தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம், நடத்த உள்ள, குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த ஆணையத்தின் தலைவர், நவநீதகிருஷ்ணன் பிரபல நாளேடு ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் காலியாக உள்ள, 1064 பணியிடங்களுக்காக, குரூப் 2 தேர்வு பற்றிய அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு குறைந்த பட்ச கல்வி தகுதி, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பாகும், இதற்கான எழுத்து தேர்வு வரும் டிசம்பர் மாதம் 1 ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 4 ந்தேதி கடைசி நாளாகும்.
குரூப் 2 தேர்வு எழுதுவோரின் நலன் கருதி டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில், குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்யும் விதமாக ஆப்டிடியூட் டெஸ்ட் எனப்படும் திறனறிவு தேர்வு பகுதியும், இந்த பாடத்திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடத்திட்டத்தில் தாய் மொழியான தமிழுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது என நவநீதகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
குரூப் 2 பாடத்திட்டம் : http://www.tnpsc.gov.in/syllabus/new_syllabus_combined_civil_services_II_updated.pdf
|