LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஜெர்மனியில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற இந்தியப் பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் ஆர்டர்.

ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்ற இந்தியப் பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

 

ஜெர்மனியின் நுரெம்பெர்க் நகரில் சர்வதேசப் பொம்மை கண்காட்சி கடந்த ஜனவரி 30-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 65 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன.

 

அதிக வரவேற்பு

 

மொத்தம் 5 நாட்களாக நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் இந்திய நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஏராளமான ஆர்டர்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அதிகளவில் ஆர்டர்கள் கொடுத்துள்ளன. இதுகுறித்து நொய்டாவை தலைமையகமாகக் கொண்ட லிட்டில் ஜீனியஸ் டாய்ஸ்நிறுவன தலைமை செயலதிகாரி நரேஷ்குமார் கவுதம் கூறும்போது, “ஜெர்மனியில் நடந்த கண்காட்சியில் சீன பொம்மைகளுக்கு எதிரான மனப்பான்மை நிலவியது. அதேநேரம் இந்தியப் பொம்மைகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. அந்த வகையில் எங்கள் நிறுவன பொம்மைகளுக்கு அதிக ஆர்டர் கிடைத்துள்ளது.

 

இந்த ஆர்டர்களை விநியோகம் செய்வதற்கு உற்பத்தியை அதிகரிக்க வேண்டி உள்ளது. இதன்மூலம் சர்வதேசச் சந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். மத்திய அரசு தரக்கொள்கையைக் கட்டாயமாக்கியது மற்றும் சுங்க வரியைக் குறைத்தது ஆகிய காரணங்களால் இந்தியப் பொம்மை உற்பத்தித் துறை வேகமாக வளர்ந்து வருகிறது” என்றார்.

கடந்த 2014-15-ல் இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி ரூ.1,300 கோடியாக இருந்தது. இது 2022-23-ல் ரூ.2,700 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 15 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.