பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில் உருவாக்கி இருக்கும் ஐ திரைப்படத்தின் படபிடிப்பு காட்சிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட இருப்பதால், ஐ படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது தொழில்நுட்ப குழு.
இந்நிலையில், ஐ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.சி.ஸ்ரீராம், தனது பனி அனுபவம் குறித்து, டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
ஐ படத்தில் பணியாற்றியது, ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் தன்னுடன் இணைத்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த பி.சி.ஸ்ரீராம், ‘ஐ’ படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு தனிமனிதனால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பதற்கு ஷங்கர் ஒரு உதாரணம் என்றும் கூறியுள்ளார்.
பி.சி.ஸ்ரீராம், தற்போது, ஷமிதாப் படப்பிடிப்பில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|