கடந்த ஆண்டு பிரபல பாலிவுட் இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியான லயர்ஸ் டைஸ் என்ற இந்தி படம், அடுத்த ஆண்டு வழங்கப்படவிருக்கும் 87-ஆவது ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய-திபெத்திய எல்லைப்புற கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாய், காணாமல் போன தனது கணவனைத் தேடி தனது இளவயது மகளுடன் தில்லிக்குச் செல்கிறாள். வழியில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுப்பூர்வமாகக் கூறுவதே "லயர்ஸ் டைஸ்' திரைப்படத்தின் கதை.
இந்தப் படத்திற்காக நாயகி கீதாஞ்சலி தாபா, ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஆகியோருக்கு தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஷாஹித்', "குவீன்', "மர்தானி', "மேரி கோம்" உள்பட 29 திரைப்படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு "லயர்ஸ் டைஸ்' ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
|