LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்பு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து மாற்றுத்திறானிகள் நல ஆணையம் அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட அரசாணை: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம். மேலும் பணித்தளத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் வேலைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. பணித்தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்கும் பணி, குழந்தைகளை பராமரிக்கும் ெபாறுப்பாளர், குழந்தைகளுக்கும் ஒரு கூடுதல் உதவியாளர் அமர்த்தலாம். பணித்தளப் பொறுப்பாளர் முன்அளவீட்டினை மேற்கொள்ள உதவுதல், 100க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் இருப்பின் ஒரு மாற்றுத்திறனாளியினை பணித்தள பொறுப்பாளருக்கு உதவியாளராக அமர்த்தலாம்.

பணித்தளத்தில் அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல் (இலை, தழைகள் மற்றும் சிறு மரங்கள்) ஆழப்படுத்தும் தளத்தில் தண்ணீர் தெளித்தல், மண்வெட்டி, கடப்பாறை போன்றவற்றை கொண்டு கரைகளில் கொட்டப்படும் மண்களை சமப்படுத்தல், கரைகளை சமன்படுத்துதல், உடல் உழைப்பினை மேற்கொள்ளத் தகுதியுள்ள மாற்றுத்தினாளிகளை மண்வேலை, மண்மூடுதல், நீர்பாய்ச்சல், மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல் மற்றும் அகழி அமைத்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம். பணித்தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களை மேலே கூறப்பட்டுள்ள சிறப்பு பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும். இவற்றை துணைவட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதிபடுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவது, ஊதியம் அளித்தது குறித்த விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும்.

மேற்கூறிய நடைமுறைகளை ஊராட்சி அளவில் பணித்தளப்பொறுப்பாளர் மற்றும் ஊராட்சி செயலரும், வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்வதோடு மாவட்ட அளவில் முறையாக கண்காணிக்க வேண்டும். என திட்ட இயக்குநர், மாவட்ட ஊரகவளர்ச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்நடைமுறையினை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர் இத்திட்ட செயல்பாட்டில் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்திட சிறப்பு முகாம் அமைத்து விடுபட்ட நபர்களை இத்திட்டத்தில் இணைத்து வேலை அடையாள அட்டைகளை வழங்கிடவும், அடையாள அட்டை வழங்கப்பட்ட நபர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

by Mani Bharathi   on 09 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.