வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி உள்ளதால் ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒடிசா தலைமை செயலாளர் ஆதித்ய பிரசாத் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை விடுவது எனவும், மற்ற பகுதிகளுக்கு நிலைமையை ஆய்வு செய்த பிறகு முடிவு செய்யலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசாவில் புயலால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அத்துடன் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்
|