LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆங்கிலத்தில் தயாராகி வரும் திருக்குறள் குறித்த முழு தகவல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு விவரங்கள்

 

Thirukkural Translations in World Languages - என்ற பெயரில் திருக்குறள் எத்தனை மொழிகளில்      மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களுடன் தயாராகி வருகிறது.
***************************
திருக்குறள் இதுவரை எத்தனை இந்திய, வெளிநாட்டு மொழிகளில் வெளிவந்துள்ளது ?  50 ஆண்டுகளுக்கு மேல் , பல மொழிகளில் , பல நாடுகளில் ஆங்காங்கே வெளியிடப்பட்ட பல மொழிபெயர்ப்புகள் பல இன்று பயன்பாட்டில் இல்லை. 
********************************
தமிழில் "இருப்பதை பரப்புவதும், இல்லாததை உருவாக்குவதும்" என்ற நோக்கில் பயணிக்கும் வலைத்தமிழ் குழு, 2018 ஆம் ஆண்டு இதை தொகுக்க முகநூலில் ஒரு பதிவு போட்டது. அதன் பின்பு 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முறையான ஒரு குழு உருவாக்கப்பட்டு இன்று ஐந்து ஆண்டுகளில் பல நிலைகளைக் கடந்து அவை முறையாக திருக்குறள் மொழிபெயர்ப்பு அச்சுப்பிரதிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு தொகுக்கப்பட்டு, முழு விவரங்களுடன் ஒரு நூலாக ஆங்கிலத்தில் வெளியிட தயாராகிவருகிறது.  ஒரு நூலாகக் கொண்டுவருவதில் ஏற்படும் நேரம் என் பல நாட்களை விழுங்கிவிட்டது.  குழுவின் உதவியால் ஓரளவு நிறைவுப்பகுதிக்கு வந்து வடிவமைப்பு சென்றுகொண்டுள்ளது. வலைத்தமிழ் , வள்ளுவர் குரல் குடும்பம்   தன்னார்வலர்கள் இணைந்து இதை முழுமையாக்கியுள்ளனர். 
*********************************
இக்குழுவில் பயணிக்கும்  மருத்துவர் அஷ்ரப் ஒரு வியப்புக்குரிய திருக்குறள் ஆர்வலர், ஆய்வாளர்.  புதுடெல்லியில் கால்நடை மருத்துவத்துறையில் பெரும் பொறுப்பில் இருந்துகொண்டு திருக்குறளில் அவர் காட்டிய ஆர்வம் எங்களை பிரமிக்கவைத்தது. திருக்குறள் மொழிபெயர்ப்பு என்றால் அவரிடம் இதுகுறித்து  தகவல் இருக்கும் என்று சொல்லுமளவு பல ஆண்டுகளாக இதில் ஆர்வம் கொண்டு ஆழமாகப்  பயணித்து வருபவர். அவரை இக்குழுவில் இணைத்து , அவரின் பல ஆண்டுகள் விவரங்களையும் ஒருங்கிணைந்தது திட்டம் முழுமைபெற வாய்ப்பாக அமைந்தது. நூல்களைத் திரட்ட உதவிய அனைவருக்கும்  நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 
************************************
திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்தான ஒரு நம்பகமான ஒரு அறிக்கையாக இந்த நூல் இருக்கும் என்று நம்புகிறேன்.அனைத்து நூல்களும் இன்னும் முழுமையாகக் கையில் கிடைத்துவிடவில்லை என்றாலும், அவை அடையாளம் காணப்பட்டுள்ளது, தரவுகள் திரட்டப்பட்டுள்ளது.   நூல் வெளிவந்ததும், தரவுகள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படும்.
****************************
திருக்குறளை தேசிய நூலாகவும், யுனெசுகோ அங்கீகாரத்திற்கு கொண்டுசெல்ல மொழிபெயர்ப்பு விவரங்களைக் கொண்ட இந்த ஆங்கில நூல் ஒரு கருவியாக இருக்கும்.    மேலும், ஐக்கிய நாடுகள் சபை, யுனெசுகோ உறுப்பு நாடுகளின் அலுவல் மொழிகளில் எவை இன்னும் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்ற முழு தரவுகளுடன் வருகிறது. 
************************
மேலும், ஒரு குழு அமைத்து தமிழ்ச்சங்கங்கள் செம்மொழி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஒரு சில ஆண்டுகளில் உலக மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இதில் உள்ளது.
*************************
முக்கியமான மூன்று ஆளுமைகள் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளனர்.  இது வழக்கமான நூலாக இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெறும் திருக்குறள் மொழிபெயர்ப்பு விவரங்களைத் திரட்டி வழங்கும் நம்பகமான ஆவணமாக இருக்கும் என்று நம்புகிறேன். 
***************************
மேலும், அச்சில் இல்லாத முக்கிய மொழிபெயர்ப்புகளை மீண்டும் அச்சில் கொண்டுவரவும் ஆர்வமுள்ள அமைப்புகளுடன் இணைந்து திட்டம் வகுக்கப்படும். 
**************************
வரும் திருவள்ளுவர் திருநாளில் இந்நூல் மக்களுக்கு மிகப்பெரிய நிகழ்வில், மிகப்பெரிய மேடையில், மிகப்பெரிய ஆளுமைகளால் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
-****************************************
நூலின் பெயர்: Thirukkural Translations in World Languages
********************************
இனி தோராயமாக 80, 170, 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது  என்று கூறவேண்டியதில்லை.  சரியாக , ஆதாரத்துடன் கூறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
*****************************************
உலக அளவில் திருக்குறள் பரப்புரையில் இந்தப்பணி மிகப்பெரிய பங்களிப்பாக, அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறோம். இதை ஒரு பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளின் வழியே  பெரும் நிதி ஒதுக்கீட்டில் செய்திருக்கவேண்டிய முக்கியத் திட்டம். 
**********************************
சாமானிய மனிதர்களாக எவ்வித நிதியையும் திரட்டாமல், பெரும் மனித ஆற்றலும் இல்லாமல் உலக அளவில் சமூக வலைத்தளங்களின் உதவியுடன், சொந்த செலவில், ஆங்காங்கே முகம்தெரியாத திருக்குறள் ஆர்வலர்கள் அவர்கள்  பொறுப்பேற்று வாங்கி அனுப்பியுள்ளதை வைத்து திட்டத்தை முடித்துள்ளோம். . நூல்களின் விலையை விட சென்னை அனுப்ப ஆகும் செலவு பலமடங்கு அதிகமானது.  ஐந்து ஆண்டுகள் தொடர் கூட்டம் போட்டு நேரத்தை பெருமளவு முதலீடு செய்து செய்துமுடிக்கப்பட்டுள்ளது.
************************************
தமிழில் பிறந்தநாள் பாடலை தமிழுலகிற்கு கொண்டுவந்ததை அடுத்து இது ஒரு முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன். 
*********************************
தமிழ் மொழி வளர்ச்சியில், திருக்குறள் வாழ்வியல் நூல் பரவலாக்களில், உங்கள் அனைவரின் ஆதரவோடு, வாழ்த்துகளோடு விரைவில் பொங்கல் திருநாளில் நூல் பொதுவெளியில் கிடைக்கும். தரவுகள் பகிரப்படும்.
**********************
அன்புடன் வலைத்தமிழ் சா.பார்த்தசாரதி

