உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் உணவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
நாட்டிலுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் விலையில் மாதந்தோறும் நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டமான உணவு பாதுகாப்பு மசோதா கடந்த மாதம் 26 ஆம் தேதி மக்களவையிலும், இந்த மாதம் 2 ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். இதனால் உணவு பாதுகாப்பு மசோதா, சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் ரத்தாகியுள்ளது.
|