|
|||||
நீதிமன்றத்தை நாடவிருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வேண்டுகோள்! |
|||||
நீதிமன்றத்தை நாடவிருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கேட்டுக் கொண்டு உள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் வரலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறியுள்ளது. இது குறித்து, செய்தியாளர்களிடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது: கடந்த 2 நாட்களாக சபரிமலையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். சபரிமலை புனித பூமியாகும். அதனை கவலர பூமியாக்க பெண்கள் நினைக்கக் கூடாது. அப்படி கலவர பூமியாக்க நாங்கள் விட மாட்டோம். தற்போது சபரிமலையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளால் மற்ற மாநில பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம். சபரிமலை நிகழ்வுகள் குறித்து கேரள உயர்நீதிமன்றத்திலும் அறிக்கையை ஒப்படைப்போம். தேவசம் போர்டின் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் விசாரணையின் போது தேவசம் போர்டு இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவிக்கும். நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு பத்மகுமார் கூறினார். |
|||||
by Mani Bharathi on 19 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|