LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

 

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட பிற்கால சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். அதை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட விலைமதிக்க முடியாத பழங்கால சிலைகள் அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு அடுத்தடுத்து கடத்திச் செல்லப்பட்டது. கோடிக்கணக்கான பணத்துக்கு அதைவிற்று பணம் சம்பாதித்ததாக சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் கபூர்வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
அவரால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சிலைகள் உட்பட ஏராளமான சிலைகள் தற்போது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுகிறது.
ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்ட சிலை
இந்நிலையில், சுபாஷ்கபூரால் தமிழக கோயில் ஒன்றிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (பாம்பின் மேல் நடனமாடும் கிருஷ்ணர்) உலோகச் சிலை ஒன்று தற்போது அமெரிக்காவில் உள்ள கலைக்கூடம் ஒன்றில் இருப்பதை தமிழக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த சிலை காளிங்கன் என்ற 5 தலை பாம்பின் மேல் கிருஷ்ணர் நடனமாடுவதைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ம்ஆண்டு சிலை கடத்தல் மன்னன்சுபாஷ் கபூரால் கடத்தி செல்லப்பட்டு, ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.சோழர்காலமான 11 - 12ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த சிலை தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயிலில் திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபிசைலேஷ்குமார் யாதவ், ஐஜிதினகரன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.  விலை மதிப்புமிக்க இந்த நடனமாடும் கிருஷ்ணர் சிலையை அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட பிற்கால சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். அதை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட விலைமதிக்க முடியாத பழங்கால சிலைகள் அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு அடுத்தடுத்து கடத்திச் செல்லப்பட்டது. கோடிக்கணக்கான பணத்துக்கு அதைவிற்று பணம் சம்பாதித்ததாக சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் கபூர்வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

அவரால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சிலைகள் உட்பட ஏராளமான சிலைகள் தற்போது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுகிறது.

ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்ட சிலை

இந்நிலையில், சுபாஷ்கபூரால் தமிழக கோயில் ஒன்றிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (பாம்பின் மேல் நடனமாடும் கிருஷ்ணர்) உலோகச் சிலை ஒன்று தற்போது அமெரிக்காவில் உள்ள கலைக்கூடம் ஒன்றில் இருப்பதை தமிழக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிலை காளிங்கன் என்ற 5 தலை பாம்பின் மேல் கிருஷ்ணர் நடனமாடுவதைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ம்ஆண்டு சிலை கடத்தல் மன்னன்சுபாஷ் கபூரால் கடத்தி செல்லப்பட்டு, ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

சோழர்காலமான 11 - 12ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்திச் சென்றுள்ளனர்.இந்த சிலை தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயிலில் திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபிசைலேஷ்குமார் யாதவ், ஐஜிதினகரன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். 

விலை மதிப்புமிக்க இந்த நடனமாடும் கிருஷ்ணர் சிலையை அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

by Kumar   on 07 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.