LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தேர்தல் சமயத்தில் போலியான செய்திகளை அனுமதிக்கமாட்டோம்! சமூக வலைத்தளங்கள் உறுதி!

தேர்தல் சமயத்தில் போலியான செய்திகளை பரப்புவது, வாக்காளர்களை இலக்கு வைத்து பிரசாரம் செய்வது போன்ற நடவடிக்கைகளை தங்களது தளத்தில் அனுமதிப்பதில்லை என  சமூக வலைத்தள நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்துக்கு உறுதியளித்துள்ளன.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் உண்மையற்ற செய்திகளை பரப்புவதையும், வாக்காளர்களை இலக்கு வைத்து பிரசாரம் செய்வதையும் தடுக்கும் வகையிலான முன்னோட்ட முயற்சி கர்நாடக பேரவைத் தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்டது. அது ஓர் தொடக்கம் மட்டுமே ஆகும்.தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிúஸாரம் ஆகிய மாநிலங்களில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்த முன்னோட்ட முயற்சி மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்படும்.

இதற்காக, கூகுள், முகநூல், சுட்டுரை ஆகிய நிறுவனங்களின் பிராந்திய மற்றும் பகுதிசார் தலைமை அதிகாரிகளுடன் மூத்த துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை தடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் சூழலைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு செய்தியையும் தங்களது தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அந்த நிறுவனங்கள் உறுதி அளித்தன. அந்தத் தணிக்கை நடவடிக்கை வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பிருந்தே அமல்படுத்தப்படும் என அவை தெரிவித்துள்ளன.
அந்த 48 மணி நேரமானது, தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்காளர்களே ஆழ்ந்து யோசித்து தீர்மானிக்க அளிக்கப்படும் அவகாசமாகும்.  இவ்வாறு ஓ.பி. ராவத் கூறினார்.

by Mani Bharathi   on 01 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.