Thirukkural Translations in World Languages - என்ற பெயரில் திருக்குறள் எத்தனை மொழிகளில்      மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களுடன் தயாராகி வருகிறது.

திருக்குறள் இதுவரை எத்தனை இந்திய, வெளிநாட்டு மொழிகளில் வெளிவந்துள்ளது ?  50 ஆண்டுகளுக்கு மேல் , பல மொழிகளில் , பல நாடுகளில் ஆங்காங்கே வெளியிடப்பட்ட பல மொழிபெயர்ப்புகள் பல இன்று பயன்பாட்டில் இல்லை.

தமிழில் "இருப்பதை பரப்புவதும், இல்லாததை உருவாக்குவதும்" என்ற நோக்கில் பயணிக்கும் வலைத்தமிழ் குழு, 2018 ஆம் ஆண்டு இதை தொகுக்க முகநூலில் ஒரு பதிவு போட்டது. அதன் பின்பு 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முறையான ஒரு குழு உருவாக்கப்பட்டு இன்று ஐந்து ஆண்டுகளில் பல நிலைகளைக் கடந்து அவை முறையாக திருக்குறள் மொழிபெயர்ப்பு அச்சுப்பிரதிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு தொகுக்கப்பட்டு, முழு விவரங்களுடன் ஒரு நூலாக ஆங்கிலத்தில் வெளியிட தயாராகிவருகிறது.  ஒரு நூலாகக் கொண்டுவருவதில் ஏற்படும் நேரம் என் பல நாட்களை விழுங்கிவிட்டது.  குழுவின் உதவியால் ஓரளவு நிறைவுப்பகுதிக்கு வந்து வடிவமைப்பு சென்றுகொண்டுள்ளது. வலைத்தமிழ் , வள்ளுவர் குரல் குடும்பம்   தன்னார்வலர்கள் இணைந்து இதை முழுமையாக்கியுள்ளனர். 

