LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நாங்கள் காய்கறி கடை நடத்தவில்லை !! கவர்மென்டுதான் நடத்துறோம் !! கபில் சிபல் !!!

வெங்காயத்தை அரசு விற்பதில்லை எனவும், வெங்காயம் விலை உயர்வு குறித்து, அதனை விற்பனை செய்யும் கடைக்காரர்களிடம்தான் கேட்கவேண்டும் என மத்திய அமைச்சர் கபில் சிபல் பொறுப்பற்ற பதில் கூறியுள்ளார். 

 

நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கிலோ 60 முதல் 70 ரூபாய் வரையிலும், டெல்லியில் 80 ரூபாய்க்கும் அதிகமாகவும் விற்பனையாகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். 

 

இந்நிலையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிபலிடம், செய்தியாளர்கள் நேற்று, வெங்காய விலை மேலும் உயருமா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்," இதனை ஏன் நீங்கள் வியாபாரிகளிடம் கேட்கக்கூடாது? அரசாங்கம் வெங்காயத்தை விற்பனை செய்வதில்லை" என நக்கலாக பதிலளித்தார். 

 

இவரது பேச்சுக்கு மருந்து தடவும் விதமாக, வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்திருப்பதால்தான், விலை உயர்வுக்கு காரணமா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் கூறியுள்ளார்.  மேலும் விலை  உயர்வுக்கு ஏற்றுமதியும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுவதால், வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் சந்தைகளுக்கு வரத்தொடங்கி உள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் வெங்காய விலை சீராகிவிடும் என்றும் தாமஸ் தெரிவித்துள்ளார். 

 

by Swathi   on 19 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.