இந்தியாவின், முதல் பெண் தலைமை தகவல் ஆணையராக தீபக்சாந்து(64) நேற்று பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
இந்தியாவில், கடந்த 2005 ம் ஆண்டு, தகவல் பெரும் உரிமை சட்டம் நடை முறை படுத்தப்பட்டது, முதல் தகவல் ஆணையராக, சத்யானந்த மிஸ்ரா பதவி ஏற்றார். சத்யானந்த மிஸ்ராவின் பதவி காலம், நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, புதிய தகவல் ஆணையராக, தீபக்சாந்து, நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பெற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் அவர் நிருபர்களிடையே கூறியதாவது, "தகவல் ஆணையத்தின் நிலுவையில் உள்ள சுமார் 30,000 வழக்குகளை விரைந்து முடிப்பதுதான் தனது முதல் வேலை" என அவர் தெரிவித்தார். தீபக்சாந்துவின் பதவி காலம் அடுத்த ஆறு மாதத்திற்குள் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
|