இக்குழுவில் பயணிக்கும்  மருத்துவர் அஷ்ரப் ஒரு வியப்புக்குரிய திருக்குறள் ஆர்வலர், ஆய்வாளர்.  புதுடெல்லியில் கால்நடை மருத்துவத்துறையில் பெரும் பொறுப்பில் இருந்துகொண்டு திருக்குறளில் அவர் காட்டிய ஆர்வம் எங்களை பிரமிக்கவைத்தது. திருக்குறள் மொழிபெயர்ப்பு என்றால் அவரிடம் இதுகுறித்து  தகவல் இருக்கும் என்று சொல்லுமளவு பல ஆண்டுகளாக இதில் ஆர்வம் கொண்டு ஆழமாகப்  பயணித்து வருபவர். அவரை இக்குழுவில் இணைத்து , அவரின் பல ஆண்டுகள் விவரங்களையும் ஒருங்கிணைந்தது திட்டம் முழுமைபெற வாய்ப்பாக அமைந்தது. நூல்களைத் திரட்ட உதவிய அனைவருக்கும்  நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்க்கப்பட ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இதில் உள்ளது


திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்தான ஒரு நம்பகமான ஒரு அறிக்கையாக இந்த நூல் இருக்கும் என்று நம்புகிறேன்.அனைத்து நூல்களும் இன்னும் முழுமையாகக் கையில் கிடைத்துவிடவில்லை என்றாலும், அவை அடையாளம் காணப்பட்டுள்ளது, தரவுகள் திரட்டப்பட்டுள்ளது.   நூல் வெளிவந்ததும், தரவுகள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படும்.

திருக்குறளை தேசிய நூலாகவும், யுனெசுகோ அங்கீகாரத்திற்கு கொண்டுசெல்ல மொழிபெயர்ப்பு விவரங்களைக் கொண்ட இந்த ஆங்கில நூல் ஒரு கருவியாக இருக்கும்.    மேலும், ஐக்கிய நாடுகள் சபை, யுனெசுகோ உறுப்பு நாடுகளின் அலுவல் மொழிகளில் எவை இன்னும் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்ற முழு தரவுகளுடன் வருகிறது.

மேலும், ஒரு குழு அமைத்து தமிழ்ச்சங்கங்கள் செம்மொழி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஒரு சில ஆண்டுகளில் உலக மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இதில் உள்ளது.

முக்கியமான மூன்று ஆளுமைகள் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளனர்.  இது வழக்கமான நூலாக இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெறும் திருக்குறள் மொழிபெயர்ப்பு விவரங்களைத் திரட்டி வழங்கும் நம்பகமான ஆவணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மேலும், அச்சில் இல்லாத முக்கிய மொழிபெயர்ப்புகளை மீண்டும் அச்சில் கொண்டுவரவும் ஆர்வமுள்ள அமைப்புகளுடன் இணைந்து திட்டம் வகுக்கப்படும்.

வரும் திருவள்ளுவர் திருநாளில் இந்நூல் மக்களுக்கு மிகப்பெரிய நிகழ்வில், மிகப்பெரிய மேடையில், மிகப்பெரிய ஆளுமைகளால் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.-


நூலின் பெயர்: Thirukkural Translations in World Languages


இனி தோராயமாக 80, 170, 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது  என்று கூறவேண்டியதில்லை.  சரியாக , ஆதாரத்துடன் கூறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

உலக அளவில் திருக்குறள் பரப்புரையில் இந்தப்பணி மிகப்பெரிய பங்களிப்பாக, அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறோம். இதை ஒரு பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளின் வழியே  பெரும் நிதி ஒதுக்கீட்டில் செய்திருக்கவேண்டிய முக்கியத் திட்டம்.

சாமானிய மனிதர்களாக எவ்வித நிதியையும் திரட்டாமல், பெரும் மனித ஆற்றலும் இல்லாமல் உலக அளவில் சமூக வலைத்தளங்களின் உதவியுடன், சொந்த செலவில், ஆங்காங்கே முகம்தெரியாத திருக்குறள் ஆர்வலர்கள் அவர்கள்  பொறுப்பேற்று வாங்கி அனுப்பியுள்ளதை வைத்து திட்டத்தை முடித்துள்ளோம். . நூல்களின் விலையை விட சென்னை அனுப்ப ஆகும் செலவு பலமடங்கு அதிகமானது.  ஐந்து ஆண்டுகள் தொடர் கூட்டம் போட்டு நேரத்தை பெருமளவு முதலீடு செய்து செய்துமுடிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பிறந்தநாள் பாடலை தமிழுலகிற்கு கொண்டுவந்ததை அடுத்து இது ஒரு முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன்.

தமிழ் மொழி வளர்ச்சியில், திருக்குறள் வாழ்வியல் நூல் பரவலாக்களில், உங்கள் அனைவரின் ஆதரவோடு, வாழ்த்துகளோடு விரைவில் பொங்கல் திருநாளில் நூல் பொதுவெளியில் கிடைக்கும். தரவுகள் பகிரப்படும்.

அன்புடன் வலைத்தமிழ் சா.பார்த்தசாரதி

 

by Kumar   on 12 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது. பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.