முதன்மையான திட்டம். கருவின் வயதை மதிப் பிடுவதற்கான மக்கள்தொகை சார்ந்த மாதிரிகளை உருவாக்குவது பாராட்டத்தக்கது’’ என்றார்.

 

இந்த ஆராய்ச்சியின் முக்கியத் துவம் குறித்து ஐஐடி உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ஹிமான்சு சின்ஹா கூறியபோது, ‘‘இந்தியாவில் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் சென்னை ஐஐடி முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, மேற்கத்திய மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட மாதிரிகளுக்குப் பதிலாகத் துல்லியமாக இந்தியக்கருவின் வயதைக் கணிக்கும் கருவிகளை உருவாக்க முயன்று வருகிறோம். அதற்கான மாதிரிகளை உருவாக்குவதே இந்த ஆராய்ச்சியின் முதல்படி’’ என்றார்.

by Kumar   on 28 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.